Blogs - Ezhuna | எழுநா

நாக குலத்தவர் பற்றிக் கூறும் ஹிபவுவ கல்வெட்டு

8 நிமிட வாசிப்பு

குருநாகல் நகரில் இருந்து தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் இப்பாகமுவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக புல்னாவைக்குச் செல்லும் வீதியில் சுமார் 10 கி.மீ சென்றதும் பாதையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மலைத்தொடரைக் காணலாம். இதுவே தொழுகந்த எனும் மலையாகும். இம்மலையின் கிழக்குப்பக்க அடிவாரத்தில் ஹிபவுவ எனும் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. மலைப்பறைகள் நிறைந்த இக்காட்டுப்பகுதி நாகலேன என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஓர் இயற்கையான […]

மேலும் பார்க்க

அறிமுகம்: சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்

18 நிமிட வாசிப்பு

இன்று உருவாகியுள்ள புதிய உலக ஒழுங்கில் இந்தியா, சீனா, இலங்கை என்பன இணைந்து இயங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனும் குரல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. இத்தகைய புதிய செல்நெறி துலக்கமாகத் தெரிகிறதா எனும் கேள்வி பலரிடமும் தோன்ற இடமுள்ளது. ஏற்கனவே நிலவி வந்த ஒற்றை மையமான ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கம் தளம்பல் நிலையை அடைந்து, பழைய நியமங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மாறுநிலைக் காலம் என்பதைக் கடந்து, உறுதியான புதிய உலக ஒழுங்கு […]

மேலும் பார்க்க

சிவில் சமூகமும் சிவில் சமூக அமைப்புகளும்

12 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட சிவில் சமூகம் (Civil Society) என்னும் அரசியல் விஞ்ஞானக் கலைச்சொல் இன்று சாதாரண மக்கள் மத்தியிலும் அறிமுகமாகியுள்ள சொல்லாக உள்ளது. ஆனால் இச்சொல் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் தமிழில் போதியளவு இல்லை. ‘சிவில் சமூகம்’, ‘சிவில் சமூக அமைப்புகள்’, ‘ஜனநாயக சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம்’ என்பனவற்றை விளக்கும் முறையில் ‘சிவில் சமூகம்’ (Civil Society) என்னும் தலைப்பில் […]

மேலும் பார்க்க

கடலின் அக்கரை போனோரே: கேளாத குரல்களின் வலி

21 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 2024 டிசம்பரில் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது புதிய சாதனையாகும். இதற்கு முந்தைய பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமான தொகை 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஒரு மாதத்தில் இலங்கைக்கு தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட அதிகபட்ச பணமாகும். அதேபோல் கடந்தாண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இது 2023ஆம் ஆண்டை விட 11% […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் – பகுதி 3

11 நிமிட வாசிப்பு

உப்போடு புளியோடு முப்பத்து இரண்டு திருமணமாகி அடுத்த நாள் மணமகன் சந்தைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வீட்டுக்கு வாங்கி வருவார். இதனை உப்போடு புளியோடு முப்பத்திரெண்டும் வாங்கி வருதல் என்பார்கள். உப்பு, புளி, ஏலம், கறுவா, வாசனைத்திரவியங்கள், மீன், இறைச்சி, மாசி, கருவாடு, மரக்கறிகள், அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு உள்ளிட்ட அத்தனை பொருட்களும் இதில் அடங்கியிருக்கும். இது மணமகனின் கௌரவத்தை வெளிப்படுத்துவதாக […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலுச்சக்தி மூலங்களுக்கான வாய்ப்புகளும் வளங்களும்

12 நிமிட வாசிப்பு

பொதுவசதிகள் துறையின் கீழ் உள்ளடங்கும் ஒரு பிரதான வசதிச் சேவையாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்கல் என்பன இருந்து வருகின்றன. நாட்டின் அனைத்துப் பிரதான பொருளாதார உற்பத்தி மூலங்களையும் இயக்கும் சக்தி வளங்களாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வளங்கள் இருந்து வருகின்றன. நீர் மின்வலுவும் எரிபொருள் வலுவும் இணைந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதுடன் மாற்றுச்சக்தி வளங்களான காற்றாலைகள் மற்றும் சூரியப்படல்கள் மூலமும் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. மின்சார வளங்களில் நீர்வலு மூலமான […]

மேலும் பார்க்க

சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’ (Song of the Sun God)

10 நிமிட வாசிப்பு
March 22, 2025 | இளங்கோ

இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஓர் இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில், தமிழர்கள் தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதை சிங்கள அதிகார வர்க்கம் நன்கு விளங்கிக்கொண்டதால்தான், அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளையும், […]

மேலும் பார்க்க

இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம்பெற்ற புதிய வர்க்கம் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார மூன்றாவது தலைமுறை மூன்றாவது தலைமுறை அரசியல் வர்க்கம் 1977இல் ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்த காலத்தில் இருந்து உருவானது. இந்த வர்க்கம் உருவான காலத்தில் புதியதொரு தேர்தல்முறை (New Electoral System) நடைமுறைக்கு வந்தது. அத்தோடு அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றம் உருவானது. நீதித்துறையும் பலவீனமுடையதாக ஆக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையும் (A New Economic Policy) […]

மேலும் பார்க்க

வணிக வாழ்க்கையின் வெற்றியில் பெண்களின் பங்களிப்பு

10 நிமிட வாசிப்பு

பெண்கள் எமது சமூகத்தின் அடிக்கல்லாகவும் தூண்களாகவும் இருந்ததைப் பற்றிப் பேசுவது அவசியமாகும். இது, இன்றைய இளம்பெண்கள், ஆண்களை மட்டுமின்றி பெண்களையும் வாழ்க்கையின் முன்மாதிரிகளாகக் கொண்டு, தொழில்முனைவோராக முன்னேற உதவுமென நான் நம்புகிறேன். உலகுதழுவிய நிலையில் பெண்களின் பங்களிப்புகளையும் அவர்களது மனப்பான்மைகளையும் பற்றி ஆராயமுன்னர், பெண்களின் பங்களிப்பால் எனது சொந்தவாழ்வில், எனது ஆரம்பத் தொழில்முனைவு வாழ்க்கையில் எவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக் கூறுவது முக்கியமாகும்.  எனது தாத்தா களுத்துறையில் வியாபாரம் செய்து […]

மேலும் பார்க்க

இளந்தாரி வழிபாடு

20 நிமிட வாசிப்பு

அறிமுகம் எந்த உயிரியின் பரிணாமத்திலும் வளர்ச்சியிலும் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மனிதரில் இளைஞர்களை வாலிபர், இளைஞர் – இளந்தாரி என்று சுட்டுதல் வழக்கம். போர், காதல், உழைப்பு என எல்லாத்தளங்களிலும் இளமை தவிர்க்க முடியாத பிரதானமான அம்சமாகத் திகழ்கிறது. வாழ்வில் துடுக்குத்தனமும் அளவற்ற செயற்பாடுகளும் உடைய அப்பருவம் ஒவ்வொரு மனிதராலும் மறக்க முடியாத ஒன்றாகும். போரிலும் வீரத்திலும் ஆற்றலிலும் இளந்தாரிப் பருவம் தவிர்க்க முடியாத பருவமாகின்றது. மண், பொன், காதல் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்