பண்டுதொட்டு தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. இத்தொடர்புகளே தமிழகத்தில் இருந்து மக்கள் புலப்பெயர்ச்சி, அரசியல் படையெடுப்பு, வர்த்தகம், பண்பாடு என்பன இலங்கையில் ஏற்படக் காரணமாகியது. இதில், வட இலங்கையின் அமைவிடம் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைவிடத் தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால் தமிழகத்தின் செல்வாக்கை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் படிக்கல்லாக இது திகழ்ந்தது. இச்செல்வாக்கு சங்ககாலத்தில் மிகச்சிறப்பாக இருந்ததை கட்டுரை ஆசிரியர் பூநகரி வட்டாரத்தில் கண்டுபிடித்த முதுமக்கள் […]
இலங்கையின் பண்பாட்டு வரலாற்றைத் தென்னிந்தியாவின் தென்பகுதியுடன் குறிப்பாகத் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி ஆராயும் போக்கு அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதற்குத் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பண்பாட்டலைகள் சமகாலத்தில் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியதே காரணமாகும். இதை இலங்கையின் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது. இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால எழுத்து, மொழி, […]
இலங்கையிலும், தமிழகத்திலும் கிடைத்த நாணயங்களில் ‘ஸ்ரீலங்கவீர’, ‘உரக’ என்ற பெயர்பொறித்த பொன், செப்பு நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றை முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக இலங்கையிலேயே வெளியிட்டான் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு கூறுவதற்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. இந்நாணயங்களில் பெரும்பாலானவை இலங்கையில், குறிப்பாக வடஇலங்கையிலும் தமிழ்நாட்டில் சோழமண்டத்திலுமே கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் வெற்றி கொண்டதற்காக செப்பு நாணயங்களை வெளியிட்ட இராஜராஜ சோழன் இலங்கை வெற்றிக்காக […]
தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று மரபு கொண்ட ஒரு நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவியபோது கூடவே அம் மத வரலாற்றைப் பேணும் மரபும் அறிமுகமாகியது. இவ்வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு தீபவம்ஸ (கி.பி 4 ஆம் நூற்றாண்டு), (மகாவம்ஸ கி.பி 6 ஆம் நூற்றாண்டு), சூளவம்ஸ முதலான பாளி நூல்கள் எழுந்தன. இவை பௌத்த விகாரைகளில் வைத்து எழுதப்பட்டதினால் அம் […]
அறிமுகம் இலங்கைத் தமிழரின் பாரம்பரியத் தாயகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆதிக்குடிகள், அவர்களின் மொழி, பண்பாடு என்பன பொறுத்து வரலாற்று ஆசிரியர்களிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இற்றைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இங்கு தொன்மையான தமிழர் நாகரிகமும், சுதந்திர தமிழரசும் ஆதியில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் அற்ற நிலையில் இலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்து இக்கருத்து கூறப்பட்டதினால் பிற்கால […]
அண்மைக்காலத்தில் வடஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய தொல்லியல் மையங்களில் தீவகத்தில் உள்ள சாட்டியும் ஒன்றாகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் வேலணைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இலங்கையின் வரலாற்றுப் பழைமை வாய்ந்த துறைமுகங்களைக் கொண்ட கிராமம் என்ற வகையில் சாட்டிக்குத் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. இதன் அமைவிடம் புவிச் சரிதவியல் அடிப்படையில் தமிழகத்திற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அமைந்திருப்பதால் இவ்விடம் பண்டுதொட்டு தென்னிந்தியாவுடனும், […]
இலங்கைத் தமிழரிடையே அரச மரபு தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆராய முற்படும் ஒருவர் அதன் தொடக்கப் புள்ளியாக தலைநகர் கதிரமலையைக் குறிப்பிடுவார். இதற்கு, 17 – 18 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலான தமிழ் இலக்கியங்களில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் உக்கிரசிங்க மன்னன் சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாகக் கொண்டு கதிரமலையில் இருந்து ஆட்சி செய்த வரலாறு கூறப்பட்டிருப்பது முக்கிய காரணமாகும். இக் […]
சமகாலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் பொதுவாக வன்னி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வன்னி உள்ளிட்ட வடஇலங்கை பாளி மொழியில் நாகதீபம், உத்தரதேசம் எனவும், தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 13 ஆம் நாற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை அரசு வீழ்ச்சியடைந்து சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனியாவிற்கு நகர்ந்த […]
அறிமுகம் தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய போது அம்மதத்தையும் அம்மதம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றின் வரலாற்றையும் வாய்மொழிக் கதையாகப் பேணும் மரபும் தோற்றம் பெற்றதே காரணமாகும். அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே தீபவம்சம், மகாவம்சம, சூளவம்சம் முதலான பாளி வரலாற்று இலக்கியங்கள் […]
கட்டுக்கரையைத் தொடர்ந்து வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு முக்கிய பெருங்கற்கால பண்பாட்டு மையமாக நாகபடுவான் என்ற இடம் காணப்படுகின்றது. இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் இலங்கையில் நாக வழிபாட்டு மரபு தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதிய செய்திகளைக் கூறுவதாக இருக்கின்றன. எமது அறிவுக்கு எட்டியவரை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில வகையான சான்றுகள் தென்னாசியாவின் […]