தென்னாசியாவிலேயே தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்கள் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். அன்று தொட்டு இன்றுவரை பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழுகின்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது. இங்கு பல்லினப் பண்பாட்டை வெளிப்படுத்தும் உச்ச காலப் பகுதியாக பொலநறுவை இராசதானி யுகம் விளங்கியது. இப்பொலநறுவை இராசதானியானது இலங்கையினுடைய இராசதானி வரலாற்றில், அனுராதபுரம் சோழர்களினால் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களால் […]
‘Cey-Nor’ நிறுவனம் அந்தோணி ராஜேந்திரம் அவர்களால் கனவு கண்டு படிப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு; 1960 களில் முளைத்து படிப்படியாக வார்க்கப்பட்டது. நோர்வேக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவின் நிமித்தமாக நோர்வே மக்களால் நிதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 1960 களில், ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய மீன்பிடித்துறைசார் அபிவிருத்திக் கட்டமைப்புக்கு, எமது முன்னோர்கள் முயன்றார்கள் என்பதுக்கு Cey-Nor ஒரு எடுத்துக்காட்டு. 1983 களில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாகப் பிடிக்கப்பட்ட மீனின் அளவு 50,000 மெற்றிக் […]
டெங்கு நோயின் உலகளாவிய பரவல் சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் பற்றிய விரிவான கவனம் குறைவு. அது பற்றிய தகவல்கள், ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் அரிது. எவ்வாறாயினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், டெங்குவின் பொருளாதாரச் சுமை மீதான கவனத்தை ஈர்க்கும் முகமாக இவ் ஆரம்ப விசாரணை முன்வைக்கப்படுகிறது. ஆழமான விசாரணைக்கான ஒரு ஒரு பாதையின் ஆரம்பமாக […]