August 2024 - Ezhuna | எழுநா

August 2024 தொடர்கள்

யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முகநோக்கு – பாகம் 3

12 நிமிட வாசிப்பு | 5980 பார்வைகள்

மானிடவியலாளர் பேரின்பநாயகத்தின் கட்டுரை ‘CASTE, RELIGION AND RITUAL IN CEYLON’ என்ற தலைப்பில் றொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ‘யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு’ என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெறுகிறது. இக் கட்டுரையினை பேரின்பநாயகம் 1965 ஆம் ஆண்டில் எழுதினார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடந்தபின் இக்கட்டுரை தமிழாக்கம் மூலமாக தமிழ் அறிவுலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் பற்றி ‘THE KARMIC […]

மேலும் பார்க்க

அம்மாச்சி உணவகம் : தொழில் முனைவோருக்கான முன்னுதாரணம் 

13 நிமிட வாசிப்பு | 7267 பார்வைகள்

தமிழில் : த. சிவதாசன் 2015 இல் நான் யாழ்ப்பாணத்திற்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அங்கு போர் விதவைகளால் நடாத்தப்படும் உணவகம் பற்றி பல வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். கொழும்பிலிருந்து வடக்கே வரும் நண்பர்கள் கிளிநொச்சிக்கு அருகே, A9 வீதியில் இது இருப்பதாகச் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து ஒன்றரை மணித்தியால வாகன ஓட்டத்தில் (சிலர் இதை ஒரு மணித்தியாலத்தில் கடந்துவிடுவார்கள்) கிளிநொச்சிக்கு அருகே இருக்கும் இவ்விடத்தைத் தரிசிக்க எனக்கு ஒரு வருடம் பிடித்தது. பின்னர் தான் […]

மேலும் பார்க்க

மேல்கொத்மலைத் திட்டம் : தேச நலனா? இயற்கை வளமா?

14 நிமிட வாசிப்பு | 5772 பார்வைகள்

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் கடந்த கால்நூற்றாண்டு கால அபிவிருத்தி அரசியலின் வரலாற்றில் மக்களின் பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்த அபிவிருத்தித் திட்டங்களில் மேல்கொத்மலைத் திட்டம் முதன்மையானது. மக்களின் எதிர்ப்பையும் மீறி அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இலங்கையின் சூழலியல் போராட்டங்களின் வரலாற்றில் முக்கிய இடம் இத் திட்டத்திற் கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு உண்டு. தேச நலனின் பெயரால் மலையகத் தமிழர்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து இடம் பெயர்க்கப்பட்டார்கள். இயற்கை அழிக்கப்பட்டது. நீர் மின்சாரமும் அதற்காக […]

மேலும் பார்க்க

கால்நடை வளர்ப்பின் மேம்பாட்டுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல்

11 நிமிட வாசிப்பு | 5265 பார்வைகள்

இன்றைய நாட்களில் சமூக ஊடகங்களின் வகிபாகம் மிக முக்கியமானது. சகல துறைகளிலும் அதன் செல்வாக்கை் தவிர்க்க முடியாதுள்ளது. நல்லதோ கெட்டதோ சமூக ஊடகம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கால்நடை வளர்ப்புச் செயன்முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய நவீன கால்நடை வளர்பில் கணிசமான விடயங்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. இனிவருங் காலங்களின் அதன் பங்களிப்பு இன்னுமின்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டுரை கால்நடை வளர்ப்பு விரிவாக்கத்தில் சமூக ஊடகத்தின் பங்களிப்பை ஆராய்கிறது. […]

மேலும் பார்க்க

பிரித்தானிய சாம்ராச்சியத்தின் நவீன நிர்வாக முறைமை

10 நிமிட வாசிப்பு | 7709 பார்வைகள்

முதலாளித்துவ யுகத்தில் ஐரோப்பியர்களின் எழுச்சிக்கும் தெற்குலகின் வீழ்ச்சிக்குமான காரணங்களை பின்வருமாறு சுருக்கலாம்: 1) விஞ்ஞானம், மனித குல, பொருளாதார, நாகரிக வளர்ச்சி என்பன ஒரு நாட்டுக்கோ ஒரு கண்டத்துக்கோ ஓர் இனத்துக்கோ சொந்தமானதல்ல. அவை மனித குலம் தோன்றிய காலம் முதல், ஆதிக்குடிகளாகவும், பின்னர் கோத்திரங்களாகவும், அரசுகளாகவும், தேசங்களாகவும் அது பரிணாமம் அடைந்து காலங்காலமாக, சிறுகச்சிறுக, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு படிப்படியாக வளர்க்கப்பட்ட திரட்சியேயாகும். இவ் வளர்ச்சியில் […]

