Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை

15 நிமிட வாசிப்பு

எழுதப்பட்ட ஆவணங்களே வரலாற்றுக்கு ஆதாரம். எழுத்துக் கிடையாத காலத்தில் வேறு தொல்லியல், மானுடவியல் எச்சங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் போது அது ‘முன்னை-வரலாறு’ (Pre-History) என்று அழைக்கப்படும். முன்னை-வரலாற்றின் குறைந்தபட்ச எல்லை என்பது அங்கு எழுத்துச் சான்று கிடைத்த காலமே. நாம் வரலாறை எப்போதும் மனிதனை மையமாகக் கொண்டே வரைவதால், ஒரு நாட்டின் முன்னை-வரலாறானது அங்கு முதல் மாந்தன் தடம் பதித்த காலத்திலிருந்து, அங்கு கிடைத்த முதல் எழுத்துச் சான்று வரையான […]

மேலும் பார்க்க

ஓயாத வன்முறை அலைகள்

9 நிமிட வாசிப்பு

1971 முதல் 1977 வரையிலான காலப்பகுதியில் மலையகத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனம், வாழ்விடங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்தது. பசி, பட்டினி, பஞ்சம், உணவுப் பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்றன காரணமாக திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் அரசாங்கத்தின்மீது அவர்களுக்கு பெரும் வெறுப்பு உண்டாகியது. மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமன்றி முழு இலங்கை மக்களுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவிட வேண்டும் என்று […]

மேலும் பார்க்க

18 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய பகுதிகளும்

16 நிமிட வாசிப்பு

17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரால் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படங்களில் யாழ்ப்பாணத்தையும் அதை அண்டிய பகுதிகளையும் பற்றிய தகவல்கள் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். 18 ஆம் நூற்றாண்டில் இறுதி நான்கு ஆண்டுகள் நீங்கலாக, இலங்கை ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழேயே இருந்தது. அக்காலத்தில் வரையப்பட்ட இலங்கைப் படங்களில், தீவின் வடிவம் படிப்படியாகத் திருத்தமடைந்து வந்தது. அத்துடன், பல்வேறு தேவைகளுக்காக இலங்கையின் வடபகுதியின் பல்வேறு பகுதிகளைக் காட்டும் விவரமான நிலப்படங்களையும் வரைந்தனர். அதேவேளை, இக்காலப்பகுதியில் […]

மேலும் பார்க்க

காடும் காடுசார் பல்வகைமையும் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

வடக்கு கிழக்கு காடுகளின் பொதுவான தன்மைகள் காடுகளிலுள்ள மண்ணானது மிகவும் வளமுள்ளது. ஆண்டாண்டு காலமாக சிதைவடையாமல் பேணப்படும் இம் மண், மண்ணின் சகல கூறுகளையும் கொண்டுள்ளது. அதிகமாக காணப்படும் பிரிகையாக்கும் பக்டீரியாக்கள் இப் பகுதியின் சமநிலையைப் பேணுவதில் பெரும்பங்காற்றுகிறது. வேருடன் இணைந்து ஒன்றிணைந்து வாழும் அநேக பக்டீரியாக்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பிரிகையாக்கிகளான பங்கசுகளும் இங்கு உண்டு. வேருடன் இணைந்துவாழும் பக்டீரியாக்கள் மண்ணிலுள்ள பொஸ்பரஸை கரைத்து தாவரங்களுக்கு தேவையான போசணைகளை வழங்குவதில் […]

மேலும் பார்க்க

தேசியமயமாக்கமும் அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளும்

8 நிமிட வாசிப்பு

1930 களை தொடர்ந்துவந்த உலகப் பொருளாதார பெருமந்த காலத்திலிருந்தே இந்திய வம்சாவழித் தமிழர்கள் மீதும் மலையாளிகள் மீதும் இந்த நாட்டு பெரும்பான்மை இன மக்கள் பெரும் துவேசத்தை கக்கி வந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதன் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க, அப்போது நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரதும் மற்றும் பலரதும் இனவாதப் போக்குகள், 1948 இல் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரஜாவுரிமை பறிப்புச் சட்டம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட […]

