இன்று உருவாகியுள்ள புதிய உலக ஒழுங்கில் இந்தியா, சீனா, இலங்கை என்பன இணைந்து இயங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனும் குரல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. இத்தகைய புதிய செல்நெறி துலக்கமாகத் தெரிகிறதா எனும் கேள்வி பலரிடமும் தோன்ற இடமுள்ளது. ஏற்கனவே நிலவி வந்த ஒற்றை மையமான ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கம் தளம்பல் நிலையை அடைந்து, பழைய நியமங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மாறுநிலைக் காலம் என்பதைக் கடந்து, உறுதியான புதிய உலக ஒழுங்கு […]
பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட புதிய அரசாங்கம் இயங்கத் தொடங்கி நான்கு மாதங்கள் கடந்துள்ளன. இந்த இடைவெளியில், முந்தைய ‘புதிய அரசாங்கம்’ ஒவ்வொன்றினதும் அரங்கேற்றங்களின் பின்னரும், இன்றும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் கவனிப்புக்குரியன. இன்றைய கணிப்பில் அறுபது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் வலுவான நம்பிக்கையுடன் மேலும் விருத்தியை எதிர்பார்ப்பதாகவும் கருத்துரைத்துள்ளனர். பழையதன் மீது வெறுப்புற்று ஏற்படுத்தப்படும் புதிய அரசாங்கங்கள் மீது, இதே கால இடைவெளியில், முன்னர் இந்தளவிலான நம்பிக்கை […]
புலப்பெயர்வடைந்த ஈழத் தமிழர்களின் இதயப்பகுதி எனக் கருதப்படும் கனடாவில் எம்மவர்க்குப் பேரதிர்ச்சி தரும் நிகழ்வொன்று நடந்தேறி வருகிறது. தமது புதிய தாயகமான கனடாவில் மிகக் கடின உழைப்பைச் செலுத்தி உளச் சோர்வுக்கு ஆட்பட நேர்ந்தாலும், அதற்கு ஈடாக வள வாழ்வு கிட்டுவதில் உழைக்கும் ஈழத்தமிழ் மக்களுக்குத் திருப்தி உள்ளது. அதைவிடவும் தமது சுயநிர்ணய உரிமையைக் கனடா அனுமதிப்பதில் அவர்கள் திருப்தி கொள்கின்றனர். ஜனநாயகப் பண்பை விரும்பும் அத்தகைய உழைக்கும் ஈழத் […]
நாற்பது வருடங்களாகத் தான் சூழல் பாதுகாப்பு எனும் விவகாரம் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. அரைநூற்றாண்டுக்கு முன்னர் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை நவ காலனித்துவப் பிரயோகத்துடன், விடுதலை பெற்ற தேசங்களில் தொடர்ந்து மேற்கொண்டு, எமது வளங்களைத் கபளீகரம் செய்வதனை முறியடிக்கும் வகையில் சுயசார்புப் பொருளாதாரம் முன்னெடுக்கப்படலாயிற்று. உலக மூலதன மேலாதிக்கம் வலுப்பெற்ற எண்பதாம் ஆண்டுகளில், நவ காலனித்துவத் தேசங்களால் திறந்த பொருளாதார முறைமை ஊடாகக் கார்ப்பிரேட் ஏகாதிபத்தியம் எமது பிராந்தியக் அபகரிப்புகளை […]
உலக அரங்கில் சமூக மாற்றச் செல்நெறி வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக மட்டும் நடந்தேறி வரவில்லை; வர்க்கப் பிளவுறாத காரணத்தால் புராதனப் பொதுவுடமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டு இயங்கி வந்த ஆசிய உற்பத்தி முறைமைக்கு உரிய எமது வாழ்வியலில் இன்னொரு வகையிலான சமூக அமைப்பு மாற்றப் போக்கு இடம்பெற்று வந்துள்ளது என்பதனைக் குறித்து இந்தத் தொடரில் பேசி வருகிறோம். முழுச் சமூக சக்திகள் மேலாதிக்கம் பெற்றதன் வாயிலாக ஏனைய முழுச் சமூக […]
