July 2024 - Ezhuna | எழுநா

July 2024 தொடர்கள்

நீலப் புரட்சி : வளங்களைக் காவு கொடுத்தல்

26 நிமிட வாசிப்பு | 10036 பார்வைகள்

தொடக்கக் குறிப்புகள் வரலாறு முழுவதும், அனைத்து நாகரிகங்களின் பொருளாதார நடவடிக்கைகளிலும் கடல் எப்போதும் உணவு வளம், போக்குவரத்து மற்றும் வணிக வர்த்தகத்திற்கான வழிமுறையாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், நீலப் பொருளாதாரம் என்பது கடல்சார் வளங்கள் மற்றும் பெருங்கடல்களில் வளர்ந்த பொருளாதாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கருத்தாக மாறியுள்ளது. கடலோரப் பகுதிகளோடு சமரசம் செய்யாத பொருளாதார வளர்ச்சியையே நீலப் பொருளாதாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைத்தன்மையில் கவனம் செலுத்துவதை இழக்காமல் முன்னேற்றம், பொருளாதார, […]

மேலும் பார்க்க

இறக்காமம் : அனுராதபுரச் சேனாதிபதி அரக்கனுக்காக வரி விலக்கப்பட்ட ஊர்

17 நிமிட வாசிப்பு | 9932 பார்வைகள்

ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் கீழைக்கரையின் அரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவான தகவல்களெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கீழைக்கரையின் நடுப்பகுதியில் வேகம்பற்று வடக்கு (உகணை) இராசக்கல் மலையும் தென் எல்லையில் பாணமைப்பற்று (இலகுகலை) மங்கல மகா விகாரமும் தொடர்ச்சியாக புத்த மையங்களாக இயங்கிக்கொண்டிருந்தன என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. முன்பு இலட்சக்கல் என்று அழைக்கப்பட்ட இலகுகலை (லஃகு|கல, lahugala) பொத்துவில்லுக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிங்களக் கிராமம் ஆகும். […]

மேலும் பார்க்க

சித்தர் மலைப்பகுதியில் நாக மகாராஜன் செய்த பணிகள் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

17 நிமிட வாசிப்பு | 12571 பார்வைகள்

கதிர்காமத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ தூரத்தில், யால வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டின் தென்மேற்குப் பகுதியில் சித்துள்பவ்வ அமைந்துள்ளது. இங்கு கோரவக்கல, சித்துள் பவ்வ, தெகுந்தரவெவ எனும் மூன்று மலைப்பகுதிகள் காணப்படுகின்றன. இம் மூன்று இடங்களிலும் நூற்றுக்கணக்கான கற்குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பண்டைய காலம் முதல் கதிர்காமத்திற்கு தல யாத்திரை வந்த சித்தர்களும், முனிவர்களும் அதிகளவில் தங்கிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக இம்மலை சித்தர் மலை எனப் […]

மேலும் பார்க்க

செட்டிகுளம் : தமிழரின் பூர்வீக வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சில தொல்லியற் சான்றுகள்

24 நிமிட வாசிப்பு | 11791 பார்வைகள்

சமகாலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் பொதுவாக வன்னி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வன்னி உள்ளிட்ட வடஇலங்கை பாளி மொழியில் நாகதீபம், உத்தரதேசம் எனவும், தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 13 ஆம் நாற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை அரசு வீழ்ச்சியடைந்து சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனியாவிற்கு நகர்ந்த […]

மேலும் பார்க்க

சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’ 

17 நிமிட வாசிப்பு | 9451 பார்வைகள்
July 27, 2024 | இளங்கோ

‘படகு மக்கள்’ (The Boat People), கனடாவில் கப்பலில் வந்து இறங்கிய ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினமாகும். ஐநூறுக்கு அதிகமான ஈழத் தமிழர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்து கனடாவின் கிழக்குப் பகுதியில் வந்து சேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இந்நாவலில் மகிந்தன் என்பவனும், அவனது பத்து வயது மகனான செழியனும் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அவர்கள் கனடா வந்திறங்கியபின், அவர்களுக்காக […]

