16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளின்போது, ‘கிறிஸ்தவ இராச்சியங்களாகத்’ திகழ்ந்த ஐரோப்பாவிலே மதச் சீர்திருத்தத்துக்கான சக்திகளுக்கும் மதச் சீர்திருத்தத்திற்கு எதிரான சக்திகளுக்கும் இடையிலான உள்நாட்டுக் கலவரங்கள் நடைபெற்றன. அதனூடாகவே அங்கு தேசியவாதம் தலைதூக்கி தேசிய அரசுகள் உருவாகின. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மதத் திணிப்புக்கு எதிராக எழுந்த சுதேச மதங்களின் எழுச்சிகளின் ஊடாகவே காலனித்துவ தேசியவாதம் உருவாகியது. ஐரோப்பிய – மைய காலனித்துவக் கொள்கைகளும் ஆக்கிரமிப்புகளும் கிறிஸ்தவ மதத்தின் போர்வையிலே […]
இலங்கையில் உருவான நவீன இனவாதப்போக்கின் ஊற்றுமூலத்தை, காலனித்துவம் உருவாக்கிய குறை அபிவிருத்தியிலும், பிரித்தானிய காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட மதச் சீர்திருத்த இயக்கங்களிலும், அது கடைப்பிடித்த பிரித்தாளும் ஆட்சி முறையிலும் தேடவேண்டும். அரசியல் கட்டமைப்பில் நிறுவன மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கையில் அரசியல் சக்திகள் உருவாகி, அரசியல் சீர்திருத்த கோஷங்கள் எழுவதற்கு முன்னமே மதப் பீடங்களின் செயற்பாடும் மதச் சீர்த்திருத்த இயக்கமும் அவற்றிற்கு முன்னோடியாக இருந்தன. பிற்காலத்தில் அரசியல் கட்சிகள் அதன் இடத்தைப் […]
இலங்கையில் மாத்திரமல்லாது காலனித்துவ நாடுகள் பலவற்றிலும் அரும்புநிலை தேசியஎழுச்சி மதங்களின் மீளாக்க எழுச்சியுடன் இணைந்ததாகவே காணப்பட்டது. இவற்றிடையே பொதுவான சில இலட்சியங்கள் இருந்தன. மன்னர் ஆட்சி நிலவிய நிலவுடமைக் காலகட்டத்தில் மன்னர்களும் அரசுப் பிரதானிகளும் தளபதிகளும் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் மதபோதகர்கள் இருந்தனர். தொழிற்சங்கமோ அரசியல் கட்சிகளோ அத்தகைய வேறு நிறுவன அமைப்புகளோ இல்லாத அன்றைய சமுதாய அமைப்பில் நாடுபூராகவும் பரந்து கிடந்த ஒரே நிறுவனமாக […]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் இலங்கையில் நவீன சமூகம் உருவானது. அது பெருந்தோட்டத்தின் தோற்றத்தோடு ஆரம்பமானது. ஆனால் ஆரம்பத்தில் ஆளும் வெள்ளையர்களுக்கும் ஆளப்படும் இலங்கையர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. அதற்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மொழி, கலாசார இடைவெளி; இரண்டாவது அப்போது பிரித்தானியாவில் மேலோங்கியிருந்த ‘வெள்ளையரே உயர்ந்த இனம், அவர்களே ஆளப்பிறந்தவர்கள்’ என்ற இனவாதக் கருத்தின் தாக்கம்; மூன்றாவது கண்டிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களை – அங்கு வெடித்த […]
இலங்கையில் உயரடுக்கின் உருவாக்கமானது பிரித்தானியக் காலனிய ஆட்சி காலத்தில் ஆங்கிலம் கற்ற உயர் வகுப்பினரின் தோற்றத்தோடு உருவானது என்ற தவறான கருத்து சிலரிடையே நிலவுகிறது. உண்மையில் முன்பே குறிப்பிட்டதைப் போல இந்தியாவைப் போலல்லாமல், இலங்கையில் காலனித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கத்தின் மேல்தட்டு அழிக்கப்பட்டு, இரண்டாம் நிலைப் பிரிவு தகவமைக்கப்பட்டு காலனித்துவக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் உருவாக்கத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், இந்தியா […]