மிக நீண்டநெடிய காலச் சுழற்சியுடன் இயங்கியவாறுள்ள இந்தப் பூமிப் பந்தின் மிகக் குறுகிய இலட்சம் வருடங்களுக்கான வாழ்வைப் பெற்ற ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் மனிதர்களான நாம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமிப் பந்தின் அனைத்துத் திசைகளிலும் பரந்து வியாபித்து ஆட்சி செலுத்தும் சக்தியாக ஆகியிருந்தோம். மிகச் சில நூற்றாண்டுகளில் தோற்றம்பெற்று விருத்தியடைந்த மூலதனம் பூவுலக நாடுகள் அனைத்தையும் ஒரு கிராமம் போல ஒருங்கிணைத்துக் கொண்டது. மூலதன விருத்தியின் நல்ல […]
புதிய சமூக சக்தியாக ஐரோப்பாவில் முதலாளி வர்க்கம் எழுச்சியடைந்து வந்த போது அரசையும் கல்வியையும் மதத்தினின்று பிரித்துச் சுதந்திரமாக இயங்க வழி கோலியதன் வாயிலாக ஆன்மிகத்தைத் தனிநபர் விவகாரமாக ஆக்கிக் கொண்டது. அதன் பேறாக விஞ்ஞான அறிவு எல்லைகள் தாண்டிப் புதிய தளங்களுக்குத் தொடர்ந்தும் விரிவாக்கம் அடையலாயிற்று. அதுவரை நிலப்பிரபுத்துவச் சமூக முறைமையில் அதியுச்சங்களைத் தொட்டு மேலும் முன்னேற இயலாமல் வீழ்ச்சியுறத் தொடங்கியிருந்தன இந்தியாவும் சீனாவும். தமது நாட்டுத் தொழிலாளர்களை […]
இந்த இயலுடன் இருபதாம் நூற்றாண்டு வரையான தமிழ்ப் பண்பாட்டுச் செல்நெறி நிறைவுக்கு வரும். இங்கிருந்தான பயணிப்புக்கான தேடல் குறித்து அடுத்த பகுதிக்குரிய நான்கு இயல்கள் பேசவுள்ளன. இங்கே பேசுபொருளாக உள்ள தலித் – ஹரிஜன் என்பன தமிழகத்துக்கு அப்பாலான விடயங்களாக இருந்த போதிலும் தமிழ்ப் பண்பாட்டில் ஆழத் தடம் பதித்தவை. எந்தவொரு மக்கள் பிரிவினரும் ஏனைய பகுதியினரது தாக்குறவு இல்லாமல் சுயமாக விருத்தி பெற்றதும் இல்லை, அவற்றின் வாயிலாக ஏற்படும் […]
தமிழ்ப் பண்பாட்டின் ஆரம்பம் தொட்டு மத்தியகால நிறைவு வரையான வளர்ச்சி நிலைகளைப் பார்த்து வந்துள்ளோம். நவீன யுகத் தொடக்கத்தில் ஆன்மிக நாத்திகம் என்ற புதிய கருத்தியல் நிலைப்பாடு பாரதியூடாக அறிமுகம் ஆகியிருந்தமையைச் சென்ற அமர்வில் பேசுபொருள் ஆக்கியிருந்தோம். அதன் அடுத்த பரிணமிப்பாக நாத்திகவாத அணியொன்று வெகுஜன இயக்கத்தை எழுச்சியுறச் செய்து தமிழக மண்ணில் பாரிய மாற்றத்துக்கு வித்திட்டிருந்தமையை இங்கு கவனம் கொள்ளவோம். வர்க்கப் பிளவாக்கம் நடந்தேறிய ஐரோப்பிய வாழ்நிலை சாத்தியப்படுத்தியிருந்த […]
இலங்கை அரசியல் அமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதன் அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதென அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அப்படி என்ன ஆபத்து பௌத்தத்துக்கு நேர்ந்துவிடும் அறிகுறி தென்பட்டதில் இதனை அவர் பேசும் நிலை ஏற்பட்டது? ‘அரசியலில் இருந்து மதம் விலக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்ற குரல் வலுத்து வருகிறது என்ற வகையில் இதனைக் […]