தொடர்கள்

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண அரசியல் யாப்பு அறிஞரும், முன்னாள் அமைச்சருமான ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை “CONSTITUTION MAKING IN MULTI – CULTURAL SOCIETIES : SOME INTERNATIONAL EXPERIENCES” ஒரு சிறு நூலின் அளவுடையது. 74 பக்கங்களைக் கொண்ட இந் நீண்ட கட்டுரையின் முதல் 9 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தழுவி இத் தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.  ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : […]

தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைக் கொண்டு வாழ முடியாத நிலைமையில் போராட்டங்கள் ஆரம்பமாகும் என்று அனுபவங்கள் கூறுகின்றன. தொழிலாளர் எழுச்சி என்பது விவசாயிகளின் வளர்ச்சியையும் போராட்டங்களையும் பார்க்கிலும் வித்தியாசமானதாகும். தொழில் வழங்குநர்களான முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகக் கட்டமைப்பாக தொழிலாளர் வர்க்கமும் அவர்களின் போராட்டங்களும் காணப்படுகின்றன. தொழிலாளர் வர்க்கமானது இலங்கையின் அரச காலத்தில் இருந்து வந்ததாக காணப்படுகின்றது. ஆனாலும் அன்றைய நிலைமை சாதிய ரீதியாகவே காணப்பட்டது. காலனித்துவ […]

மே 2009  என்பது மிக முக்கியமான ஒரு காலப்புள்ளி; தமிழர்கள் எல்லோருக்கும். ஒரு யுத்த காலத்தின் முடிவையும், பல சகாப்தங்களாக யுத்தம் விதைத்த அளவிட முடியாத மொத்த அழிவுகளையும் கணக்கில் எடுக்கும் காலம்; பலருக்கு கனவுகளில் இருந்து விழித்தெழும் காலம். சிலருக்கு, எதிர்பார்க்காத ஒரு தோல்வியின் முழு வீச்சையும் ஆரத்தழுவி கால அசைவின் போக்கில் கரைந்து போகும் காலம்; அது முழு நம்பிக்கையும் புதைக்கப்பட்ட அசைவற்ற மனநிலை. ஆனால், கடந்த […]

அறிமுகம்  இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் […]

இலங்கையின் வடபகுதியில் பண்டைய காலத்தில் நாகர் வாழ்ந்தமை மற்றும் நாக வழிபாடு செய்தமை தொடர்பான சான்றுகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு நாக இராச்சியம் சிறப்புற்று விளங்கியதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. இங்கு நாகதீபம் எனும் நாக இராச்சியம் இருந்ததாகவும், இங்கிருந்த மகோதரன், சூளோதரன் எனும் இரு நாக மன்னர்களின் மணிமுடி தொடர்பான பிணக்கைத் தீர்ப்பதற்காக புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. […]

ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் – போராட்டத்தில் இணைந்துகொள்ள – புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 1981 இல் யாழ். நூலக எரிப்பும், 1983 இல் ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காரணங்களாய் அமைந்தன. ஆனால் யாழ். […]

தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர், பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் 1983 ஆம் ஆண்டு, நான் வோற்ரன் வணிகப் பள்ளியில் பட்டம் பெற்றதும், நிதியியல் சார்ந்த துறையிலேயே பணியாற்ற விரும்பினேன். தொழில்சார் வாழ்க்கையின் முதலாவது காலடியை சேஸ் மான்ஹாட்டன் வர்த்தக வங்கியிலிருந்து தொடங்கினேன். அமெரிக்காவில் சில வருடங்கள் பணியாற்றி விட்டு, ஆசியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவதே எனது இலக்காக இருந்தது. அந்த வங்கியின் கடன் வழங்கும் துறையில் நிதிப் பகுப்பாய்வாளராக […]

