Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow

வணிக நகர்வுகளில் துணிவுடமையின் வகிபாகம் 

14 நிமிட வாசிப்பு

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு” -திருக்குறள் (383)- மு. வரதராசனார் விளக்கம் : காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை. எமது வாழ்க்கையின் இன்றைய நிலையை இரண்டு விதமான நிகழ்வுகள் வடிவமைத்திருக்கும். முதலாவது, நுண் (Micro) அளவில் நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் செயல்கள், முடிவுகள், அதனால் வரும் விளைவுகள். இரண்டாவது, பெரிய (Macro) […]

மேலும் பார்க்க

தமிழ்ப் பௌத்த மீட்டுருவாக்கம் 

18 நிமிட வாசிப்பு

இதுவரை நிலவி வந்த உலக ஒழுங்கு பாரிய மாற்றத்தை கண்டு வரும் செயலொழுங்குகள் முனைப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்தையும் அதன் விருத்திகளையும் பார்த்து வருகிறோம். ஏகாதிபத்திய நாடுகளும் அதன் தலைமைக் கேந்திரமான ஐக்கிய அமெரிக்காவும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து,மீண்டெழுவதன் பொருட்டு ஆறேழு வருடங்களாக எடுத்து வரும் எத்தனங்கள் பற்றிப் பல தளங்களிலும் பேசப்படுகின்றன. தம்மை முந்திவிடக் கூடும் என முன்னாள் சோசலிச நாடான ருஷ்யாவைக் கருதி, […]

மேலும் பார்க்க

இலங்கையில் ஆசீவகச் சமயம்

26 நிமிட வாசிப்பு

இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன்பும், பௌத்த சமயத்தின் வருகைக்கு முன்பும், ஆசீவகச் சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கான பல சான்றுகளை மகாவம்சம் முதலான பாளி மொழி நூல்களின் வழியாகவும், தமிழர் – சிங்களர் முதலானோரின் வாழ்வியல் தொன்மங்கள் வழியாகவும் அறியலாம். கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கை அரசர்களின் மரபுகளைக் கூறக்கூடிய மகாவம்சம் என்ற நூலில், ஆசீவகம் குறித்ததான பல செய்திகள் காணப்படுகின்றன. ‘விஜயன் இலங்கை வந்து முப்பத்து […]

மேலும் பார்க்க

எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல்  – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு ‘பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : சர்வதேச  அனுபவங்கள்  சில’ என்னும் கட்டுரையின் சில பக்கங்களில் உள்ள கருத்துக்களை மேலே சுருக்கித் தந்தோம். இக்கட்டுரைத் தலைப்பு, இக்கட்டுரை ஆராயும் விடயங்கள் ஆகியன அரசியல் யாப்புச் சட்டம் பற்றியவை. குறிப்பாக அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு (COMPARATIVE CONSTITUTIONAL LAW) என்ற பாடத்தின் பகுதியாக அமையும் விடயங்களையே விக்கிரமரட்ண ஆராய்விற்கு எடுத்துக் […]

மேலும் பார்க்க

அனுக் அருட்பிரகாசத்தின் ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’

17 நிமிட வாசிப்பு
May 20, 2024 | இளங்கோ

1 நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய்த் தோன்றுவது ஒருபுறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற ஆச்சரியம் இன்னொருவகையில் ஒருவரைத் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல், எறிகணைத் தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இளைஞனான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூக்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல […]

மேலும் பார்க்க

இலங்கையின் கறவை மாடுகளைப் பாதிக்கும் முக்கியமான தொற்று நோய்கள்

13 நிமிட வாசிப்பு

இலங்கையின் கறவை மாடுகளை பல தொற்று நோய்கள் பாதிக்கின்றன. அவற்றுள்  கால்வாய் நோய் (foot and mouth disease), தொண்டையடைப்பான் நோய் (Hemorrhagic septicemia), கருங்காலி நோய் (Black quarter), லம்பி தோல் கழலை நோய் (lumpy skin disease), புருசெல்லா கருச்சிதைவு நோய் (Brucellosis), மடியழற்சி நோய்கள் (Mastitis), குடற்புழு நோய்கள் (gastro intestinal worms) என்பன குறிப்பிடத்தக்கன. இந்த நோய்கள் கறவை மாடுகளைப் பாதித்து அவற்றின் உற்பத்தியைப் […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்தல் : பொருளாதார முன்னேற்றமும் சமூகப் பொறுப்பும் 

15 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் பிரதான பணிப்பாளர் ஒருவருடன் பேசக் கிடைத்தது. ஓய்வு வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் அந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரியவரிடம் “போர் முடிந்து பலவருடங்களாயினும் ஏன் அந்நிறுவனம் வடக்கில் முதலீடு செய்யவில்லை” எனக் கேட்டேன். “வடக்கை விட இலகுவாக இலாபமீட்டக்கூடிய இதர இடங்கள் இருக்கின்றன” என அவர் சாவதானமாகக் கூறினார். அதில் எந்தவிதத் தவறுமில்லை. பங்குச்சந்தை முதலீட்டை நம்பியிருக்கும் […]

மேலும் பார்க்க

ரோஹண விஜயவீரவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் : சமூகவியல் நோக்கு – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : சரத் அமுனுகம சமூகவியலாளர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் ‘WIJEWEERA AND THE LEADERSHIP OF THE J.V.P: A SOCIOLOGICAL PERSPECTIVE’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘DREAMS OF CHANGE – LAND LABOUR AND CONFLICT IN SRI LANKA’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நூலின் ஆறாவது அத்தியாயமாக (பக். 184 – […]

மேலும் பார்க்க

நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் – பகுதி 2

28 நிமிட வாசிப்பு

கட்டுக்கரையைத் தொடர்ந்து வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு முக்கிய பெருங்கற்கால பண்பாட்டு மையமாக நாகபடுவான் என்ற இடம் காணப்படுகின்றது. இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் இலங்கையில் நாக வழிபாட்டு மரபு தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதிய செய்திகளைக் கூறுவதாக இருக்கின்றன. எமது அறிவுக்கு எட்டியவரை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில வகையான சான்றுகள் தென்னாசியாவின் […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடக்குப் பகுதியின் மழைவீழ்ச்சி

28 நிமிட வாசிப்பு

அறிமுகம் வட பிராந்தியத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி 1230 மி.மீ. ஆயினும்கூட, ஆண்டுக்கு ஆண்டு, இடத்திற்கு இடம் மற்றும் பருவத்திற்குப் பருவம் இது வேறுபடும் (படம் 7.1). இருப்பினும், வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வங்காள விரிகுடாவில் பல்வேறு காற்றழுத்த தாழ்வுகள் உருவாகி வருவதால், மொத்த மழையில் 75 சதவீதம் (700மி.மீ.) வடகீழ் பருவக்காற்றின் போது பெறப்படுகிறது (Alahacoon & Edirisinghe, 2021b). மேலும், வடக்கு பிராந்தியத்தில் 60% மழை (550 […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்