கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. […]
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாகர் தென்னிலங்கையில் பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டில் மகாகம எனும் ஓர் இராச்சியத்தை அமைத்தவன் தேவநம்பிய தீசனின் சகோதரனான மகாநாகன் என்பவனே. இவன் ஓர் நாக மன்னனாவான். இவன் அமைத்த மகாகம இராச்சியத்தில் முதன் முதலாக நாகமகா விகாரை எனும் வழிபாட்டுத் தலத்தை இவன் அமைத்தான். தேவநம்பிய தீசனின் பின் அரசனாக வேண்டியவன் என்பதால் இவன் ‘உப ராஜா மகா நாகன்’ என அழைக்கப்பட்டான். தென்னிலங்கையில் கிரிந்த, […]
எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான பயணம்’ (A Passage North) நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்தத் தமிழ் […]
தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) 1957 ஜூன் 15 ஆம் தேதியன்று, இலங்கையின் தலைநகரான கொழும்பில் நான் பிறந்தேன். எனது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் நானே முதலாவது ஆண் குழந்தை. எனது குடும்பம் கட்டுப்பாடான வாழ்க்கையையும் கல்வி மீதான வேட்கையையும் இயல்பிலேயே கொண்டிருந்தது. விடா முயற்சியும் கடமை தவறாமையையும் என்னுடைய பாட்டனிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் குழந்தைகளுக்குக் கடத்தப்பட்டிருந்தன. ஒரு மத்தியதர வர்க்கத் […]
தெற்காசிய மரபிற் தோன்றிய மெய்யியல் மரபுகளையும், பிறபகுதிகளிற் தோன்றி இந்தியத்துணைக் கண்டத்திற் பரவிய மெய்யியல் மரபுகளையும், தன்னகத்தே உருவான மெய்யியல் மரபுகளையும் ஆவணமாக்கி வைத்துள்ள ஒரே தெற்காசிய மொழி தமிழ் என்பதில் யாதொரு ஐயப்பாடும் எழுதலுக்கு வாய்ப்பில்லை. தமிழ்மொழி, நீண்ட வலாற்றுத் தொடர்பையும் சமயநிலைப் பயன்பாடு மற்றும் அறிவுப்புலத் தொடர்பையும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டே பெற்றுவந்துள்ளமையால் அதுவொரு மெய்யியல்தளமாக அமைந்துள்ளது எனலாம். அவ்வாறான மெய்யியற் கருத்துக்களின் தாக்கம் இன்றளவும் தமிழ் […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் கடந்த அரைநூற்றாண்டு கவனங்கொள்ளத் தவறிய முக்கியமான துறைகளில் ஒன்று சூழலியல். இன முரண்பாடும் பொருளாதாரச் சிக்கல்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியலரங்குகளை ஆக்கிரமித்து நின்றன. இப்பின்புலத்தில் நமது இயற்கையும் வளங்களும் அபிவிருத்தியின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டன. விவசாய மையப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருந்த நாடு சேவை மையப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது. வளமான மண்ணும் கடலும் தந்திருக்கக் கூடிய பயன்களை வினைத்திறனுடனும் பேண்தகைமையுடனும் தக்கவைக்க […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு (CRIMINAL JUSTICE COMMISSION – சுருக்க எழுத்து : CJC) முன்னிலையில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர். அவ்வாணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த ரோஹண விஜயவீர தமது கட்சி ஏன் புதிய இடதுசாரி இயக்கம் (NEW LEFT MOVEMENT) ஒன்றை ஆரம்பித்தது என்பதற்கான விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டார். “பழைய இடதுசாரி இயக்கம் சோஷலிசப் […]
தமிழில் : த. சிவதாசன் இலங்கை பூராகவும் உள்ள இளைய தலைமுறையினர் உகந்த வேலையைப் பெறுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரப்படி, 15 முதல் 19 வயது வரையுள்ள இளையவர்களில் 4 பேர்களில் ஒருவர் வேலையைப் பெறமுடியாது அவஸ்தைப்படுகின்றார். 20 முதல் 29 வயதுள்ளவர்களில் 7 பேர்களில் ஒருவருக்கு வேலை கிடைப்பது அரிது. ஒருவர் வேலை தேடி, அது கிடைக்காதபோது அவர் வேலையற்றவர் (unemployed) என்ற அந்தஸ்தைப் […]