தமிழ்க் காப்பிய அமைப்பில் சிலப்பதிகாரம் இன்றளவும் தோன்றிய காப்பியங்கள் யாவற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற தன்மையினை உடையதாகின்றது. அவ்வேறுபட்ட தன்மையே இன்று அதனது சிறப்புத் தன்மையாகப் போற்றப்படுகின்றது. அச்சிறப்புத் தன்மைக்கான ஏந்துதல்கள் எவ்வகையில் இளங்கோவடிகளுக்குக் கிடைத்திருக்கும் என்பனவான எண்ணங்கள் தோன்றுதல் இயல்பேயாம். அவ் வகையில் சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகளுக்கான காரணங்கள் இளங்கோவடிகள் காப்பியமியற்றிய காலச் சூழலில் இருந்தே கிடைத்தனவாகக் கொள்ளுதலே பொருத்தமாகவிருக்கும். அவர் காலச் சூழலில் நிலவிய சமயங்களின் தாக்கம் பல வகையிலும் […]

தொடக்கக் குறிப்புகள் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் இன முரண்பாட்டின் கதையாடலில் சில முக்கியமான வரலாற்றுப் புள்ளிகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறுபட்ட விளைவுகளையும் உரையாடல்களையும் ஏற்படுத்தின. அவ்வாறான ஒரு வரலாற்றுப் புள்ளியே சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையில் தேசத்தின் பிதா என்று அழைக்கப்படும் டி.எஸ். சேனநாயக்கவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள். இவை அபிவிருத்தியின் பெயரால் முன்னெடுக்கப்பட்டன. நெற்பயிர்ச் செய்கையை அதிகரிப்பது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது, நிலமற்ற மக்களுக்கு நிலத்தை […]

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன றெஜி சிறிவர்த்தன அவர்கள் 2000 ஆம் ஆண்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றின் ஆங்கிலத் தலைப்பு பின்வருமாறு அமைந்தது: “THE BRACE GIRDLE AFFAIR IN RETROSPECT: CONTRADICTIONS OF IMPERIALISM, OF THE POST COLONIAL STATE AND OF THE LEFT” மேற்படி கட்டுரையின் மையப் பொருளாக தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் (RIGHTS OF THE INDIVIDUAL AND THE […]

தொழில் முனைவோர் தமது எண்ணங்களை வணிகப்படுத்தி பணம் பண்ணுகிறார்கள். அள்ளப்படும் குப்பைகள் பெறுமதிமிக்க கட்டிடப் பொருட்களாகவும் எரிபொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. மைக்குறோவேவ் உலைகளும், தீக்குச்சிகளும் இன்னோரன்ன தற்செயலான கண்டுபிடிப்புகளும் மிகப்பெரிய தொழிற்கூடங்களை உருவாக்கிவிட்டன. உபத்திரவமெனக் கருதப்பட்ட பசையை யாரோ ‘சுப்பர் குளூ’ (superglue) என விற்கத் தொடங்கிவிட்டார்கள். ஒட்டவில்லை என விலக்கிவைத்த பசையை இன்னொருவர் ‘போஸ்ற் இற்’ (Post-It) குறிப்புக் கட்டுகளாக விற்கிறார். தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட அன்டிபயோட்டிக்ஸ், இன்சுலின் போன்ற மருந்துகள் […]

அறிமுகம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்ற, வளிமண்டல வெப்பநிலை அளவீடு செய்கின்ற உலக வளிமண்டல திணைக்களத்தின் தர நிர்ணயத்திற்கு உட்படுத்தப்பட்ட வகையிலான வெப்பமானிகள் மூலமே இலங்கையிலும் வெப்பநிலை அளவீடு செய்வதற்கான வெப்பமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் ஈர மற்றும் உலர் வெப்பமானிகள், மண் வெப்பமானிகள், உயர்வு மற்றும் இழிவு வெப்பமானிகள் மற்றும் தன்னியக்க வெப்பநிலை பதிவுக் கருவி போன்றவற்றை பயன்படுத்தி வெப்பநிலை பற்றிய அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் […]

