April 2024 - Page 2 of 3 - Ezhuna | எழுநா

April 2024 தொடர்கள்

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 3

15 நிமிட வாசிப்பு | 6331 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையிலும் மேற்படி நிலப்படத்தில் உள்ள வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். போக்குவரத்தும் வீதிகளும் ஏற்கெனவே யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் தூர்சியின் நிலப்படம் தொடர்பாக எழுதியபோது, அக்காலத்தில் கட்டளையகத்தில் இருந்த வீதிகளைப் பற்றியும் விளக்கினோம். உண்மையில் தூர்சியின் நிலப்படம் வரைந்த காலத்துக்கும் […]

மேலும் பார்க்க

தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் : பிறேஸ் கேர்டில் விவகாரத்தை முன்வைத்து ஓர் மீளாய்வு – பகுதி 1

24 நிமிட வாசிப்பு | 9269 பார்வைகள்

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன றெஜி சிறிவர்த்தன அவர்கள் 2000 ஆம் ஆண்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றின் ஆங்கிலத் தலைப்பு பின்வருமாறு அமைந்தது: “THE BRACE GIRDLE AFFAIR IN RETROSPECT: CONTRADICTIONS OF IMPERIALISM, OF THE POST COLONIAL STATE AND OF THE LEFT” மேற்படி கட்டுரையின் மையப் பொருளாக தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் (RIGHTS OF THE INDIVIDUAL AND THE […]

மேலும் பார்க்க

மகாசேனன் காலம் வரை கிழக்கு உரோகணம்

16 நிமிட வாசிப்பு | 12818 பார்வைகள்

அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண […]

மேலும் பார்க்க

மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு

16 நிமிட வாசிப்பு | 21749 பார்வைகள்

அறிமுகம்  இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 11

18 நிமிட வாசிப்பு | 9906 பார்வைகள்

ஹண்டி ஞாபகார்த்த நூலகம் (பரி.யோவான் கல்லூரி) 1818 ஆம் ஆண்டு C M S Mission மதப் பணிக்காக இலங்கைக்கு வருகைதந்த வண. ஜோசப் நைட் (Rev. Joseph Knight) அவர்கள் நல்லூரில் வீடு ஒன்றைக் கொள்வனவு செய்து தனது மதக் கல்விப் பணியைத் தொடர்ந்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் பரி. யோவான் கல்லூரி (St. John’s College) உருவாகுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.  வண. ஜோசப் நைட் அவர்கள் நல்லூர் […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்தில் நாகர்

10 நிமிட வாசிப்பு | 12324 பார்வைகள்

இலங்கையின் வடபகுதியில் பண்டைய காலத்தில் நாகர் வாழ்ந்தமை மற்றும் நாக வழிபாடு செய்தமை தொடர்பான சான்றுகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு நாக இராச்சியம் சிறப்புற்று விளங்கியதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. இங்கு நாகதீபம் எனும் நாக இராச்சியம் இருந்ததாகவும், இங்கிருந்த மகோதரன், சூளோதரன் எனும் இரு நாக மன்னர்களின் மணிமுடி தொடர்பான பிணக்கைத் தீர்ப்பதற்காக புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. […]

மேலும் பார்க்க

எரிக்கப்பட்ட நூலகங்களும் எரிபடமுடியா நூலகக் கனவுகளும் : நூலக நிறுவனம்

12 நிமிட வாசிப்பு | 13832 பார்வைகள்

1 1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் அராலியில் இருந்தேன். அது என்னுடைய தாயாருடைய ஊர். நூலகம் எரிந்தபோது கடலில் வீழ்ந்த தீச்சுவாலை காரணமாக அராலிக்கடல் தீப்பற்றி எரிவதாக சிறுவனான நான் நினைத்துக்கொண்டேன். அது என் முதற் பீதிகளில் ஒன்றாய் அமைந்தது. அதற்குப் பின்னால் அடுக்கடுக்காய் பல விடயங்கள் நடந்தேறின. நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. சேரன் தனது ‘இரண்டாவது சூரியோதம்’ கவிதைத் தொகுதியில், […]

மேலும் பார்க்க

பல்கலைக்கழக – வணிக இணைப்பு : கல்வி முனைப்புகள் மூலம் சந்தைகளை விரிவுபடுத்தல்

17 நிமிட வாசிப்பு | 9477 பார்வைகள்

தமிழில் : த. சிவதாசன் தொழில் முனைவோர் தமது எண்ணங்களை வணிகப்படுத்தி பணம் பண்ணுகிறார்கள். அள்ளப்படும் குப்பைகள் பெறுமதிமிக்க கட்டிடப் பொருட்களாகவும் எரிபொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. மைக்குறோவேவ் உலைகளும், தீக்குச்சிகளும் இன்னோரன்ன தற்செயலான கண்டுபிடிப்புகளும் மிகப்பெரிய தொழிற்கூடங்களை உருவாக்கிவிட்டன. உபத்திரவமெனக் கருதப்பட்ட பசையை யாரோ ‘சுப்பர் குளூ’ (superglue) என விற்கத் தொடங்கிவிட்டார்கள். ஒட்டவில்லை என விலக்கிவைத்த பசையை இன்னொருவர் ‘போஸ்ற் இற்’ (Post-It) குறிப்புக் கட்டுகளாக விற்கிறார். தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட […]

மேலும் பார்க்க

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆரம்பம்

16 நிமிட வாசிப்பு | 20241 பார்வைகள்

தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைக் கொண்டு வாழ முடியாத நிலைமையில் போராட்டங்கள் ஆரம்பமாகும் என்று அனுபவங்கள் கூறுகின்றன. தொழிலாளர் எழுச்சி என்பது விவசாயிகளின் வளர்ச்சியையும் போராட்டங்களையும் பார்க்கிலும் வித்தியாசமானதாகும். தொழில் வழங்குநர்களான முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகக் கட்டமைப்பாக தொழிலாளர் வர்க்கமும் அவர்களின் போராட்டங்களும் காணப்படுகின்றன. தொழிலாளர் வர்க்கமானது இலங்கையின் அரச காலத்தில் இருந்து வந்ததாக காணப்படுகின்றது. ஆனாலும் அன்றைய நிலைமை சாதிய ரீதியாகவே காணப்பட்டது. காலனித்துவ […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் வெப்பநிலை

14 நிமிட வாசிப்பு | 10829 பார்வைகள்

அறிமுகம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்ற, வளிமண்டல வெப்பநிலை அளவீடு செய்கின்ற உலக வளிமண்டல திணைக்களத்தின் தர நிர்ணயத்திற்கு உட்படுத்தப்பட்ட வகையிலான வெப்பமானிகள் மூலமே இலங்கையிலும் வெப்பநிலை அளவீடு செய்வதற்கான வெப்பமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் ஈர மற்றும் உலர் வெப்பமானிகள், மண் வெப்பமானிகள், உயர்வு மற்றும் இழிவு வெப்பமானிகள் மற்றும் தன்னியக்க வெப்பநிலை பதிவுக் கருவி போன்றவற்றை பயன்படுத்தி வெப்பநிலை பற்றிய அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்