இலங்கை, பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றது. 1956 தனிச் சிங்களச் சட்டம், இன்னொரு இனத்தின், மொழியின் மீதான வெறுப்பிற்கான மிகச் சிறந்த உதாரணமாகும். அதன் நீட்சியாக 1956, 1958 இல் தமிழர் மீதான படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஒரு சிறிய தீவு நாட்டின் அனைத்து இனங்களையும், அவர்களின் மொழி, கலாசாரங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பது அரச அதிகாரத்தை எடுத்துக் கொண்டவர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான், பின்னரான […]
எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான பயணம்’ (A Passage North) நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்தத் தமிழ் […]