தமிழில்: த. சிவதாசன் புதுமையின் பிரகாசத்தால் குருடாக்கப்பட்டு சில வேளைகளில் நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத்தவறிவிடுவதுண்டு. பிரகாசமான எதிர்காலம் கொண்டுவந்து குவிக்கப்போகிறது எனக் கருதி புதையல்களையும் செல்வத்தையும் நம்பி காலக்குழிகளில் மங்கிக்கிடக்கும் எமது ஆபரணங்களை மறந்துவிடுகிறோம். எல்லோரும் இத்தவறுகளை இழைக்கிறார்கள் என நான் கூறவரவில்லை. 1990 களில் பல அமெரிக்க நிறுவனங்கள் நமது வேம்பினதும் மஞ்சளினதும் மகிமைகளை அறிந்து அவற்றினால் கொள்ளை இலாபமீட்டுவதற்காக அவற்றின் மீது காப்புரிமைகளைப் (Patent Rights) […]
2020 கோவிட் – 19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது தான் எங்கள் மருத்துவப் பணியாளர்களின் அருமை எங்களுக்குத் தெரிந்தது. கோவிட் – 19 எவரையும் விட்டுவைக்கவில்லை என்பதால் இவர்களை நாம் நேசிக்கத் தள்ளப்பட்டோம். அது நோய்த் தொற்றின் காரணமாக அல்ல; மாறாக ஊர் முடக்கங்கள், வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்படுதல், சமூகச் சந்திப்புகளுக்குத் தடை, வருமான இழப்பு, பொருளாதாரச் சீரழிவு மற்றும் வீடுகளுக்குள் உறவுகளுடன் வைத்துப் பூட்டப்படுவதால் ஏற்படும் மன […]
“தொண்டு, வீட்டில் ஆரம்பிக்கிறது” என்பார்கள். வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட சிவனருள் இல்லம் என்னும் தொண்டு நிறுவனம் ஒரு குழந்தைகள் அனாதை இல்லமாகத்தான் ஆரம்பமானது. 2004 ஆழிப்பேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை எடுத்து அது பராமரித்தது. தானமாகக் கிடைத்த பணத்தில் ஆரம்பித்த இவ்வில்லம் இப்போது வருமானமீட்டும் ஒரு பெரிய நிறுவனமாக வட மாகாணமெங்கும் பரந்து நிற்கிறது. அதன் குழந்தைகள் வளர்ந்து முதியவர்களாகும்போது அவர்களுக்கும், வடக்கு-கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கும், நிலையான வருமானம் […]
தமிழில் : த. சிவதாசன் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் பிரதான பணிப்பாளர் ஒருவருடன் பேசக் கிடைத்தது. ஓய்வு வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் அந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரியவரிடம் “போர் முடிந்து பலவருடங்களாயினும் ஏன் அந்நிறுவனம் வடக்கில் முதலீடு செய்யவில்லை” எனக் கேட்டேன். “வடக்கை விட இலகுவாக இலாபமீட்டக்கூடிய இதர இடங்கள் இருக்கின்றன” என அவர் சாவதானமாகக் கூறினார். அதில் எந்தவிதத் தவறுமில்லை. பங்குச்சந்தை முதலீட்டை நம்பியிருக்கும் […]
தமிழில் : த. சிவதாசன் கோவிட் – 19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள் விழித்தெழ ஆரம்பித்தன. கொழும்பில் பணிபுரிந்த பலர் சொந்த ஊர்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு அங்கு தமது குடும்பங்களுடன் வீடுகளுக்குள் முடக்கப்படலாயினர். துர்ப்பாக்கியமாகச் சிலர் வேலைகளை இழக்கவேண்டி ஏற்பட்டதும் உண்மை தான். உடலுழைப்பு அவசியமான பணிகளைச் செய்தவர்கள் நகர் முடக்கம் காரணமாகவும், பொதுவான […]
தமிழில் : த. சிவதாசன் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் புதிய பீடத் தலைவராக செப்டெம்பர் 2021 முதல் நியமனம் பெற்ற டாக்டர் ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன் (சுரேன்) அவர்களைச் சந்திக்கும்வரை சர்வதேசங்களுடனான ஊடாட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நான் அதிகம் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஒரு தொழில்துறையின் வெற்றிக்கு நிபுணத்துவம், அனுபவம், ஆராய்ச்சி, நிதியுதவி ஆகியன எவ்வளவு முக்கியமோ அதே போன்று கல்வித்துறையின் வெற்றிக்கும் அவை அவசியமானவை. தனது நண்பர்கள், சக பணியாளர்கள் என்ற […]
தமிழில் : த. சிவதாசன் இலங்கை பூராகவும் உள்ள இளைய தலைமுறையினர் உகந்த வேலையைப் பெறுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரப்படி, 15 முதல் 19 வயது வரையுள்ள இளையவர்களில் 4 பேர்களில் ஒருவர் வேலையைப் பெறமுடியாது அவஸ்தைப்படுகின்றார். 20 முதல் 29 வயதுள்ளவர்களில் 7 பேர்களில் ஒருவருக்கு வேலை கிடைப்பது அரிது. ஒருவர் வேலை தேடி, அது கிடைக்காதபோது அவர் வேலையற்றவர் (unemployed) என்ற அந்தஸ்தைப் […]
தமிழில் : த. சிவதாசன் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பம் செழித்தோங்குவதற்கு, Yarl IT Hub எனும் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் The Yarl Geek Challenge (YGC) எனப்படும் போட்டி நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகும். இந் நிகழ்வு இலங்கை முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நூற்றுக்கணக்கான அறிவுடையோரை உருவாக்கித் தந்ததுடன் இத் துறையில் பிரபலமான பல நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள விசேடம் என்னவென்றால் YGC தனியே தமது […]
தமிழில் : த. சிவதாசன் சேதனப் பாவனையை நோக்கிய இலங்கையின் பயணம் வடக்கிலுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைத் தர முடியாது. போர்க்கால பொருளாதாரத் தடைகளும், கட்டுப்பாடுகளும் வடக்கு மக்களை, இறக்குமதியில் தங்கியிராது இயற்கையில் மட்டுமே நம்பியிருக்க எப்போதே பழக்கப்படுத்தி விட்டன. சில பொருட்கள் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தன. சில, கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்பட்டன. பெண்களின் சுகாதாரப் பொருட்கள், பற்றரி, பெற்றோல், சீமந்து, அசேதனப் பசளை, களைகொல்லி உட்படப் பல பொருட்கள் வடக்கில் காணாப் பொருட்களாகிவிட்டன. […]