முத்துவடிவு சின்னத்தம்பி, Author at Ezhuna | எழுநா

முத்துவடிவு சின்னத்தம்பி

பெருந்தோட்ட மக்களும் சமூக நலன் சேவைகளும் : நேற்றும் இன்றும் நாளையும்

20 நிமிட வாசிப்பு | 18382 பார்வைகள்

அறிமுகம் காலனித்துவ ஆட்சியின் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் பெருந்தோட்ட விவசாய முறையொன்று தோன்றி வளர்ந்தது என்பதும், இன்று வரையும் அது எமது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வகித்து வருகின்றது என்பதும் யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்விவசாய முறையின் பிரதான உற்பத்தி அலகாகவிருக்கும் தோட்டங்கள் முக்கியமானதொரு தாபன அமைப்பாக இன்று விளங்குகின்றன. பெருமளவு எண்ணிக்கையான தொழிலாளரைக் கொண்ட அமைப்பாக இருந்து வரும் அதேவேளையில் இவை தோட்டங்களில் […]

மேலும் பார்க்க

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனங்கள் – ஒரு கூர்மையான ஆய்வு

11 நிமிட வாசிப்பு | 8463 பார்வைகள்

பெருந்தோட்டத்துறையில் வேதனப் பொறிமுறைகள் உலகில் செயற்பட்டுவரும் ஏறக்குறைய அனைத்து விவசாயக்கம்பனிகளுமே தமது ஊழியருக்கு நாளாந்த வேதனங்களைச் செலுத்தும் ஒரு முறையையே பின்பற்றிவருகின்றன. பெருந்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இதற்கு விதிவிலக்கன்று. இந்தக்கம்பனிகள் எங்கெங்கு உருவாக்கப்பட்டனவோ அங்கெல்லாம் ஊழியருக்கு அவை நாளாந்த வேதனங்களையே செலுத்திவருவதோடு மலிவான ஊழியம் அவற்றின் ஒரு விசேட பண்பாக இருந்து வருகின்றது. அதாவது, தொழிலாளருக்குச் செலுத்தப்படும் வேதனங்கள் குறைந்தமட்டத்திலேயே பராமரிக்கப்பட்டதோடு, நெடுங்காலத்திற்கு அவை தேக்கநிலையிலும் வைக்கப்பட்டன. […]

மேலும் பார்க்க

பெருந்தோட்ட வீட்டுத்துறையினரின் உணவுக்கான பாதுகாப்பு

13 நிமிட வாசிப்பு | 7007 பார்வைகள்

கடந்த சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அந்நியச் செலாவணியை உழைத்துக் கொடுப்பதிலும், 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களின் மீதான தீர்வைகள் அகற்றப்படும்வரை அரசாங்க வரிவருவாயின் பெரும்பங்கினை உழைத்துக் கொடுப்பதிலும் பெருந்தோட்டங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களித்து வந்தன. இத்துறையினது பொருளாதாரப்பங்களிப்பில் அண்மைக்காலங்களில் சற்றுத்தளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும் அது இன்னும் பொருளாதாரத்திற்குக் கணிசமான பங்கினை அளித்து வருகின்றது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.   இத்துறையில் தொழில்புரியும் தொழிலாளர்கள் நாட்டினது சனத்தொகையில் மிகமோசமான […]

மேலும் பார்க்க

இலங்கையில் தேயிலைத்தொழிலாளர்களுக்கான சமூகநலன் சேவைகளும் உற்பத்தித்திறனும்

10 நிமிட வாசிப்பு | 8008 பார்வைகள்

தோட்டக் கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே 1998 ஆம் ஆண்டில் தொழிலாளரின் நாளாந்த வேதனம் தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டுஒப்பந்தத்தின் கீழ், தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் ஊடாக நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டுவந்தது. 2011  ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி, நாளாந்தவேதனம் ரூபா 515.0 ஆகவும், தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளின் பின்னர் ரூபா 620.00 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலே கூறியவாறு, நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டபோது […]

மேலும் பார்க்க

உலக வர்த்தகத்தாபனத்தின் (WTO) கீழ் இலங்கையும் சர்வதேசத் தேயிலை வர்த்தகமும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 8866 பார்வைகள்

இலங்கையின் வர்த்தகக்கொள்கைகளும் உறுகுவேசுற்று உடன்படிக்கைகளும் இறுப்புகள் GATT இல் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். எனவே, அது வர்த்தக இறுப்புகள் தொடர்பான உலகவர்த்தக தாபனத்தின் விதிகளைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும். உறுகுவேசுற்று விவசாய உடன்படிக்கையின் கீழ் விவசாயப்பண்டங்களின் மீதான இறுப்புகளின் உச்சவரம்பை இலங்கை 50.0 வீதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், இன்று நடைமுறையிலிருக்கும் இறுப்புகள் இதிலும் பார்க்க குறைவானவையேயாகும். எனவே, மேற்படி உச்சவரம்பு எதிர்காலத்தில் இறுப்புகளை உயர்த்துவதற்கான ஒரு உச்சவரம்பேயாகும். உலக வர்த்தகத்தாபனத்தின் […]