இலங்கைச் சோனகத் தலைமையானது, ஒரு தனித்துவமான இலங்கை-அரபு அடையாளத்தை (Ceylonese – Arab identity) வளர்ப்பதற்கான நோக்கில், இலங்கைச் சோனகர் மத்தியில் வளர்ந்துவந்த பொது விசுவாசத்தை புறக்கணித்தது. அமீர் அலி குறிப்பிட்டுள்ளபடி, இந்த நூற்றாண்டின் (இருபதாம்) தொடக்கப் பகுதியில், இலங்கைச் சோனக உயர் குழாத்தினர், எகிப்துக்குத் திரும்புவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த, நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளரான அரபி பாஷாவின் மீது ஒருவித நாடக விசுவாசத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தனர் (அசாத் 1993: 42-43). […]

பழப்பயிர்களின் பல்வகைமை பனம்பழம் அரிய சொத்தாகும். வேறுபட்ட போகங்களில் பழங்களைத் தரும் பனை மரங்கள் எம் பிரதேசத்தில் பரந்து காணப்படுகின்றன. அவற்றின் கிழங்குகளின் தன்மையிலும், கள் மற்றும் கருப்பனி என்பனவற்றின் பிரிகை அளவுகளிலும் மாறுபாடு உண்டு. கற்பகத் தருவான பனைமரத்தின் பயன்பாடுகள் அநேகம். முக் கனிகளான மா, பலா, வாழை என்பனவற்றின் பயன்பாடும் எம் பிரதேசத்தில் கணிசமாக உண்டு. மா மரத்தில் ஒட்டுதல் மூலம் உருவாக்கப்படும் கன்றுகள் தாய் தாவரத்தின் […]

இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY  1750 […]

ஹண்டி ஞாபகார்த்த நூலகம் (பரி.யோவான் கல்லூரி) 1818 ஆம் ஆண்டு C M S Mission மதப் பணிக்காக இலங்கைக்கு வருகைதந்த வண. ஜோசப் நைட் (Rev. Joseph Knight) அவர்கள் நல்லூரில் வீடு ஒன்றைக் கொள்வனவு செய்து தனது மதக் கல்விப் பணியைத் தொடர்ந்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் பரி. யோவான் கல்லூரி (St. John’s College) உருவாகுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.  வண. ஜோசப் நைட் அவர்கள் நல்லூர் […]

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது பயணத்தின் போது, 1493 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, தாம் புதிதாகக் கண்டறிந்த கரீபியன் தீவு ஒன்றுக்கு சாண்டா மரியா டி குவாடெலூப் என்று பெயரிட்டார். கப்பல்கள் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் படகுகளில் நன்னீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வருவதற்குப் […]

மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது.  இடப்பெயராய்வு (Toponomastic) ஆட்பெயராய்வு (Anthrophonomastic) இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic) சமூகப் பெயராய்வு (Socio Onomastic) […]

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையிலும் மேற்படி நிலப்படத்தில் உள்ள வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். போக்குவரத்தும் வீதிகளும் ஏற்கெனவே யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் தூர்சியின் நிலப்படம் தொடர்பாக எழுதியபோது, அக்காலத்தில் கட்டளையகத்தில் இருந்த வீதிகளைப் பற்றியும் விளக்கினோம். உண்மையில் தூர்சியின் நிலப்படம் வரைந்த காலத்துக்கும் […]

இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன.  நூலாசிரியர்: ஒய்வின்ட் புக்லறூட் […]

இலங்கை முஸ்லிம்களின் மற்றொரு உப மரபினமாக போஹ்ராக்கள் விளங்குகின்றனர். ‘போஹ்ரா’ (Bohras) என்ற சொல்லின் பொருள் ‘வர்த்தகர்’ என ஒரு ஆய்வுத்தகவல் குறிப்பிடுகிறது. அவர்களது சமூக வாழ்வியலுக்கும் இந்தச் சொல்லுக்குமான தொடர்பு உண்மையில் ஆழமானது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் ‘போஹ்ரா’ என்பது ஒரு காரணப்பெயராகவே இந்த சமூகத்தினருக்கு சூட்டப்பட்டிருப்பதை அவர்களது உலக வர்த்தகச் செயல்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. உலகின் பல பாகங்களிலும் சிறப்பான முறையில் வர்த்தகம் மேற்கொள்கின்ற ஒரு சமூகப்பிரிவினராகவே […]