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய முறையிலான மழை வீழ்ச்சி அவதானிப்பு முறைகள் வடக்கு மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக மழை வீழ்ச்சி அவதானிப்பிற்கு என்று பல்வேறு வகைப்பட்ட உத்திகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் பல்வேறு வகையிலான கருவிகளைப் பயன்படுத்தி அவதானிப்புகளை மேற்கொண்டு இருப்பதை அறிய முடிகின்றது. அவர்கள் பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தி மழை வீழ்ச்சி அவதானிப்புகளை மேற்கொண்டு உள்ளார்கள். மரக்கால் மரக்கால் என்பது மிக […]
இருபதாம் நூற்றாண்டில் சோனக இனத்துவ அரசியல் நவீன காலத்தில், கேரளா மற்றும் தமிழக முஸ்லிம்கள் – அவர்களுக்கிடையில் கலாச்சார பன்முகத்தன்மை, உள்ளக சமூகப் பிரிவுகள் இருந்தபோதிலும் – தாங்கள் ‘யார்’ என்பதில் ஒரு நியாயமான பாதுகாப்பு சார்ந்த அச்சத்தை உணர்ந்தனர். இதற்கு மாறாக, இலங்கைச் சோனகரின் முன்னணி சமூகத் தலைமைகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, அவர்களின் உயிரியல் – கலாசாரத் தோற்றம் மற்றும் வளர்ந்து வரும் இனக்குழும […]
பழப்பயிர்களின் பல்வகைமை பனம்பழம் அரிய சொத்தாகும். வேறுபட்ட போகங்களில் பழங்களைத் தரும் பனை மரங்கள் எம் பிரதேசத்தில் பரந்து காணப்படுகின்றன. அவற்றின் கிழங்குகளின் தன்மையிலும், கள் மற்றும் கருப்பனி என்பனவற்றின் பிரிகை அளவுகளிலும் மாறுபாடு உண்டு. கற்பகத் தருவான பனைமரத்தின் பயன்பாடுகள் அநேகம். முக் கனிகளான மா, பலா, வாழை என்பனவற்றின் பயன்பாடும் எம் பிரதேசத்தில் கணிசமாக உண்டு. மா மரத்தில் ஒட்டுதல் மூலம் உருவாக்கப்படும் கன்றுகள் தாய் தாவரத்தின் […]
இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY 1750 […]
காரைநகர்ச் சைவமகாசபை நூல்நிலையம் காரைநகர்ச் சைவமகாசபை பொன்விழா மலர் 1967 இல் வெளிவந்தது. இம்மலராசிரியராக வைத்தீஸ்வரக் குருக்கள் சிறப்புறப் பணியாற்றி சைவமகாசபையின் வரலாற்றை முடிந்தவரை பதிவுசெய்ய முயன்றுள்ளார். அவரது குறிப்புகளின்படி காரைநகர்ச் சைவமகாசபை 1926 ஆம் ஆண்டிலேயே 347 தமிழ்ப் புத்தகங்களும் 279 ஆங்கிலப் புத்தகங்களும் கொண்டதொரு நூலகத்தை தன்னகத்தே கொண்டிருந்துள்ளதென்ற செய்தியை அறியமுடிகின்றது. அந்த ஆண்டில் மாத்திரம் 126 புதிய புத்தகங்கள் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனவென்ற செய்தியும் காணக்கிடைக்கின்றது. 13 […]
கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது பயணத்தின் போது, 1493 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, தாம் புதிதாகக் கண்டறிந்த கரீபியன் தீவு ஒன்றுக்கு சாண்டா மரியா டி குவாடெலூப் என்று பெயரிட்டார். கப்பல்கள் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் படகுகளில் நன்னீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வருவதற்குப் […]
மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது. இடப்பெயராய்வு (Toponomastic) ஆட்பெயராய்வு (Anthrophonomastic) இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic) சமூகப் பெயராய்வு (Socio Onomastic) […]
இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையில் மேற்படி நிலப்படத்தில் வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோட்டைகளும் நகரங்களும் இந்த நிலப்படத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பெஸ்ச்சூட்டர் கோட்டை, பைல் கோட்டை என்பவற்றையும்; தீவுப் பகுதியில் ஊர்காவற்றுறைக் கடற் கோட்டையையும்; தலை நிலத்தில் பூநகரிக் […]
இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன. நூலாசிரியர்: ஒய்வின்ட் புக்லறூட் […]
இலங்கை முஸ்லிம்களின் மற்றொரு உப மரபினமாக போஹ்ராக்கள் விளங்குகின்றனர். ‘போஹ்ரா’ (Bohras) என்ற சொல்லின் பொருள் ‘வர்த்தகர்’ என ஒரு ஆய்வுத்தகவல் குறிப்பிடுகிறது. அவர்களது சமூக வாழ்வியலுக்கும் இந்தச் சொல்லுக்குமான தொடர்பு உண்மையில் ஆழமானது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் ‘போஹ்ரா’ என்பது ஒரு காரணப்பெயராகவே இந்த சமூகத்தினருக்கு சூட்டப்பட்டிருப்பதை அவர்களது உலக வர்த்தகச் செயல்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. உலகின் பல பாகங்களிலும் சிறப்பான முறையில் வர்த்தகம் மேற்கொள்கின்ற ஒரு சமூகப்பிரிவினராகவே […]