மேலும் பார்க்க

உலக வர்த்தகத்தாபனத்தின் (WTO) கீழ் இலங்கையும் சர்வதேசத் தேயிலை வர்த்தகமும் – பகுதி 1

13 நிமிட வாசிப்பு | 11115 பார்வைகள்

உலக வர்த்தகத் தாபனம் சுமார் எட்டு வருடகாலமாக நடைபெற்றுவந்த உறுகுவேசுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் 1994ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. உறுகுவேசுற்று பேச்சுவார்த்தைகளானவை பல்பக்கவர்த்தக அமைப்பினது வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் போன்றதொரு தாபனத்தை உருவாக்குவதன் மூலம் வர்த்தகம், இறுப்புக்கள் என்பன தொடர்பான பொதுஒப்பந்தத்தின் (General Agreement  on Trade and Tariff – GATT) தாபனரீதியான அம்சங்களை பலப்படுத்துவதே மேற்படி பேச்சுவார்த்தைகளின் […]

மேலும் பார்க்க

பிரதேசம் சாராத மக்களுக்குரிய பொருளாதாரப் பரிமாணங்கள் : இலங்கைப் பெருந்தோட்டத் தமிழர்களின் விவகாரம்

26 நிமிட வாசிப்பு | 13858 பார்வைகள்

அறிமுகம் இலங்கையில் பிரதேசம் சாராத சமூகங்களில் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தமான பொருளாதாரப் பரிமாணங்களை இந்தக் கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்தச் சமூகம் உற்பத்தி செய்யும் நிதி எவ்வளவு, அபிவிருத்தி நோக்கங்களுக்காக அது முதலீடுகளின் வடிவத்தில் அரசிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுக்கொள்கின்றது என்பதை இந்தக்கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்த அம்சங்களை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்தச் சமூகத்தின் மானுட, சமூக, அபிவிருத்தியை வரலாற்று […]

மேலும் பார்க்க

உரிமைகள் மறுக்கப்படுதலும் வறுமையும்

26 நிமிட வாசிப்பு | 19136 பார்வைகள்

பெருந்தோட்ட மக்களின் வறுமைநிலை இலங்கைவாழ் இந்தியத்தமிழர்களுள் பெரும்பாலானோர் (60 – 65 வீதமானோர்) இன்றும் பெருந்தோட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். எஞ்சியோர் நாட்டின் சில பிரதேசங்களில் செறிவாகவும், வேறுசிலவற்றில் பரவலாகவும் வாழுகின்றனர். தோட்டங்களுக்கு வெளியே வாழும் இவர்களைப் பின்வரும் ஆறு பிரிவுகளுக்குள் அடக்கலாம்: பெரியதும் சிறியதுமான வர்த்தகர்கள் அரச – தனியார் துறைத்தாபனங்களில் தொழில்புரிவோர் தொழில்சார் வல்லுநர்கள் அண்மைக்காலங்களில் தோட்டங்களைவிட்டு வெளியேறி கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சில்லறைக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள், உல்லாசப்பயண விடுதிகள் போன்றவற்றில் […]

மேலும் பார்க்க

மலையகத்தில் வாக்குரிமையின் விஸ்தரிப்பும் மாற்றங்களும்

5 நிமிட வாசிப்பு | 8073 பார்வைகள்

தோட்டத்தமிழ் மக்களின் மறைந்த தலைவர் திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதும், அமரத்துவம் அடையும்வரை அவர் மந்திரிசபையில் ஒரு உறுப்பினராக இருந்துவந்ததும், 1988 ஆம் ஆண்டு பெருந்தோட்டச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டதும், மாகாணசபைமுறையுடன் நாடாளுமன்றம், மாகாணசபைகள், பிரதேசசபைகள் என்பவற்றிற்கான தேர்தல்களில் விகிதாசாரப்பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்யப்பட்டதும் தேர்தல் செயல்முறையில் இச்சமூகத்தைச் சேர்ந்தோர் கூடுதலான ஈடுபாடு காட்டுவதற்கு வழிவகுத்தன. மேற்படி காரணிகள் அரசியல் […]

மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டங்களிலே பெண்களது பின்தங்கிய நிலை

7 நிமிட வாசிப்பு | 13741 பார்வைகள்

பெண்களது கடந்தகால – நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர்தினம் (International Women’s Day) முதன்முதலாக 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமுடிவில் 2011 ஆம் ஆண்டு அது நினைவுகூரப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் அதேதினத்தில் பூகோளரீதியாகத் தொடர்ந்து அது கொண்டாடப்பட்டும் வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும்போது ஏதாவதொரு முக்கிய விடயத்தைக் கருப்பொருளாக வைத்தே அத்தினம் கொண்டாடப்படும். அண்மைக்காலங்களில் பெண்களது சமூக – […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்