விவேகானந்தராஜா துலாஞ்சனன்

மகாசேனன் காலம் வரை கிழக்கு உரோகணம்

16 நிமிட வாசிப்பு | 3471 பார்வைகள்

அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண […]

மேலும் பார்க்க

கீழைக்கரை : துட்டகாமணி முதல் வட்டகாமணி வரை

16 நிமிட வாசிப்பு | 5694 பார்வைகள்

ஆரம்பத்தில் பத்து உடன்பிறந்தார் குலத்தோரை அடையாளம் காண சிங்கள வரலாற்றாசிரியர்கள் தடுமாறியிருக்கிறார்கள். ஏனெனில், அனுராதபுர மன்னன் மூத்தசிவனுக்குப் புதல்வர்களாக பத்து உடன்பிறந்தார் இருந்தார்கள் (மகாவம்சம் 11:5-6). கொத்ததாமூக்கல், போவத்தகல் கல்வெட்டுகளை முதலில் படித்தபோது செனரத் பரணவிதானவும் அதிலுள்ள உதியன், அபயன் ஆகிய பெயர்களை மூத்தசிவனின் பத்து மைந்தருடையது என்றே கருதினார் (Paranavitana, 1970:l-li). எனினும் பின்னாளில் அவர்கள் தனி அரசகுலம் என்று கருத்தை மாற்றிக்கொண்டார்.  மூத்தசிவனின் பத்து மைந்தர்களில் இளையவன் […]

மேலும் பார்க்க

கீழைக்கரையின் முதல் அரசு : பத்து உடன்பிறந்தோர் குலம்!

14 நிமிட வாசிப்பு | 4836 பார்வைகள்

ஒரு சமூகத்தில் உற்பத்தியும் செல்வமும் உபரியாகின்ற போது அந்த சமூகத்தில் அதிக செல்வத்தை வைத்திருக்கின்ற தனிநபர்கள் செல்வாக்குப் பெற்று ஆதிக்க வர்க்கமாக உருவெடுக்கிறார்கள். அப்படி ஆதிகாலத்தில் தோன்றிய முதல் செல்வாக்கான நபர்களிலிருந்தே நிலக்கிழார்களும் பின் அரசர்களும் தோன்றினார்கள் என்பதை போன அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி இலங்கையின் வடபாதியில் தோன்றிய தொல்லரசு அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டிருந்தது என்பதையும் அந்த முதல் அரசை உருவாக்கிய மூதாதையராக விசயன் என்ற இலாட நாட்டினன், சிங்களன் […]

மேலும் பார்க்க

கீழைக்கரையில் நாகரும் அனுரை அரசரும்

12 நிமிட வாசிப்பு | 6188 பார்வைகள்

கீழைக்கரையில் நாகர் “கலி கடந்து எண்ணூறு ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நாகர் இயக்கரோடு கலந்து ஓரினமானார்கள். அவர்கள் தனி இனமாக பல்வேறு நகரங்களை ஆளலாயினர். அவர்களது முதன்மை நகராக உகந்தம் எனும் நகர் விளங்கியது.” என்று ஆரம்பிக்கின்றது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். இலங்கையில் வாழ்ந்த நாகர் எனும் இனம் இயக்கர் என்னும் இன்னொரு குலத்தை வென்று கலந்ததும், அவர்கள் உகந்தையை அரசிருக்கையாக்கியமையையும் சொல்லும் பாடல் இது. நாகபாம்பை குலக்குறியாகக் கொண்டிருந்தோர் […]

மேலும் பார்க்க

இயக்கர் அல்லது பத்தர் : இலங்கை வரலாற்றுக் காலத்தின் துவக்கம்

11 நிமிட வாசிப்பு | 7774 பார்வைகள்

கீழைக்கரையில் மாப்பாறைக்காலம் அல்லது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல கட்டமைப்புகள், வாகரை, உகந்தை உள்ளிட்ட இடங்களில் அவதானிக்கப்பட்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் கண்டிருந்தோம். மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு வாகரையில் வெருகலாற்றின் கழிமுகத்தை அண்டிய குரங்கு படையெடுத்த வேம்பில் பாறைக் கற்களாலான கற்கிடை [1] அடக்கங்களும் போரதீவுப்பற்று வெல்லாவெளி மண்டூரை அண்டி பெருங்கற்கால அடக்கங்களும் முன்பு இனங்காணப்பட்டிருந்ததுடன், திருக்கோணமலை – கொட்டியாரப்பற்று கிழக்கு – வெருகல் இலந்தைத்துறையில் கரும்-செம் கலவோடுகள் பெறப்பட்டிருக்கின்றன (பத்மநாதன், 2013:16). […]

