அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண […]
ஆரம்பத்தில் பத்து உடன்பிறந்தார் குலத்தோரை அடையாளம் காண சிங்கள வரலாற்றாசிரியர்கள் தடுமாறியிருக்கிறார்கள். ஏனெனில், அனுராதபுர மன்னன் மூத்தசிவனுக்குப் புதல்வர்களாக பத்து உடன்பிறந்தார் இருந்தார்கள் (மகாவம்சம் 11:5-6). கொத்ததாமூக்கல், போவத்தகல் கல்வெட்டுகளை முதலில் படித்தபோது செனரத் பரணவிதானவும் அதிலுள்ள உதியன், அபயன் ஆகிய பெயர்களை மூத்தசிவனின் பத்து மைந்தருடையது என்றே கருதினார் (Paranavitana, 1970:l-li). எனினும் பின்னாளில் அவர்கள் தனி அரசகுலம் என்று கருத்தை மாற்றிக்கொண்டார். மூத்தசிவனின் பத்து மைந்தர்களில் இளையவன் […]
ஒரு சமூகத்தில் உற்பத்தியும் செல்வமும் உபரியாகின்ற போது அந்த சமூகத்தில் அதிக செல்வத்தை வைத்திருக்கின்ற தனிநபர்கள் செல்வாக்குப் பெற்று ஆதிக்க வர்க்கமாக உருவெடுக்கிறார்கள். அப்படி ஆதிகாலத்தில் தோன்றிய முதல் செல்வாக்கான நபர்களிலிருந்தே நிலக்கிழார்களும் பின் அரசர்களும் தோன்றினார்கள் என்பதை போன அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி இலங்கையின் வடபாதியில் தோன்றிய தொல்லரசு அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டிருந்தது என்பதையும் அந்த முதல் அரசை உருவாக்கிய மூதாதையராக விசயன் என்ற இலாட நாட்டினன், சிங்களன் […]
கீழைக்கரையில் நாகர் “கலி கடந்து எண்ணூறு ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நாகர் இயக்கரோடு கலந்து ஓரினமானார்கள். அவர்கள் தனி இனமாக பல்வேறு நகரங்களை ஆளலாயினர். அவர்களது முதன்மை நகராக உகந்தம் எனும் நகர் விளங்கியது.” என்று ஆரம்பிக்கின்றது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். இலங்கையில் வாழ்ந்த நாகர் எனும் இனம் இயக்கர் என்னும் இன்னொரு குலத்தை வென்று கலந்ததும், அவர்கள் உகந்தையை அரசிருக்கையாக்கியமையையும் சொல்லும் பாடல் இது. நாகபாம்பை குலக்குறியாகக் கொண்டிருந்தோர் […]
எழுதப்பட்ட ஆவணங்களே வரலாற்றுக்கு ஆதாரம். எழுத்துக் கிடையாத காலத்தில் வேறு தொல்லியல், மானுடவியல் எச்சங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் போது அது ‘முன்னை-வரலாறு’ (Pre-History) என்று அழைக்கப்படும். முன்னை-வரலாற்றின் குறைந்தபட்ச எல்லை என்பது அங்கு எழுத்துச் சான்று கிடைத்த காலமே. நாம் வரலாறை எப்போதும் மனிதனை மையமாகக் கொண்டே வரைவதால், ஒரு நாட்டின் முன்னை-வரலாறானது அங்கு முதல் மாந்தன் தடம் பதித்த காலத்திலிருந்து, அங்கு கிடைத்த முதல் எழுத்துச் சான்று வரையான […]
கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகளில், உள்ளூர்க் குடிகளிடையே நீடித்து வரும் தொன்மங்கள் முக்கியமானவை. சமகாலத்தில் எழுத்தாதாரங்களுக்கு மேலதிகமாக தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள், நாட்டார் பாடல்களை சரித்திர ஆதாரமாகக் கருதவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொறிப்புச் சான்றுகளோ எழுத்துச் சான்றுகளோ இல்லாத சமூகங்களுக்கிடையே நீடித்து வரும் கர்ண பரம்பரைக் கதைகளை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கான வரலாற்றுச்சான்றாக முன்வைக்கமுடியும் என்பதே நவீன வரலாற்றுவரைவியல். அந்தவகையில் கீழைக்கரைக்கான தொன்மச் சான்றுகளாக ஊர்சார் வரலாறுகள், சமூகங்கள் சார் தொன்மங்கள், […]
பூர்வ சரித்திரம் சொல்வனவற்றில் புறச்சான்றுகளைக் கொண்டும் ஊகத்தின் அடிப்படையிலும் ஏற்கத்தக்க விடயங்களை நாட்டார் தொன்மங்கள் என்ற ரீதியிலும், சிலவற்றை வரலாற்றுண்மைகள் என்ற ரீதியிலும் வகைப்படுத்திப் பார்க்கலாம். அவற்றில் முதலாவது, கூத்திக மன்னனால் மட்டுக்களப்பு எனும் அரசு உருவான கதை. சேனன், கூத்திகன் (237 – 215) என்போர் சேர நாட்டுக் குதிரை வணிகர் மைந்தர் என்பது மகாவம்சக்கூற்று. இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் தென்னகத்தவராக இனங்காணப்பட்டுள்ள அரசர்களின் பெயர்களை அக்காலச்சூழலுக்கு […]
மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமோ முழுக்க முழுக்க செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரின் படைப்பாக இருந்துவிடமுடியாது என்பதற்கான சில சான்றுகளை கடந்த தொடரில் பார்த்தோம். ஆனால், ஈழத்துப் பூராடனாரின் வாதங்களிலிருந்து நாம் முற்றிலும் மறுக்கமுடியாதிருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால், இன்று மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலில் கணபதிப்பிள்ளை புலவரின் தாக்கம் ஓரளவுக்கேனும் இருக்கிறது என்பதைத் தான். அவரிடமிருந்தே எஃப். எக்`ச். சீ. நடராசா பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியத்திற்கான […]