யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயிலுக்குச் சமீபமாக இருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக அறிந்திருந்தார்கள். 1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த லூயிஸ், வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் விஷ்ணு கோயிலின் பூசகர் அப்பகுதியிலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளை அரசாங்க அதிபரைக் கூட்டிச் சென்று காண்பித்தார். இதைத் தொடர்ந்து வல்லிபுரத்திலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகள் இருந்த இடத்தில் 1936 இல் அகழ்வுகள் […]
கடந்த காலங்களில் நிலவிய உள்நாட்டுப் போர் இலங்கையை பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கச் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்பு இலங்கைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதித்தது. மீண்டும், கொரோனா கொள்ளைநோய் நாட்டை மேலும் சீர்குலைத்தது. ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரத் திட்டங்களினாலும் இலங்கை கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. இப்போது அயல் நாடுகளிடம் கையேந்தும் நிலையில், நாடு ஏராளமான கடனில் மூழ்கியிருக்கிறது. உக்ரேன் – இரஷ்யப் […]