தென்னாசியாவில் பண்டு தொட்டு பெரிதும் புழக்கத்தில் இருந்து வந்த ஒரு பெயராக வடமொழியில் ‘நாஹ’ என்ற பெயரும், தமிழில் ‘நாகம், நாகன், நாகர்’ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகர் […]
இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமகாராமை அமைந்துள்ளது. இவ்விடம் பண்டைய மாகம இராச்சியத்தின் முக்கிய நகரமாகும். இது பண்டைய காலத்தில் அக்குறு கொட என அழைக்கப்பட்டது. பண்டைய ருகுணு இராச்சியத்தின் முக்கிய பகுதியாக இந்நகரமும், இதனை அண்டிய பகுதியும் விளங்கியது. இந்த இராச்சியத்தின் எச்சங்களாக பல பெளத்த தூபிகளும், கல்வெட்டுகளும், கட்டிட இடிபாடுகளும், தொல்பொருள் சின்னங்களும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. இங்குள்ள திஸ்ஸவாவி குளத்தின் கிழக்குப் பகுதியில் அக்குறு […]
அறிமுகம் நாட்டுப்புறவியலின் இயங்கு தளங்களில் ஒன்றாக மந்திரம் காணப்படுகின்றது. இறையியல், சமயவியல் பற்றிய கருத்தாக்கத்திற்கு சமமாகவும் சமாந்தரமாகவும் மந்திரம் முதன்மை பெறுகின்றது. ஆவியுலக நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றன தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மந்திரம், மனிதர்களிடம் – அந்நம்பிக்கைகளை உடைய இனக் குழுக்களிடம் செல்வாக்குற்றுள்ளது. ‘இயற்கையை, அதன் அதீத ஆற்றல்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதர்கள், அதன் மீதான திகைப்பு, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதனைக் கட்டுப்படுத்தவும் தனக்குத் […]
இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றுவதற்கு, மலையகத் தமிழ் மக்களின் உழைப்பைச் சுரண்டியதில், கிழக்கிந்தியக் கம்பெனியினரே முதற் பங்கு வகித்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஆதிக்கமானது இலங்கையில் அவர்கள் தடம் பதிப்பதற்கு முன்னரே இந்திய நாட்டில் ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பை மாத்திரம் மூலதனமாகக் கொண்ட இந்திய விவசாயச் சமூகத்தில், 17 ஆம் நூற்றாண்டானது பழமையும் முதுமையுமாக செயற்பட முடியாமல் இருந்த காலமாகக் கணிக்கப்படுகின்றது. இக் காலத்தில் தமிழர்களை ஆட்சி செய்த வேற்று […]
இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் பல்வேறு பிரிவுகளை விவரமாகக் காட்டும் நிலப்படங்கள் தரும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம். லெயுசிக்காமின் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்துக்கு அடுத்ததாக யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பிரிவுகளையும் அதற்கு அயலிலுள்ள தீவுகளையும் ஒருங்கே காட்டும் நிலப்படம் உள்ளது (படம்-1). ஒல்லாந்தின் […]
தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் நான் நீடம் நிறுவனத்தில் 1992 இல் முதலீட்டு நிதி மேலாளராகியதையும், 1997 ஜனவரி மாதத்தில் சொந்தமாக கலியன் முதலீட்டு நிதியத்தைத் தொடக்கியதையும் பின்நோக்கி பார்க்கும்போது, அவை நேற்றுத்தான் நிகழ்ந்தன போன்றதொரு பரவசமே என்னுள் ஏற்படுகிறது. கலியன் முதலீட்டு நிதியத்தை ஆரம்பித்து, அடி அத்திவாரத்திலிருந்து அதைப் போராடி வளர்த்துச் சென்றேன். முதலீட்டு நிதியம் என்பது மூன்று முக்கிய பிரிவுகளைக் […]
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”-திருக்குறள் (664)- மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம். சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம். ஈழத்தில் நாமும் எங்களின் மூதாதையர்களும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். இந்த வறண்ட பூமியையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டு மிகச் சந்தோசமாக வாழ்ந்த நாட்கள் எனது நினைவில் உண்டு. எமது வாழ்க்கையானது ஒவ்வொரு […]
தமிழில் : த. சிவதாசன் கோவிட் – 19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள் விழித்தெழ ஆரம்பித்தன. கொழும்பில் பணிபுரிந்த பலர் சொந்த ஊர்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு அங்கு தமது குடும்பங்களுடன் வீடுகளுக்குள் முடக்கப்படலாயினர். துர்ப்பாக்கியமாகச் சிலர் வேலைகளை இழக்கவேண்டி ஏற்பட்டதும் உண்மை தான். உடலுழைப்பு அவசியமான பணிகளைச் செய்தவர்கள் நகர் முடக்கம் காரணமாகவும், பொதுவான […]
யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனித்துவமான சனசமூக நிலைய நூலக மரபு தத்தமது கிராமங்களின் சமூக மேம்பாடு, சமூகத்துக்கான பொது அறிவினை வழங்கல், சமூகத்தினரிடையே ஒற்றுமையைப் பேணல், சுயசிந்தனை கொண்ட அறிவுசார் சமூகமொன்றுக்கான அடித்தளத்தை வழங்கும் வகையில் வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்குதல் என்பன போன்ற காரணிகளை முன்வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாகியதே சனசமூக நிலையச் சிந்தனையாகும். அக்காலகட்டத்தில், குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பிரபுக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் மட்டுமே கிட்டியிருந்த […]
மத நாயகம் இயக்கி வந்த மனித சமூக வரலாற்றில் ஜனநாயகத்தினுடைய இயங்காற்றல் வேகம் கொள்ளத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டை இப்போது அலச வேண்டியவர்களாக இருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறில் (1789) ஏற்பட்டிருந்த பிரான்சியப் புரட்சி நிலப்பிரபுத்துவ முடியாட்சியைத் தகர்த்ததைத் தொடர்ந்து முதலாளித்துவ ஜனநாயக வாழ்முறை விரிவாக்கம் பெற்று வளர்ந்தது. அரை நுற்றாண்டுப் போராட்டங்கள் ஊடாகவே முதலாளித்துவ ஜனநாயக அரசு முறைமை நிலைபேறான உறுதியினைப் பிரான்சிலும் எட்ட இயலுமாயிற்று. அவ்வாறு எட்டிய […]