மேலும் பார்க்க

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை

15 நிமிட வாசிப்பு | 14495 பார்வைகள்

எழுதப்பட்ட ஆவணங்களே வரலாற்றுக்கு ஆதாரம். எழுத்துக் கிடையாத காலத்தில் வேறு தொல்லியல், மானுடவியல் எச்சங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் போது அது ‘முன்னை-வரலாறு’ (Pre-History) என்று அழைக்கப்படும். முன்னை-வரலாற்றின் குறைந்தபட்ச எல்லை என்பது அங்கு எழுத்துச் சான்று கிடைத்த காலமே. நாம் வரலாறை எப்போதும் மனிதனை மையமாகக் கொண்டே வரைவதால், ஒரு நாட்டின் முன்னை-வரலாறானது அங்கு முதல் மாந்தன் தடம் பதித்த காலத்திலிருந்து, அங்கு கிடைத்த முதல் எழுத்துச் சான்று வரையான […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான வேறு தொன்மச் சான்றுகள் II

15 நிமிட வாசிப்பு | 4940 பார்வைகள்

சோனகர் தொன்மங்கள் கீழைக்கரையின் சிறப்புமிக்க சமூகங்களுள் ஒன்றான ஈழத்துச் சோனகரின் தோற்றத்தில், தமிழகத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும் குடிவந்த மரைக்காயர்கள், மாப்பிள்ளைகள், லெப்பைகள், ஆப்கானின் ப`ச்தூன் பிராந்தியத்துப் பட்டாணியர், துருக்கி நாட்டின் துலுக்கர்கள், மத்திய கிழக்கு நாடுகளினின்று வந்த வணிகர்கள், மார்க்க அறிஞர்கள் என்றவாறு பலருக்கும் பங்குண்டு (McGilvray, 1998: 433 – 481).  கீழைக்கரையில் மீளமீளப் பதிவாகியுள்ள திமிலர் – முக்குவர் முரண்பாட்டில் பட்டாணியர் கொண்டிருந்த வகிபாகத்தின் மூலம் இவர்களுக்கு முக்குவரோடு […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான வேறு தொன்மச் சான்றுகள் I

20 நிமிட வாசிப்பு | 8008 பார்வைகள்

கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகளில், உள்ளூர்க் குடிகளிடையே நீடித்து வரும் தொன்மங்கள் முக்கியமானவை. சமகாலத்தில் எழுத்தாதாரங்களுக்கு மேலதிகமாக தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள், நாட்டார் பாடல்களை சரித்திர ஆதாரமாகக் கருதவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொறிப்புச் சான்றுகளோ எழுத்துச் சான்றுகளோ இல்லாத சமூகங்களுக்கிடையே நீடித்து வரும் கர்ண பரம்பரைக் கதைகளை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கான வரலாற்றுச்சான்றாக முன்வைக்கமுடியும் என்பதே நவீன வரலாற்றுவரைவியல். அந்தவகையில் கீழைக்கரைக்கான தொன்மச் சான்றுகளாக  ஊர்சார் வரலாறுகள், சமூகங்கள் சார் தொன்மங்கள், […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் III

12 நிமிட வாசிப்பு | 6955 பார்வைகள்

பூர்வ சரித்திரம் சொல்வனவற்றில் புறச்சான்றுகளைக் கொண்டும் ஊகத்தின் அடிப்படையிலும் ஏற்கத்தக்க விடயங்களை நாட்டார் தொன்மங்கள் என்ற ரீதியிலும், சிலவற்றை வரலாற்றுண்மைகள் என்ற ரீதியிலும் வகைப்படுத்திப் பார்க்கலாம். அவற்றில் முதலாவது, கூத்திக மன்னனால் மட்டுக்களப்பு எனும் அரசு உருவான கதை. சேனன், கூத்திகன் (237 – 215) என்போர் சேர நாட்டுக் குதிரை வணிகர் மைந்தர் என்பது மகாவம்சக்கூற்று. இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் தென்னகத்தவராக இனங்காணப்பட்டுள்ள அரசர்களின் பெயர்களை அக்காலச்சூழலுக்கு […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் II

16 நிமிட வாசிப்பு | 9035 பார்வைகள்

மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமோ முழுக்க முழுக்க செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரின் படைப்பாக இருந்துவிடமுடியாது என்பதற்கான சில சான்றுகளை கடந்த தொடரில் பார்த்தோம். ஆனால், ஈழத்துப் பூராடனாரின் வாதங்களிலிருந்து நாம் முற்றிலும் மறுக்கமுடியாதிருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால், இன்று மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலில் கணபதிப்பிள்ளை புலவரின் தாக்கம் ஓரளவுக்கேனும் இருக்கிறது என்பதைத் தான். அவரிடமிருந்தே எஃப். எக்`ச். சீ. நடராசா பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியத்திற்கான […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (20)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)