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்”-திருக்குறள்- மு. வரதராசனார் விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். ஓர் ஆரம்ப நிறுவனத்தை அமைக்க முதலில் ஓர் சிந்தனை (Idea) தேவை. இண்டாவது அந்தச் சிந்தனையை உற்பத்தியாக உருவாக்கும் தகுதி கொண்ட குழுவினர் (People/Team) தேவை. பின்பு அந்த உற்பத்திக்கான சந்தை (Market) அவசியம். இவை […]
தமிழ் மக்களாக இயங்கும் எமது வாழ்வியலில் அடித்தளமாக அமைந்து தாக்கம் செலுத்தி வருகின்ற பணபாட்டுக் கோலங்களின் தொடக்கம் – மாற்றங்கள் – விருத்திகள் என்பவற்றை இந்தத் தொடரில் பார்த்து வருகின்றோம். ஏற்பட்டிருக்கும் ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டுமாயின் அதன் தொடக்கம் – ஊடுபாவு – முடிவிடம் என்பவை கண்டறியப்படுதல் அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட முடிச்சுகள் உள்ள நிலையில் அடிப்படையான மூலத்தை அவிழ்ப்பதனூடாக ஏனையவற்றையும் மீட்டெடுக்கும் இலகு வழியைக் கண்டடைவோம். எமக்கான […]
ஆங்கில மூலம் : டேவிட்.ஆர். கமரன் கனடா ஒரு பாராளுமன்ற ஜனநாயக முறையை உடைய நாடு. கனடாவின் அரசுத் தலைமையாளாக பிரித்தானியாவின் எலிசபெத் II அரசி விளங்குகிறார். அவரின் பிரதிநிதியான ஆளுநர் நாயகம் சமஷ்டி அரசின் பிரதிநிதியாக விளங்குவார். அவ்வாறே மாகாணங்களில் ஆளுநர்களும் அரசியின் பிரதிநிதியாக உள்ளனர். கனடாவின் புவி இடப்பரப்பு 9 மில்லியன் சதுர கிலோமீற்றர் ஆகும். இப் புவிப்பரப்பு மூன்று நேர வலயங்களை (TIME ZONES) உள்ளடக்கியது. இந்நாட்டின் […]
உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்துவரும் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையானது நன்னீர் மீன்பிடி நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் காணப்படும் நன்னீர் மூலங்களாகவுள்ள பாரிய மற்றும் நடுத்தர குளங்களும் 1,740 சிறிய குளங்களும் 1,605 சிறு குட்டைகளும் 60 அணைக்கட்டுக்களும் நன்னீர் மீன்பிடியை பெரிய, சிறிய அளவுகளில் மேற்கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் 15,455 சதுர கிலோமீற்றர் […]
கறவை மாடு வளர்ப்பில் இனப்பெருக்க முகாமைத்துவம் மிக முக்கியமானது. ஒரு மாடு சினைப்பட்டு கன்றை ஈனும் போதுதான் பால் கிடைக்கும். வளர்ப்பதற்கு கன்றுகள் கிடைக்கும். எனவே கறவை மாடு வளர்ப்பின் முக்கிய அடிப்படையே மாடுகள் சினைப்படுவது தான். இயற்கையில் மாடுகள் சினைப்படுதல் அவ்வளவு இலகுவானது கிடையாது. பல காரணிகளால் அச் செயற்பாடு தடைப்படுகின்றது; தாமதமடைகிறது. முன்னைய காலத்தில் இயற்கையில் பசுமாடுகளும் காளைகளும் ஒருங்கே காணப்பட்டு ஒரு விகிதத்தில் கன்றுகள் பிறந்தன. […]
இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாவது அரசாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு காணப்படுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சியில் இருந்த இவ்வரசின் ஆதிக்கத்துக்குள் வடஇலங்கையும் கிழக்கிலங்கையின் சில பாகங்களும், சில சந்தர்ப்பங்களில் தென்னிலங்கையும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறு ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவ்வரசின் வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் ஒன்றாக அவ்வரசு காலத்தில் […]
மலையக தமிழ் மக்களின் இந்த வரலாற்றுத் தொடர் இந்த அத்தியாயத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. எனினும் அவர்களது வரலாறு அதன் பின்னரும் இந்த அத்தியாயத்திலிருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அது புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்ற கதையைப் போல ஒரு துன்பியல் வரலாறு. நான் இந்த வரலாற்று தொடரை எழுத முற்பட்டபோது இதற்கு என்ன தலைப்பை இடலாம் என்று பெரிதும் சிந்தித்தேன். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 74 […]
இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள் அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள் அல்ல. இலங்கை சிலசமயங்களில் தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள் இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது. அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) […]
ஒரு சமூகத்தில் உற்பத்தியும் செல்வமும் உபரியாகின்ற போது அந்த சமூகத்தில் அதிக செல்வத்தை வைத்திருக்கின்ற தனிநபர்கள் செல்வாக்குப் பெற்று ஆதிக்க வர்க்கமாக உருவெடுக்கிறார்கள். அப்படி ஆதிகாலத்தில் தோன்றிய முதல் செல்வாக்கான நபர்களிலிருந்தே நிலக்கிழார்களும் பின் அரசர்களும் தோன்றினார்கள் என்பதை போன அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி இலங்கையின் வடபாதியில் தோன்றிய தொல்லரசு அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டிருந்தது என்பதையும் அந்த முதல் அரசை உருவாக்கிய மூதாதையராக விசயன் என்ற இலாட நாட்டினன், சிங்களன் […]
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே, குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனித இனக்குழு ஒன்றின் சகல முன்னெடுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும், உணவுத்தேடலுக்கான உழைப்பிலும், ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியே பெண்ணின் செயற்பாடுகள் இருந்துள்ளன. “வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12) எனும் புறநானூற்றுப் பாடல் வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. […]
அநேக பெயர்களுள்அவனது பெயரை மறந்துவிடுவோம் என அஞ்சுகிறேன்அவனை மறக்க நான் அஞ்சுகிறேன்மாரி மழையிலும், புயலிலும்எம் இதயக் காயங்கள் ஆறக்கூடும்என நான் அஞ்சுகிறேன்… – மஹவுட் தர்வீஷ் (பலஸ்தீனம்) – “இனப்படுகொலை என்பது பாரிய எண்ணிக்கையிலான கொலைகளை மட்டும் குறிப்பதல்ல; திட்டமிடப்பட்ட வகையில் சுவடிக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் கல்லறைகள் உட்பட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படுகொலைதான்.” – சேராபிம் […]
பௌத்த சிற்பங்கள் இலங்கையில் உன்னதமான வேலைப்பாடுகளான பௌத்த சிற்பங்கள் பெருந்தொகையிலே காணப்படுகின்றன. ஆதியில் தர்மச்சக்கரம், புத்தர்பாதம், போதிமரம் என்பனவே வழிபாட்டுச் சின்னங்களாக விளங்கின. ஆயினும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவ வழிபாடு இந்திய சமயங்களிடையில் வழமையாகிவிட்டது. இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டளவில் புத்தர் படிமங்களை வழிபடுவது வழமையாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் படிமங்கள் கிபி. 300-500 வரையான காலப்பகுதிக்குரியனவாகத் தெரிகின்றன. கந்தரோடை, சுண்ணாகம், வல்லிபுரம், நவக்கீரி ஆகியவிடங்களிற் புத்தர் படிமங்கள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பௌத்த சமயந் […]
இனவாதமும் தொழிலாளர் போராட்டங்களும் மலையக மக்களை பேரினவாத அடிப்படையில் நோக்குதலும் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் ஆரம்ப காலத்திலிருந்தே இனவாத தலைவர்களாலும் அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். 1948 இல் மலையக மக்களது குடியுரிமையைப் பறித்ததும் இனவாதத்தின் அடிப்படையிலே ஆகும். இதை விட 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற இனக்கலவரங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை விட இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, […]
ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன (சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை […]
இலங்கை முன்னொருபோதும் காணாத கடந்த வருடத்தைய படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் அவர்களுக்கு நெருக்கமான மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட ஐந்து உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாவது தீர்ப்பாகும். ஜனாதிபதியாக இருந்தபோது […]