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்”-திருக்குறள்- மு. வரதராசனார் விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். ஓர் ஆரம்ப நிறுவனத்தை அமைக்க முதலில் ஓர் சிந்தனை (Idea) தேவை. இண்டாவது அந்தச் சிந்தனையை உற்பத்தியாக உருவாக்கும் தகுதி கொண்ட குழுவினர் (People/Team) தேவை. பின்பு அந்த உற்பத்திக்கான சந்தை (Market) அவசியம். இவை […]

உலக நாடுகளின் எதிரி சீனா என அடையாளம் காட்டி அனைத்துத் தேசங்களும் அதனை நிராகரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த ஐக்கிய அமெரிக்கா அண்மையில் மக்கள் சீன ஜனாதிபதியைத் அதனது மண்ணுக்கே வரவேற்று உரையாட வேண்டி இருந்தது. காலனித்துவ ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்து ‘உலகின் நோய்’ என்ற அடையாளத்தை இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறு வரை பெற்றிருந்த சீன தேசம் இன்று ‘உலகின் முதல் நிலை வல்லரசு’ எனும் அந்தஸ்துடன் திகழும் மேலாதிக்கவாத […]

ஆங்கில மூலம் : டேவிட்.ஆர். கமரன் கனடா ஒரு பாராளுமன்ற ஜனநாயக முறையை உடைய நாடு. கனடாவின் அரசுத் தலைமையாளாக பிரித்தானியாவின் எலிசபெத் II அரசி விளங்குகிறார். அவரின் பிரதிநிதியான ஆளுநர் நாயகம் சமஷ்டி அரசின் பிரதிநிதியாக விளங்குவார். அவ்வாறே மாகாணங்களில் ஆளுநர்களும் அரசியின் பிரதிநிதியாக உள்ளனர். கனடாவின் புவி இடப்பரப்பு 9 மில்லியன் சதுர கிலோமீற்றர் ஆகும். இப் புவிப்பரப்பு மூன்று நேர வலயங்களை (TIME ZONES) உள்ளடக்கியது. இந்நாட்டின் […]

உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க […]

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]

வாழ்வாதாரத் தொழில் முனைவுகளில் பெரிதும் விரும்பப்படுவதும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் கூடியதுமான தொழிற்துறையாக கைத்தொழிற்துறை இருந்து வருகிறது. வளர்ச்சியடைய விரும்பும் எந்தப் பொருளாதாரமும் கைத்தொழிற்துறையின் மீது வளர்ச்சியை ஏற்படுத்தினால் தான் அது நிலைபேறுடைய பொருளாதார வளர்ச்சியாக அமையும். இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையிலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான 7 பிரதான பகுதிகளில், நான்கு துறைகள் கைத்தொழிற் துறை சார்ந்தே காணப்படுகின்றன. பின்வருவன அந்த 07 பிரதான பகுதிகள் : உணவுப் பாதுகாப்பு […]

கடந்த கட்டுரையில் கறவை மாடு வளர்ப்பின் போது தோன்றும் இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சனைகளை ஆராய்ந்திருந்தேன். இந்தக் கட்டுரையும் அதன் நீட்சியே. எனினும் தீர்வுகளை மையப்படுத்திய கட்டுரையாக அமைகிறது. கறவை மாடுகள் சினை பிடிக்காமைக்கும் ஏனைய இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் வெப்ப அயர்ச்சி (Heat stress) மிக முக்கியமான ஒரு காரணியாகும். அண்மைக் காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முன்பு இருந்ததை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது. உலக […]

