கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 2 of 11

கந்தையா சண்முகலிங்கம்

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர் நீதிமன்றமும் – பகுதி 2

12 நிமிட வாசிப்பு | 5421 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்ன 1987 நவம்பர் 6 ஆம் திகதி இலங்கையின் உயர்நீதிமன்றின் 9 நீதிபதிகள் கொண்ட மன்று மாகாண சபைகளை உருவாக்குதல் தொடர்பான இரு மசோதாக்கள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றின் முன்னர் வைக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருவன: 1978 அரசியல் யாப்பின் உறுப்புரை 120 இன்படி அரசாங்கத்தால் இயற்றப்படவிருக்கும் மசோதாக்கள் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணுடையனவாக உள்ளனவா, அல்லது முரண்படாதனவாகவும் இசைவானவையாகவும் உள்ளனவா என்பதை […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு | 4355 பார்வைகள்

ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையைத் தீர்மானித்தல், அதிகாரத்தைப் பெறும் அலகுகளைத் தீர்மானித்தல் என்ற முதலிரு படிநிலைகள் பற்றி இதுவரை எடுத்துக் கூறினோம். பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் அனுபவங்களை உதாரணம் காட்டி இவ்விரு படிநிலைகளிலும் அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க எடுத்துக் கூறினார். இதற்கு அடுத்ததாக நாம் அதிகாரத்தை ஏற்பவர்களின் தேவைகளின் […]

மேலும் பார்க்க

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர்நீதிமன்றமும் – பகுதி 1

23 நிமிட வாசிப்பு | 6422 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்ன இலங்கையின் சட்ட அறிஞர்களில் ஒருவரான கலன சேனரத்தின (LL.B, LL.M, PH.D) அவர்கள் ‘Democratic Governance and the Supreme Court in Sri Lanka’ என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரை Democracy and Democratisation in Sri Lanka : Paths, Trends and Imaginations என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பகுதி 1 இல் (பக். […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு | 5473 பார்வைகள்

ஆங்கில மூலம்  : லக்ஸ்மன் மாறசிங்க (Lakshman Marasinghe) பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க ‘A Survey of Structures for Power Devolution’ என்னும் தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ‘Institute for Constitutional Studies’ என்னும் ஆய்வு நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘Power Sharing : The International Experience’ என்னும் நூலின் இரண்டாவது அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வதேச அனுபவங்கள் குறித்த பல […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் : ஒரு சுருக்கமான அரசியல் வரலாறு

25 நிமிட வாசிப்பு | 12857 பார்வைகள்

ஆங்கிலம்  : ஜயதேவ உயன்கொட இலங்கையில் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் பாராளுமன்றம் பற்றிய அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இலங்கையின் பாராளுமன்றத்தின் கதை நவீன ஜனநாயகம் பற்றிய பல கதைகளுடன் பிணைப்புடையதாகும். இக்கதைகளினூடே இலங்கையின் அரசியல் யாப்புக் கட்டமைப்பை மாற்றும் முயற்சிகளும் வெவ்வேறு உயர் குழுக்களின் அதிகாரப் போட்டியும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் பற்றிய கதைகளும் எமக்குத் தெரிய வருகின்றன. குறிப்பாக அரசு அதிகாரத்தை […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 8931 பார்வைகள்

ஆங்கில மூலம்  : நவரட்ண பண்டார இனத்துவ மேலாண்மை முறை மில்டன் ஜே. எஸ்மன் (Milton J. Esman) என்னும் அரசியல் அறிஞரின் இனத்துவ மேலாண்மைமுறை (Ethnic Dominance System) என்னும் எண்ணக்கருவை இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றை விளக்குவதற்கு பிரயோகிக்கும் நவரட்ண பண்டார அவர்கள், இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை இனக்குழுமம் மேலாண்மை பெற்ற இனமாகவும், சிறுபான்மை இனமான தமிழ் இனம் மேலாண்மை இனத்திற்குக் கீழ்ப்பட்ட சிறுபான்மை இனமாகவும் (Subordinate […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 2

23 நிமிட வாசிப்பு | 9217 பார்வைகள்

ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பின்காலனித்துவ இலங்கையில் அரசைக் கட்டி வளர்க்கும் திட்டம் பற்றிய விவாதங்கள் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இலங்கையின் பழமைவாத உயர்குழுக்கள் (Conservative Elites) ஒன்று சேர்ந்து கூட்டணியொன்றை அமைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம் (National Unity Government) ஒன்றை  உருவாக்கின. இந்தக் கூட்டணிக்குள் விரைவிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டன. சிங்கள உயர்குழாம் தலைவர்களிடையே எதிர்காலத்தில் தலைமைப் பதவிகளை யார் யார் பெற்றுக் கொள்ள வேண்டும் […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு | 16159 பார்வைகள்

ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பேராசிரியர் A.M நவரட்ண பண்டார அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் 1990 கள் முதல் இன்றுவரை இலங்கையில் இன ஐக்கியம், சமூகநீதி, ஜனநாயகம் என்பவற்றுக்காக தமது புலமைத்துறை ஆய்வுகள் மூலம் பங்களிப்புச் செய்து வருபவர். ‘Ethnic Politics and the Democratic Process in Post – Independence Sri Lanka’ என்னும் […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 6149 பார்வைகள்

ஆங்கில மூலம்  : றொனால்ட்.எல். வாட்ஸ் மலேசியா றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அவரது கட்டுரை ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் (2011) […]

மேலும் பார்க்க

பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 9633 பார்வைகள்

ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார 4. பாதி – ஜனாதிபதிமுறை அரசாங்கமுறை பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கக்கூடிய இருவகை அரசாங்க முறைகள் பற்றி மேலே விபரித்தோம். பாராளுமன்ற முறையென்றோ அல்லது ஜனாதிபதி முறையென்றோ தெளிவாக அடையாளம் காண முடியாத அரசாங்க முறைகைளைக் கலப்பு முறை (Hybrid System) எனச் சில ஆய்வாளர்கள் அழைத்தனர். Duverges என்ற பிரஞ்சு தேசத்து அறிஞர் முதலில் ‘பாதி – ஜனாதிபதி அரசாங்க […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்