ஆங்கில மூலம் : வி. நவரத்தினம் சட்டசபையில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள் அவர்களது சந்தர்ப்பவாத மனப்பாங்கை பறைசாற்றுவன. அவர்கள் யாவரும் சிங்களவர்களை நம்ப வேண்டும். புதிய அரசியல் யாப்பைச் செயற்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கூறினர். சு. நடேசப்பிள்ளை பேசும்போது “நாம் எமது பக்கக் கருத்தை நீதிபதி ஒருவர் முன்னிலையில் எடுத்துரைத்தோம். அவர் அதனை நிராகரித்துவிட்டார். இனி நாம் செய்வதற்கு எதுவும் இல்லை” (பிரித்தானிய காலனிய […]
வரி விலக்கு தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குதல் மேலும், முதலீட்டு சபை மற்றும் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக வரி விதிவிலக்கினைப் பெறும் நிறுவனங்கள், வரி விலக்களிப்பட்ட (tax exemption) மொத்த தொகை, மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தினையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இணையத்தளத்தில் இற்றைப்படுத்த (update) வேண்டும் என இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் வரி […]
ஆங்கில மூலம் : வி. நவரத்தினம் 1947 இல் சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்புடன் தமிழர்களின் துயர நாடகம் ஆரம்பித்தது. சோல்பரி அரசியல் யாப்பின் தோற்றம், அதன் வீழ்ச்சி, இறுதியில் அது ஒழிக்கப்பட்டமை ஆகிய வரலாறு தமிழர்களின் இத்துன்பியல் நாடகத்தில் உள்ளடங்குவதாகும். தமிழ் – சிங்கள உறவுகளில் இவ்வரசியல் யாப்பு கறுப்புப் பக்கங்களாக உள்ளது. காலனிய ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் சமூகங்கள் அரசியல் விடுதலையும் சுதந்திரமும் […]
அறிமுகம் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) பாராளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனைப் பார்க்க முடிகிறது. அது IMF இன் பொதுவான நடைமுறையும் கூட. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச […]
ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன இனவாதமும் ஐக்கிய முன்னணி தந்திரோபாயமும் 1950 களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் இரு விடயங்களில் அக்கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது. சமயம், மொழி என்பன சார்ந்த பண்பாட்டுப் பிரச்சினைகள் கைத்தொழில் வர்த்தக முயற்சிகளைத் தேசியமயமாக்கல், ஏகாதிபத்திய இராணுவத் தளங்களை மீட்டு எடுத்தல் ஆகிய கிளர்ச்சிவாதக் கோரிக்கைகளை முன்னெடுத்தல். மேற்குறித்த இரு பிரச்சினைகளை அக்கட்சி முன்னெடுத்தபோது இடதுசாரிகளிடையே ஒரு […]
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்தமாதம் சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் இணையவெளி பாதுகாப்புச் சட்ட மூலமுமே அவையாகும். இரு சட்டமூலங்களுமே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், இணையவெளி பாதுகாப்புச் சட்டமூலத்தை மாத்திரம் கடந்த வாரம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தற்காலிகமான ஏற்பாடு என்று கூறப்பட்டு, ஜெயவர்தன அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டு, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவரும் கொடூரமான […]
ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன மலையாளிகளுக்கு எதிரான இனவாதம் 1930 களில் முதற்தடவையாக கொழும்பு நகரின் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினரான மலையாளிகளுக்கு எதிரான இனவாத கூக்குரலை தொடக்கினர். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் எழுந்த இந்த இனவாத எதிர்ப்பை இடதுசாரி இயக்கம் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. அக்காலத்தின் பொருளாதார மந்தம் வேலையின்மையை அதிகரித்ததால் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. அந்நியர்கள் ‘மண்ணின் புதல்வர்களான’ சிங்களவர்களின் வேலைகள், வர்த்தக […]
உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.