அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் ‘Representations of the Intellectual’ என்கின்ற நூலில், ஒரு அத்தியாயம் முழுவதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கியே செல்லும். தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராதவிடத்து எந்த ஏற்றமும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது, எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் […]
இலங்கைப் பெருந்தோட்டங்களில் தொடக்ககாலத்தில் குடியேறிய தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. காலனிய அறிக்கைகள், காலனிய அதிகாரிகளின் பதிவுகள் முதலானவற்றில் இடம்பெறுகின்ற தகவல்களையும் வாய்மொழி வழக்காறுகளில் ஆவணம் பெற்றுள்ள செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அக்கால வாழ்க்கை நிலைமையை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகவல்கள் விவரிக்கின்ற தோட்டத் தொழிலாளரின் வாழ்வு, மிகவும் துயர் நிறைந்ததாகும். “ ‘அருவருப்புத்தரும் அநீதி’, ‘கொடுமை’, ‘நீக்ரோ அடிமைகளைவிடக் கேவலம்’ ” (மேற்கோள்: குமாரி […]
சகல துறைகளின் ஆக்க மூலங்களையும் இணைப்புச்செய்து செயற்பட வைப்பதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியினை தூண்டுகின்ற கட்டமைப்பாக வீதிகள் செயற்படுகின்றன. வீதிகளின் இணைப்பின் மூலம் உற்பத்தி வளங்கள் பரிமாற்றப்படுகின்றன. மனிதர்கள் இடமாற்றப்படுகின்றனர். விளைச்சல்கள் சந்தைகளை நோக்கி எடுத்து வரப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர். நுகர்வாளர்கள் தரமும் மலிவுமான பொருள்களை நுகரக்கூடியதாக இருக்கிறது. கொண்டுவரப்படும் உள்ளீட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை இயங்கச் செய்கிறது. சுற்றுலாவின் கவர்ச்சிகரமான இடங்களைச்சென்று பார்வையிட்டு மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள […]
அறிமுகம் மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் […]
மட்டக்களப்பு நகரில் இருந்து வாழைச்சேனைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் செங்கலடி சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து மகாஓயாவுக்குச் செல்லும் வீதியில் 3 1/2 கி.மீ தூரத்தில் காயங்குடா சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியின் வலது பக்கம் செல்லும் பாதையில் காயங்குடா எனும் பழமை வாய்ந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் அமைந்துள்ள பகுதி முன்பு காசிமோட்டை எனவும், இவ்வூர் காயங்குடா மலை எனவும் அழைக்கப்பட்டது. மட்டக்களப்புத் தமிழகத்தில் ஆதித் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் காயங்குடாவும் […]
ஒரு நாட்டின் பண்பட்ட சமுதாயத்தினை உருவாக்குவதற்குக் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு உதவுகின்றனவோ, அதே போன்ற பங்களிப்பினையே நூலகங்களும் ஆற்றி வருகின்றன. சிறு வயது முதல் மாணவர்களுக்கு அறிவுத் துறையில் ஆர்வத்தையும் அறிவையும் ஊட்ட அக்கறை எடுக்கும் ஓர் ஆசிரியனைப் போலவே நூலகமும் தான் சார்ந்த சமூகத்தினுள்ளே சேவையாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியருக்கு எதைப் போதிப்பது என்றதொரு வரையறை உண்டு. ஆனால் நூலகங்களின் வழங்கல் எல்லையற்றது. சுதந்திரமானதும் விரிவானதுமான தேடலுக்கு ஒருவரை […]
இலங்கையிலும், தமிழகத்திலும் கிடைத்த நாணயங்களில் ‘ஸ்ரீலங்கவீர’, ‘உரக’ என்ற பெயர்பொறித்த பொன், செப்பு நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றை முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக இலங்கையிலேயே வெளியிட்டான் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு கூறுவதற்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. இந்நாணயங்களில் பெரும்பாலானவை இலங்கையில், குறிப்பாக வடஇலங்கையிலும் தமிழ்நாட்டில் சோழமண்டத்திலுமே கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் வெற்றி கொண்டதற்காக செப்பு நாணயங்களை வெளியிட்ட இராஜராஜ சோழன் இலங்கை வெற்றிக்காக […]
ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பேராசிரியர் A.M நவரட்ண பண்டார அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் 1990 கள் முதல் இன்றுவரை இலங்கையில் இன ஐக்கியம், சமூகநீதி, ஜனநாயகம் என்பவற்றுக்காக தமது புலமைத்துறை ஆய்வுகள் மூலம் பங்களிப்புச் செய்து வருபவர். ‘Ethnic Politics and the Democratic Process in Post – Independence Sri Lanka’ என்னும் […]
மனித மூளையும் அறிவு வளர்ச்சியும் பிரபஞ்சத்திற்கும் மனித இருப்புக்குமான தொடர்புகளை, இவற்றின் உற்பத்திகள், மூலங்கள் அல்லது தொடக்கப்புள்ளிகளை, விலங்கு உலகில் வாழ்ந்த காலத்திலேயே மனித சமூகம் தேடத் தொடங்கி விட்டது. இந்தத் தேடலே விலங்கு உலகிலிருந்து இந்த மனிதக் கூட்டத்தைப் பிரித்து, மனித உலகிற்குக் கொண்டுவந்தது. அதற்கு அடிப்படையாக இருந்தது, விலங்கு மூளையிலிருந்து மாறுபட்டிருந்த மனித மூளையாகும். இந்த மூளை எவ்வாறு வளர்ந்தது? மனிதர், புற உலகின்மீது தமது உழைப்பினால் […]
கோப்பாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலிருந்து அறியக்கூடிய தகவல்களைப் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் உடுவில் கோவிற்பற்றுத் தொடர்பான விடயங்களை ஆராயலாம். இக்கோவிற்பற்றில் தாவடி, இணுவில், உடுவில், சங்குவேலி, சுன்னாகம் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. (படம்-1) ஒல்லாந்தர்கால உடுவிற் கோவிற்பற்று முழுவதும் இன்றைய வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் பகுதியாக அமைந்துள்ளது. எல்லைகள் உடுவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு கோவிற்பற்று. இதற்குக் கடலேரி அல்லது கடல் […]