ஆனைக்கோட்டை முத்திரை தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகள் சிலவற்றில் முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்த சில எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்குப் புதிய வாசிப்பும், புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வந்திருப்பதைக் காணமுடிகின்றது. முத்திரையில் காணப்படும் எழுத்துக்களுக்கு அறிஞர்கள் வேறுபட்ட வாசிப்புக்களும், விளக்கங்களும் கொடுத்து வருவது அவர்களுக்குரிய சுதந்திரமாகவே நோக்கப்படும். ஆனால் அவற்றின் எழுத்துக்களை மாற்றிவிட்டு அதற்கு புதிய வாசிப்புகளும் விளக்கங்களும் கொடுப்பது திட்டமிட்ட வரலாற்றுத் திரிபாகவே பார்க்கப்படும். இத் தவறுகளை ஊடகங்கள் மூலம் […]

மலையக தமிழ் மக்களின் இந்த வரலாற்றுத் தொடர் இந்த அத்தியாயத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. எனினும் அவர்களது வரலாறு அதன் பின்னரும் இந்த அத்தியாயத்திலிருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அது புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்ற கதையைப் போல ஒரு துன்பியல் வரலாறு. நான் இந்த வரலாற்று தொடரை எழுத முற்பட்டபோது இதற்கு என்ன தலைப்பை இடலாம் என்று பெரிதும் சிந்தித்தேன். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 74 […]

இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள் அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள்  அல்ல. இலங்கை சிலசமயங்களில்  தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள்   இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது.  அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) […]

அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண […]

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே, குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனித இனக்குழு ஒன்றின் சகல முன்னெடுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும், உணவுத்தேடலுக்கான உழைப்பிலும், ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியே பெண்ணின் செயற்பாடுகள் இருந்துள்ளன. “வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12) எனும் புறநானூற்றுப் பாடல் வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. […]

1 1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் அராலியில் இருந்தேன். அது என்னுடைய தாயாருடைய ஊர். நூலகம் எரிந்தபோது கடலில் வீழ்ந்த தீச்சுவாலை காரணமாக அராலிக்கடல் தீப்பற்றி எரிவதாக சிறுவனான நான் நினைத்துக்கொண்டேன். அது என் முதற் பீதிகளில் ஒன்றாய் அமைந்தது. அதற்குப் பின்னால் அடுக்கடுக்காய் பல விடயங்கள் நடந்தேறின. நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. சேரன் தனது ‘இரண்டாவது சூரியோதம்’ கவிதைத் தொகுதியில், […]

திரட்டுகள்

பௌத்த சிற்பங்கள் இலங்கையில் உன்னதமான வேலைப்பாடுகளான பௌத்த சிற்பங்கள் பெருந்தொகையிலே காணப்படுகின்றன. ஆதியில் தர்மச்சக்கரம், புத்தர்பாதம், போதிமரம் என்பனவே வழிபாட்டுச் சின்னங்களாக விளங்கின. ஆயினும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவ வழிபாடு இந்திய சமயங்களிடையில் வழமையாகிவிட்டது. இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டளவில் புத்தர் படிமங்களை வழிபடுவது வழமையாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் படிமங்கள் கிபி. 300-500 வரையான காலப்பகுதிக்குரியனவாகத் தெரிகின்றன. கந்தரோடை, சுண்ணாகம், வல்லிபுரம், நவக்கீரி ஆகியவிடங்களிற் புத்தர் படிமங்கள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பௌத்த சமயந் […]

திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, முசிறி, துறையூர், நாமக்கல், மதுரை, அறந்தாங்கி போன்ற தமிழக மாவட்டங்களில் காணப்பட்ட பொருளாதார-சமூக ஏற்றத்தாழ்வுகள், நில உரிமையாளர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்கு முறைகள், வறுமை போன்றவை வாட்டி வதைத்த காலப் பகுதியில், ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்னர், அவற்றிலிருந்து விடுபட வழி தேடி இலங்கை, மலையகம் நோக்கிப் பயணித்தவர்கள் இன்று வரை வலியோடு வாழ்வுக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த […]

ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன (சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை […]

பதிவுகள்

பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். […]

காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க […]

தமிழிசையின் செல்நெறி, சுகமான ஒரு பயணம் அல்ல. மக்களின் வாழ்வியலுக்குள் இலக்கியச் செழுமைக்குள் புதைந்திருந்த தமிழிசையின் தனித்துவமான அடையாளங்கள், காலவெளியில் கண்டுவந்த மாற்றங்களும் படிமலர்ச்சியும், பண்பாட்டு அரசியல் மேலாண்மைகளுக்குள் எதிர் கொண்ட சவால்கள், தன்னைத் தகவமைத்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் என்பன தமிழர் வாழ்வியல் வரலாறாகும்; தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுமாகும். இந்த வகையில் தமிழிசையின் மீட்டுருவாக்கதில் உயிர் விசைகளாக விளங்கிய முன்னோடிகளின் உருவாக்கம், பங்களிப்பு பற்றிய தெளிவான புரிதல் இன்றியமையாதது. […]

இலங்கை முன்னொருபோதும் காணாத கடந்த வருடத்தைய படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் அவர்களுக்கு நெருக்கமான  மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட ஐந்து உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம்  அண்மையில் வழங்கிய தீர்ப்பு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாவது தீர்ப்பாகும். ஜனாதிபதியாக இருந்தபோது […]

ஆங்கில மூலம் : வி. நவரத்தினம் சட்டசபையில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள் அவர்களது சந்தர்ப்பவாத மனப்பாங்கை பறைசாற்றுவன. அவர்கள் யாவரும் சிங்களவர்களை நம்ப வேண்டும். புதிய அரசியல் யாப்பைச் செயற்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கூறினர். சு. நடேசப்பிள்ளை பேசும்போது “நாம் எமது பக்கக் கருத்தை நீதிபதி ஒருவர் முன்னிலையில் எடுத்துரைத்தோம். அவர் அதனை நிராகரித்துவிட்டார். இனி நாம் செய்வதற்கு எதுவும் இல்லை” (பிரித்தானிய காலனிய […]

வரி விலக்கு தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குதல்   மேலும், முதலீட்டு சபை மற்றும் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக வரி விதிவிலக்கினைப் பெறும் நிறுவனங்கள், வரி விலக்களிப்பட்ட (tax exemption) மொத்த தொகை, மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தினையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இணையத்தளத்தில் இற்றைப்படுத்த (update) வேண்டும் என இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் வரி […]

ஆங்கில மூலம் : வி. நவரத்தினம் 1947 இல் சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்புடன் தமிழர்களின் துயர நாடகம் ஆரம்பித்தது. சோல்பரி அரசியல் யாப்பின் தோற்றம், அதன் வீழ்ச்சி, இறுதியில் அது ஒழிக்கப்பட்டமை ஆகிய வரலாறு தமிழர்களின் இத்துன்பியல் நாடகத்தில் உள்ளடங்குவதாகும். தமிழ் – சிங்கள உறவுகளில் இவ்வரசியல் யாப்பு கறுப்புப் பக்கங்களாக உள்ளது. காலனிய ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் சமூகங்கள் அரசியல் விடுதலையும் சுதந்திரமும் […]

அறிமுகம் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) பாராளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனைப்  பார்க்க முடிகிறது. அது IMF இன் பொதுவான நடைமுறையும் கூட. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச […]

காணொலிகள்

உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]

சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.

வெளியீடுகள்

எழுநா பற்றி

2012 இல் உருவாக்கப்பட்ட எழுநா, இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சார்ந்து, சமூக - பொருளாதார - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி ஆகிய தளங்களில் கருத்துருவாக்கம் - நூலுருவாக்கம் - பரவலாக்கம் - சார்ந்த உரையாடல்களுடன் தன்னை புதுப்பித்து கொண்டு செயற்படுகின்றது.