பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் இலங்கையில் நவீன சமூகம் உருவானது. அது பெருந்தோட்டத்தின் தோற்றத்தோடு ஆரம்பமானது. ஆனால் ஆரம்பத்தில் ஆளும் வெள்ளையர்களுக்கும் ஆளப்படும் இலங்கையர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. அதற்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மொழி, கலாசார இடைவெளி; இரண்டாவது அப்போது பிரித்தானியாவில் மேலோங்கியிருந்த ‘வெள்ளையரே உயர்ந்த இனம், அவர்களே ஆளப்பிறந்தவர்கள்’ என்ற இனவாதக் கருத்தின் தாக்கம்; மூன்றாவது கண்டிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களை – அங்கு வெடித்த […]
தொடக்கக் குறிப்புகள் 2021 மே மாதம் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சியைத் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் ஒளிபரப்பிய போது நாம் எல்லோரும் திகிலுடன் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குறித்த கப்பலில் இருந்தவர்கள் உயிராபத்தின்றி மீட்கப்பட்டார்கள் என்ற செய்தி ஆறுதலைத் தந்தாலும் கப்பல் ஏன் தீப்பிடித்து எரிகிறது, அக்கப்பல் எவ்வகையான பொருட்களைத் தாங்கியிருந்தது போன்ற வினாக்களுக்கான பதில் உடனடியாக எமக்குக் கிடைக்கவில்லை. இலங்கைத் துறைமுகத்தை தனது பயண […]
பொலநறுவை மாவட்டத்தில் மொத்தமாக 80 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை 17 இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 18 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இக்கல்வெட்டுகளில் தமிழரின் சிவ வழிபாடு, நாக வழிபாடு தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் தொடர்பான 15 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். பொலநறுவை நகரில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள மன்னம்பிட்டி சந்திக்கு […]
ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் மலேசியா றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அவரது கட்டுரை ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் (2011) […]
உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களில் நிலம், நில உரிமை என்பன மோசமாகப் பாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்று. இதற்கு ஆகப்பெரிய உதாரணங்களாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்கள், சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்ட்ட தமிழர் பிரதேசங்கள் விளங்குகின்றன. பலஸ்தீனம் யூதர்களுக்காக வாக்களிக்கப்பட்ட பூமி என்ற நம்பிக்கையை, தமது நில அபகரிப்புக்கான நியாயப்பாடாக இஸ்ரேல் எடுத்துக்கொண்டது. அதேபோல் இலங்கைத் தீவு முழுவதும் பவுத்தத்தைக் காப்பதற்காகச் சிங்களவர்களுக்கு புத்தரால் அருளப்பட்டது என்பது […]
பொருளாதார அபிவிருத்தி துறையில் பங்கு கொள்ளும் துறைகளை நாம் பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகள், உற்பத்தி உட்கட்டமைப்புத் துறைகள், சமூக உட்கட்டமைப்புத் துறைகள் என மூன்று துறைகளாக பிரித்து வகையீடு செய்யலாம். உற்பத்தி உட்கட்டமைப்பு துறையினுள் விவசாயம், கால்நடை, கடற்றொழில், வனவளம், கைத்தொழில், சனத்தொகை போன்ற துறைகளும்; பொருளாதார உட்கட்டமைப்புத் துறையினுள் மின்சாரம், சக்தி வளம், நீர்வழங்கல், நீர்ப்பாசனம், போக்குவரத்து, தபால், தொலைத்தொடர்புகள், வங்கிகள் போன்ற துறைகளும்; சமூக உட்கட்டமைப்புத் துறையினுள் […]
ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார 4. பாதி – ஜனாதிபதிமுறை அரசாங்கமுறை பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கக்கூடிய இருவகை அரசாங்க முறைகள் பற்றி மேலே விபரித்தோம். பாராளுமன்ற முறையென்றோ அல்லது ஜனாதிபதி முறையென்றோ தெளிவாக அடையாளம் காண முடியாத அரசாங்க முறைகைளைக் கலப்பு முறை (Hybrid System) எனச் சில ஆய்வாளர்கள் அழைத்தனர். Duverges என்ற பிரஞ்சு தேசத்து அறிஞர் முதலில் ‘பாதி – ஜனாதிபதி அரசாங்க […]
சில வருடங்களுக்கு முன் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அதிகளவில் பெய்த மழையினால் ஏற்பட்ட குளிருடன் கூடிய காலநிலையில் சிக்கி ஏராளமான கால்நடைகள் இறந்திருந்தன. இந்த நிலையை குளிர் அழுத்தம்/ அயர்ச்சி (Cold Stress) என்பார்கள். அன்றைய நாட்களில் சூழல் வெப்பநிலை 16 பாகை செல்சியஸ் வரை குறைந்திருந்தது. அந்த வருடம் வடக்கின் மேற்படி மாவட்டங்களில் வருடம் முழுவதும் பெரிதாக மழை கிடைத்திருக்கவில்லை என்பதனால் ஒரு வறட்சியான காலநிலையே […]
1 1983 இல் சாவகச்சேரி சங்கத்தானையில், இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பியோடும் ஒருவர் இறுதியில் கனடாவை வந்து சேரும்வரை அலைந்துழலும் வாழ்க்கையை ‘The Sadness of Geography’ நூல் கூறுகின்றது. 80 களில், தனது பதின்மங்களில் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி விடுதியில் கல்வி கற்கின்ற லோகதாசனின் சுயசரிதை நூல் இதுவாகும். அநேக ஈழத்தமிழரைப் போல, 81 இல் யாழ் நூலக எரிப்பும், 83 ஆடி இனக் கொலைகளும் […]
ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புக் கூறுகளை இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் கூறினோம். அடுத்து, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாகவும் பன்மொழிச் சமூகங்களாகவும் அமையும் இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை நோக்குவோம். இந்தியா இந்தியாவின் சமஷ்டி பற்றிய எமது ஒப்பீடு பன்மொழி (சிங்களம், தமிழ், ஆங்கிலம்), பல்சமய (பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்), […]