மேலும் பார்க்க

ஈழத்தில் கூட்டுறவுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு 

17 நிமிட வாசிப்பு | 8645 பார்வைகள்

கூட்டுறவு, ஒரு பலமான சமூக – பொருளாதார அடித்தளத்தையும் சமூக மூலதனத்தையும் சம அளவில் உள்வாங்கி, பல மட்டங்களில் (கிராம, பிரதேச, மாவட்ட மற்றும் மாகாணச் சம்மேளனங்களாக) கிளைவிட்டுத் தழைக்கும் ஒரு அமைப்பு ஆகும். இலங்கையில், மிகவும் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையக நிர்வாக நிலப்பரப்பில் கூட்டுறவின் அசைவியக்கம் ஒரு தேங்கு நிலைக்குச் சென்றுள்ளது. அண்மையில் கூட, இது பற்றிய கரிசனை பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. தற்போதைய கூட்டுறவின் […]

மேலும் பார்க்க

யுவராஜன் நாகனின் கொள்ளுப் பேரன் இளவரசன் நாகன் பற்றிக் குறிப்பிடும் படர்கல் மலைக் கல்வெட்டு

14 நிமிட வாசிப்பு | 7202 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மலைகள் நிறைந்த ஓர் இடம் காணப்படுகிறது. இது படர்கல் மலைப் பகுதி எனப் பெயர் பெற்றுள்ளது. செங்கலடியில் இருந்து மகா ஓயாவுக்குச் செல்லும் வீதியில் உள்ள மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கத்தில் 23 கி.மீ தூரத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் படர்கல் மலைப் பிரதேசம் அமைந்துள்ளது. மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாக படர்கல் மலையை நோக்கிச் செல்லும் பாதையில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முக நோக்கு – பகுதி 2

18 நிமிட வாசிப்பு | 6045 பார்வைகள்

பஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியக் காலனிய அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் சாதி உறவுகள் தொடர்பாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்பதை ஆராய்வதாக பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் கட்டுரை அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதி என்ற குறுகிய கால எல்லையை தமது ஆய்வுக்கான காலமாக வகுத்துக் கொண்ட பேராசிரியர் தமது கட்டுரையின் தலைப்பைப் பின்வருமாறு குறித்துள்ளார்: ‘CASTE IN NORTHERN SRI LANKA AND […]

மேலும் பார்க்க

தலித் எழுச்சியில் ஹரிஜனங்கள் 

22 நிமிட வாசிப்பு | 5850 பார்வைகள்

இந்த இயலுடன் இருபதாம் நூற்றாண்டு வரையான தமிழ்ப் பண்பாட்டுச் செல்நெறி நிறைவுக்கு வரும். இங்கிருந்தான பயணிப்புக்கான தேடல் குறித்து அடுத்த பகுதிக்குரிய நான்கு இயல்கள் பேசவுள்ளன. இங்கே பேசுபொருளாக உள்ள தலித் – ஹரிஜன் என்பன தமிழகத்துக்கு அப்பாலான விடயங்களாக இருந்த போதிலும் தமிழ்ப் பண்பாட்டில் ஆழத் தடம் பதித்தவை. எந்தவொரு மக்கள் பிரிவினரும் ஏனைய பகுதியினரது தாக்குறவு இல்லாமல் சுயமாக விருத்தி பெற்றதும் இல்லை, அவற்றின் வாயிலாக ஏற்படும் […]

மேலும் பார்க்க

குயர் மக்கள் தொடர்பான அசைவியக்கங்களும் சமூக ஊடகங்கள் மூலமான வலுப்படுத்தலும்

18 நிமிட வாசிப்பு | 6149 பார்வைகள்

சமூகச் செயற்பாடுகள் பல்வேறு வழிகளிலும் வடிவங்களிலும் இடம்பெறுகின்றன. பால்நிலை ரீதியில்  ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான சமூகச் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இலங்கை மக்களிடையே 2010 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் உள்ளடங்கலான இணையவழி ஊடகங்களின் பாவனையானது அதிகரித்தது எனலாம். இணையவழி ஊடகங்கள் குயர் மக்களுடைய செயற்பாடுகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன. நாளாந்த வாழ்வில் ஏராளமான குயர் மக்கள் இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அண்மைக்காலங்களில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்