அறிமுகம் தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய போது அம்மதத்தையும் அம்மதம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றின் வரலாற்றையும் வாய்மொழிக் கதையாகப் பேணும் மரபும் தோற்றம் பெற்றதே காரணமாகும். அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே தீபவம்சம், மகாவம்சம, சூளவம்சம் முதலான பாளி வரலாற்று இலக்கியங்கள் […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரச அதிகாரத்தை கைப்பற்றுதல் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுதல் (CAPTURE OF STATE POWER) பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் சீன-சோவியத் வாதங்களின் போது மேற்கிளம்பின. சீனா, கியுபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் அனுபவங்கள் மரபுவழி மார்க்சிஸ்டுகள் முன்வைத்த மாதிரியில் இருந்து வேறுபட்டதாக இருந்தன. சீனாவின் ஷங்காய் நகரின் தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சி கொடூரமாக அடக்கப்பட்டது. அதன் பின்னர் ‘மா ஓ சேதுங்’ யெனான் […]
கோ. நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரத்தைப் பிறப்பிடமாக கொண்டு (அப்போதைய தென்னாற்காடு மாவட்டம்), வளவனூர் கோதண்டராமர் ஐய்யருக்கும் பகீரதம்மாளுக்கும் மகனாக 1887.01.14 இல் பிறந்தார். அரசுப் பள்ளியில் ஆங்கில மொழி கல்வி பயின்றார். வங்கப் பிரிவினை காரணமாகவும், தேசிய சிந்தனைகள் மற்றும் சுதேசிய சிந்தனைகள் காரணமாகவும் ஆங்கிலக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சென்னை – அரசுப் பயிற்சி நிறுவனத்தில் கைத்தொழில் பயிற்சி பெற்றார். சில காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு, பின் […]
இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பெரும்பிரிவுகளையும் தீவுகள் சிலவற்றையும் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணப் பட்டினத்தின் வலிகாமப் பிரிவைத் தனியாகக் காட்டும் நிலப்படம் (படம்-1) தரும் விவரங்களை ஆராயலாம். நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பின் ஒரு பகுதியான இந்த நிலப்படம் ‘4. VELH 328.14’ என்னும் இலக்கத்தைக் கொண்டது. “வலிகாமப் […]
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் தாபகர் வரலாறு ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (13.6.1905 – 04.11.1989), 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியின்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மானிப்பாயில் செல்வாக்குடன் இருந்த ஒரு கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் பண்டத்தரிப்பையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். ருவைற் (Dwight), தப்பான் (Tappan), கார்டினர் (Gardiner) குடும்பத்தினர் இவரது உறவினர்களாவர். தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள், […]
மகாசேனனுக்குப் பின்னர் (276 – 301) அவன் மகன் மேகவண்ணன் அனுரை அரியணையில் அமர்ந்தான் (301 – 328). அவன் காலத்தில் கலிங்க நாட்டுப் பிராமணப் பெண்ணொருத்தி புத்தரின் திருப்பற்சின்னத்தை அனுரைக்குக் கொணர்ந்ததாகவும் அது மேகவண்ணன் தேவானாம்பிரிய திசையனால் அமைக்கப்பட்ட “தருமச்சக்கரம்” எனும் கட்டடத்தில் வைக்கப்பட்டதாகவும், அன்று முதல் அது “தலதா மாளிகை” என்று அழைக்கப்பட்டதாகவும் மகாவம்சம் சொல்கின்றது (மவ. 37:90-95). ஆனால் இராசாவழி நூல் சொல்வதன்படி, அந்தப் பெண்ணின் […]
கிழக்குப் பிராந்தியத்தில் தமிழரும் சோனகரும் : ஒரு முக்கியமான சோதனை இன்று, தமிழ் அரசியல் தலைமையின் புறக்கணிப்பு மற்றும் அவமரியாதைச் செயல்கள் காரணமாகவும், தங்களின் அரசியல் தலைவர்களின் வழிகாட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இலங்கைச் சோனகர்கள் தங்களை ஒரு தனித்துவமான இனம் மற்றும் மதக்குழுவினர் என்ற தெளிவான பிம்பத்தைப் பெற்றுள்ளனர். 1980 களின் முற்பகுதியில் ஈழப் போர் வெடித்ததில் இருந்து, இனவாத நலன்களைப் பிரிதிநிதித்துவப்படுத்திய சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள், தமிழ் பேசும் […]
மாத்தளை மாவட்டத்தில் மொத்தமாக 62 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 6 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் 3 கல்வெட்டுகளில் மட்டுமே நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம். கரடித காமத்தில் வாழ்ந்த வீம நாகன் பற்றிய பிதுரங்கல கல்வெட்டு மாத்தளை மாவட்டத்தின் வடபகுதியில் பிரசித்தி பெற்ற சிகிரியா மலைக்குன்று அமைந்துள்ளது. இம்மலைக்குன்று பண்டைய காலத்தில் சிவகிரி, சிம்மகிரி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இது […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையர்களுக்கு மின்சாரத்தை உறுதி செய்ததில் நீர் மின்சாரத்தின் பங்கு பெரிது. சுதந்திரத்துக்குப் பிந்தைய மூன்று தசாப்தகாலத்தில் இலங்கையர்களில் பெரும்பான்மையோருக்கு மின்சாரத்தை தங்கள் வீடுகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்தது. 1990 களின் நடுப்பகுதியில் இலங்கையின் மின் உற்பத்தியில் 96% நீர்மின்சாரத்தில் இருந்து பெறப்பட்டது. இலங்கை மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடைந்திருந்தது. இதன்மூலம் சூழலுக்கு மாசற்ற முறையில் பெரும்பான்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்த நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருந்தது. இவ்வாறான […]
‘திக்குகள் எட்டும்’ தொடரின் கடந்த பாகம் நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதி 2019 இல் வெளிவந்த ‘இலங்கையின் போரும் சமாதானமும் – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்’ நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் அறிமுகமாக அமைந்தது. அது, இலங்கைத் தீவின் புவியியல் அமைவிலிருந்து அதன் மொழி, இன, கலாசார, சமூக, பொருளாதாரக் கூறுகளை வரலாற்று ரீதியாகவும் தகவல், தரவுகள் ரீதியாகவும் முன்வைக்கின்றன. சிங்களத் தேசியவாதத்தின் தோற்றத்திலிருந்து அதன் போக்கு, […]