மேலும் பார்க்க

காடும் காடுசார் பல்வகைமையும் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு என்பதற்கு ஏற்ப கடல் பற்றிய எம் அறிவுக்கெட்டிய விபரங்கள் முதலாவது அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளன. இவ் இரண்டாம் அத்தியாயம் காடும் காடுசார் உயிரியல் பல்வகைமை பற்றியும், அதனுடனான அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களையும் தாங்கிவருகின்றது. காடுசம்பந்தமான ஒரு பொதுஅறிமுகத்துடன் இவ் அத்தியாயத்தில் நுழைந்தால் மட்டுமே வடக்கு கிழக்கு காடுகள் பற்றிய ஓர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். காடு அல்லது வனம் எனும் பதம் உலகில் பல்வேறு […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 1

13 நிமிட வாசிப்பு

18 வீதமான தமிழர்களுடன் ஒப்பிடும் போது, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட 8 வீதமானவர்கள் முஸ்லிம்கள். ஆனால் இந்த எளிய சிறுபான்மை அடையாளங்கள் தீவின் இனச் சிக்கலை வெளிப்படுத்துவதை விடவும் உண்மையில் மறைக்கவே செய்கின்றன. கடந்த 100 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகத்தின் நகர்ப்புற தலைவர்களும் அரசியல் பேச்சாளர்களும், முஸ்லிம்கள் வீட்டில் தமிழ் பேசினாலும் பல தமிழ் உறவுகளையும் உள்நாட்டு நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டாலும், அவர்களை தமிழ் முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் தமிழர்கள் […]

மேலும் பார்க்க

பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும்

15 நிமிட வாசிப்பு

அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்கும்கனலனலே வென்பசியைக் காட்டும்-புனலாகுமிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதும்சர்க்கரைப் பறங்கிக்காய் தான்– பதார்த்தகுண சிந்தாமணி- பொருள் : சர்க்கரைப் பறங்கிக்காய் எனப்படும் பூசணிக்காய் உடல் சூட்டைக் குறைக்கும். கூடிய பித்தத்தைப் போக்கும். பசியைக் கூட்டும். பெருமளவில் நீரைக் கொண்டிருக்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ‘பறங்கிப்பூசணி’ என்னும் பெயரைக் கேட்டதுமே இந்தப்பூசணி பறங்கியர் என அழைக்கப்பட்ட போர்த்துக்கேயர் அல்லது ஒல்லாந்தரால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காய்கறியாக இருத்தல் வேண்டும் என்பதை […]

மேலும் பார்க்க

சிங்கள அரசின் காணிக் கொள்கை

8 நிமிட வாசிப்பு

1974 களை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தலைமையாகக் கொண்ட கூட்டு அரசாங்கம் கடைப்பிடித்த காணிக் கொள்கை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகள் எங்கிலும் சிங்களப் பேரினவாதம் மூர்க்கமாக தலைவிரித்தாடத் தொடங்கியது. மலையக பெருந்தோட்டங்களில் இருந்து தமிழ் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு அந்த தோட்டக் காணிகளை சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் கைங்கரியம் ஆரம்பமானது. இதன் பொருட்டு 1975 ஆம் ஆண்டு சட்ட விதிமுறைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்ட […]

மேலும் பார்க்க

என்ன செய்ய வேண்டும்?

15 நிமிட வாசிப்பு

வடமாகாண கடற்பிரதேசம் வடமேற்கு மாகாண கடல் எல்லையிலிருந்து கிழக்கு மாகாண எல்லை வரை பரந்துள்ளது. இலங்கையின் எந்த மாகாணத்துக்கும் இல்லாத வகையில் பலதரப்பட்ட  தொழில்களைச் செய்வதற்கான வளங்களை கொண்டது வடமாகாணத்தின் கடற்பிரதேசம். பின்வருவன இன்றுள்ள வடமாகாணக் கடலில் வருவாய் தரக்கூடிய தொழிலாக இருப்பவை: ஆழ்கடல் மீன்பிடி  கரையோர மீன்பிடி  ஆழ்கடல் மீன்பிடி  போர் முடிவுற்ற காலத்தின் பின்பு ஆழ்கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய அரசினால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தனியார்களின் மூலதனத்தை பயன்படுத்தி செய்யப்பட்டது வெறும் திருத்தல் வேலைகள் மட்டுமே. நவீன […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்