இலங்கை அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் புராதன காலம் தொட்டே சாதியம் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இதற்கு இந்து மதத்தின் தெய்வீக வடிவம் வழங்கிய தாக்கமே காரணமானது. பெளத்த மதம் சாதியத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகத்தான் உருவானது. இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் சாதியத்துக்கு எதிரான வலுவான இயக்கமாக பெளத்த மதம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையில் அரசர்களும் பின்னர் காலனியவாதிகளும் – தங்கள் வர்க்க நலனையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு சாதியம் வலுவான ஆயுதம் […]
முதலாளித்துவ யுகத்தில் ஐரோப்பியர்களின் எழுச்சிக்கும் தெற்குலகின் வீழ்ச்சிக்குமான காரணங்களை பின்வருமாறு சுருக்கலாம்: 1) விஞ்ஞானம், மனித குல, பொருளாதார, நாகரிக வளர்ச்சி என்பன ஒரு நாட்டுக்கோ ஒரு கண்டத்துக்கோ ஓர் இனத்துக்கோ சொந்தமானதல்ல. அவை மனித குலம் தோன்றிய காலம் முதல், ஆதிக்குடிகளாகவும், பின்னர் கோத்திரங்களாகவும், அரசுகளாகவும், தேசங்களாகவும் அது பரிணாமம் அடைந்து காலங்காலமாக, சிறுகச்சிறுக, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு படிப்படியாக வளர்க்கப்பட்ட திரட்சியேயாகும். இவ் வளர்ச்சியில் […]
கடந்த தொடரிலே, வரலாற்றில் நீண்டகாலம் அபிவிருத்தியில் முன்னிலை வகித்த ஆசியாவையும், அதற்கடுத்த ஆபிரிக்காவையும் முந்திக்கொண்டு பிற்காலத்தில் ஐரோப்பா முன்னேறியதற்கு அங்கு ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியும் கைத்தொழில் புரட்சியும் காரணமானது என்பதைப் பார்த்தோம். இதற்கு ஆதாரமான விஞ்ஞான வளர்ச்சிக்கு, ஏனைய கண்டங்களை விட ஐரோப்பாவில் வளங்கள் குறைவாக இருந்ததும், அவற்றைத் தேடிப் பிறகண்டங்களுக்குச் செல்லவேண்டிய தேவையின் நிர்ப்பந்தமும் ஒரு பிரதான காரணமானது என்பதனையும் பார்த்தோம். அதைவிட இன்னும் இரண்டு காரணங்கள் […]
இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள் அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள் அல்ல. இலங்கை சிலசமயங்களில் தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள் இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது. அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) […]
1867 இல் பத்து ஏக்கரில் தொடங்கப்பட்ட தேயிலை உற்பத்தி 1887 ஆம் ஆண்டில் – இருபது வருடங்களுக்குள் – சுமார் 350,000 ஏக்கராக விரிவடைந்தது. இவ்வளவு விரைவாக தேயிலை வளர்ச்சியடைவதற்கு அழிந்த கோப்பிப் பெருந்தோட்டம் உருவாக்கிவிட்டுச்சென்ற பெருந்தோட்ட நிலங்களையும் கட்டமைப்பையும் அது எளிதாக நிரப்பக்கூடியதாக இருந்தமை தான் காரணம். தேயிலை விளைந்த நிலப்பரப்பு கோப்பி பெருந்தோட்டங்கள் இருந்த நிலப்பரப்பை விடவும் விரிவடைந்து சென்றது. 1890 களில் பெரும்பாலான தேயிலைத்தோட்டங்கள் திம்புள்ள, டிக்கோயா, […]