மேலும் பார்க்க

வடக்கின் பொருளாதார மறுமலர்ச்சி : அரசு, தனியார், புலம்பெயர்ந்தோரின் போதாமை 

16 நிமிட வாசிப்பு | 6890 பார்வைகள்

பல தசாப்தங்களைக் காவுகொண்டு 2009 இல் முடிவுக்கு வந்த இனப்போர் முடிந்து 7 வருடங்களாகியும் வடக்கின் பணியுருவாக்க முயற்சிகள் இன்னும் விவசாயம் மற்றும் பாரம்பரியத் தொழில்களோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. இது சிலருக்கு  “ஏதோ எம் பங்கிற்கு செய்கிறோம்” என்ற எண்ணத்தையும்; இன்னும் சிலருக்கோ போருக்கு முன்னான இலட்சியக் கற்பனா பூமியைத் தாம் நிறுவிவிடப் போகிறோம் என்ற துடிப்பையும் கொடுக்கலாம். என்ன இருந்தாலும் விவசாயம், கைத்தொழில்கள் மட்டும் போதாது. இலட்சிய பூமி […]

மேலும் பார்க்க

பண்டைத் தமிழர் வழிபாட்டு மரபில் கண்ணகி

21 நிமிட வாசிப்பு | 13260 பார்வைகள்

பண்டைத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகளை உடையவர்களாக விளங்கினர். இவ்வழிபாட்டு முறைகள் திணைசார்ந்த நிலையிலும் தொழில், சமூக வாழ்வியல் சார்ந்த நிலைகளிலும் அமைந்திருந்தன. அவ்வகையான வழிபாட்டு முறைமைகளிற் சில இன்று வழக்கருகிவிட்டன. சான்றுகளாக பல தேவன் வழிபாட்டினையும் வருணன் வழிபாட்டினையும் குறிப்பிடலாம். சங்க காலத்தில் பெருவழக்காக விளங்கிய இவ்வழிபாட்டு முறைகள் படிப்படியாகக் குறைந்து இன்று வழக்கற்றுப் போய்விட்டமை காணக்கூடியதாகின்றது. அவ்வாறில்லாமல் சங்ககாலம் தொட்டு இன்றளவும் தொடர்ந்து வரக்கூடிய வழிபாட்டு […]

மேலும் பார்க்க

வாடிக்கையாளரை முதன்மையாக்குதல் : வணிக மேம்பாட்டு அணுகுமுறை

14 நிமிட வாசிப்பு | 12545 பார்வைகள்

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்”  -திருக்குறள் (120)- விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். உலகளவில் தொடக்க நிறுவனங்களை (Startup Companies) அதிகமாக உருவாக்கும் இடமான சிலிக்கன் வலியில் தொடங்கப்படும் நிறுவனங்களில் பத்தில் ஒன்பது தோல்வியடைவது உண்மையாகும். அதற்குப் பல காரணங்களை ஆராய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று; […]

மேலும் பார்க்க

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை : தென்கிழக்கு ஆசியாவின் முதல் இலாப நோக்கற்ற கூட்டுறவு மருத்துவமனை

16 நிமிட வாசிப்பு | 17095 பார்வைகள்

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை எம் தேசத்திற்கே முன்னோடி. இதன் அனுபவங்கள், பல கூட்டுறவு வைத்தியசாலைகளை உருவாக்க உதவக்கூடியன. சமூக நலன் சார் அணுகுமுறை, சுகாதாரப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தல், நோயாளிகளின் கவனிப்பு, மருத்துவத் தொழில்முறை மீதான அர்ப்பணிப்பு மற்றும் பரந்த சமூக அணுகுமுறை போன்றன தற்போதைய காலகட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. தற்போதைய, மருத்துவச் சேவை பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. ஆனால் எமது முன்னோர்களின் மருத்துவச் சேவை, முழுச் சமூகத்திற்கும் பயன்படக்கூடிய […]

மேலும் பார்க்க

பௌத்தமும் அடையாள முரண்பாடுகளும் – பகுதி 2

16 நிமிட வாசிப்பு | 9737 பார்வைகள்

ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஒற்றையாட்சி அரசு (Unitary State), ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பன நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த அரசறிவியல்துறை எண்ணக்கருக்கள் (Concepts) என்பதையும், நவீனத்துக்கு முந்தியகால அரசுகளை ஒற்றையாட்சி முறையில் அமைந்த நேஷன் ஸ்டேட்ஸ் (Nation State) என விளக்கம் கூறுவது வரலாற்றுத் திரிபு என்பதையும் பேராசிரியர் செனிவிரத்தின விளக்கிக் கூறியிருப்பதை இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் எடுத்துக் கூறினோம். 2500 ஆண்டுகளுக்கு மேலாக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்