இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும்போது பொதுவாகக் கடல் உணவுகளே சிறந்த ஆரோக்கியமிக்க உணவு வகைகளாகக் கருதப்படுகின்றன. கடல் உணவுகளானது இதய நோய்கள், வாதநோய்கள், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, அதியுடற் பருமன் போன்றவற்றின் தாக்கங்களைக் குறைக்கின்றன. இதற்கு காரணம் கடல் உணவுகளில், நிரம்பிய கொழுப்புக்கள் (Saturated fat) குறைவு. அதேவேளை இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒமேகா 3 (Omega 3) கொழுப்பமிலங்கள் உட்பட, நிரம்பாத கொழுப்புக்களையும் (Unsaturated fatty acids) கொண்டவை. […]
1950 களைத் தொடர்ந்துவந்த ஒன்றரை தசாப்த காலம் இலங்கைத் திருநாட்டை சிங்கள நாடாக மாற்றுவது தொடர்பான முயற்சிகளிலேயே கழிந்தது. அதனால் தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையினர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்து வெளிக்காட்டி வந்தனர். இதனால் அவ்வப்போது ரத்தக்களரிகளும் போராட்டங்களும் சத்தியாக்கிரகங்களும் வெடித்த வண்ணமே இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது பிரதமரான டி . எஸ் . சேனநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட இனவாதக் கொள்கைகளை அடுத்து வந்த அனைத்து பிரதமர்களும் உள்ளது […]
“ஊரான ஊரிழந்தோம் ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்”(கவிதா நிகழ்வு – எங்கள் மண்ணும் இந்தநாட்களும் :1985) ஊர்களைச் சுவடிப்படுத்தல் என்பது ஊரை அதன் அனைத்து அம்சங்களோடும் அவதானித்தல், அடையாளம் காணல், அது தொடர்பான அனைத்து விடயங்களையும் சேகரித்தல், அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட முறையிற் பதிவுசெய்தல் ஆகியவற்யோடு கூடிய ஒரு செயற்பாடாகும். அது ஊர்களை வரலாற்று நிலைப்படுத்தி, உள்ளூர் வரலாற்றுச் சட்டகத்திற்கு வலுச்சேர்க்கிறது. அத்துடன் ஊர்களை ஆற்றல்மிக்க முறையில் பராமரித்தல், நிர்வகித்தல், பயன்படுத்துதல், பாதுகாத்தல் முதலியவற்றுக்கான முதலீடாகவும் காணப்படுகிறது. எப்போது நாம் ஊரை இழந்தோம்? எப்போது ஊர் நினைவாகியது? அது எப்போது கழிவிரக்கமாயும், முடிவடையாத – […]
2500 ஆண்டுகால இலங்கை வரலாற்றில் வட இலங்கை சிறப்பாக யாழ்ப்பாணம் பாளி மொழியில் நாகதீப(ம்) எனவும், தமிழ் மொழியில் நாகநாடு எனவும் தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்திக் கூறும் மரபு பண்டுதொட்டுக் காணப்படுகின்றது. இதற்கு இப்பிராந்தியத்தில் தோன்றி வளர்ந்த தனித்துவமான பண்பாட்டு அம்சங்களும் ஒரு காரணம் என்பதை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதிசெய்து வருகின்றன. இதை யாழ்ப்பாண நகரத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் அமைந்துள்ள ஒல்லாந்தர்காலக் கோட்டையின் உட்பகுதியில் 2012- 2017 […]
ஆங்கில மூலம் : மைக்கல் பாங்ஸ் மைக்கல் பாங்ஸ் ஆய்வு குறித்த ஓர் அறிமுகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரினிட்டிக் கல்லூரியின் மாணவராக இருந்த போது மைக்கல் பாங்ஸ் (Michael Banks) 1950களின் முற்பகுதியில் கள ஆய்வு வேலைக்காக யாழ்ப்பாணம் வந்தார். இவர் தம் ஆய்விற்கான களப்பணியில் ஒரு வருடம் சிறுப்பிட்டி என்ற கிராமத்திலும் ஆறுமாதங்கள் கிளிநொச்சியிலும் செலவிட்டார். யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு (The social organization of Jaffna […]
அறிமுகம் மனிதர்களிலும் விலங்குகளிலும் நோய் சிகிச்சைக்கும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள் [Antibiotics] பயன்படுத்தப்படுகின்றன. பல வருடங்களாக ஆபத்தான நுண்ணுயிர்களால் [Bacteria] ஏற்பட்ட மிகக் கொடிய நோய்களில் இருந்து மனிதர்களையும் விலங்குகளையும் பாதுகாத்த மேற்படி நுண்ணுயிர்க் கொல்லிகள் அண்மை நாட்களில் பயனற்றவையாக மாற்றமடைந்து வருகின்றன. குறிப்பாக, நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை [Antibiotic resistant] பெரும்பாலான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கு தோன்றியுள்ளது. நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பான நுண்ணுயிர்களின் அதிகரிப்பு […]
முன்னர் விளக்கப்பட்ட சான்செசின் இலங்கைப் படம், யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன் வரையப்பட்டது. யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்த பின்னரும் இலங்கைப் படங்களும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைத் தனியாகக் காட்டும் நிலப்படங்களும் வரையப்பட்டன. அவற்றுட் சிலவற்றைப் பற்றிக் கீழே பார்க்கலாம். கொன்ஸ்டன்டைன் டி சாவின் நிலப்படத் தொகுப்பிலுள்ள இலங்கைப் படம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் ஆளுநராகப் பதவி வகித்த கொன்ஸ்டன்டைன் டி சா, 1628 […]
அசமத்துவச் சுயாட்சி சமூக முறைமை அரசியல் யாப்பை வரைவதற்கான சபையில் கருத்து வேறுபாடுகள் பல எழுந்தன. உணர்வுகளை தூண்டக்கூடியதான பிராந்திய சுயாட்சி என்ற விடயமே இக்கருத்து வேறுபாடுகள் யாவற்றிலும் முதன்மையானது. பஸ்க், கற்றலன், ஹலீசியா ஆகிய தேசிய இனங்கள் மொழியிலும் பண்பாட்டிலும் நாட்டின் பிறபகுதியினரை விட வேறுபட்டதாய் இருந்தன. அது மட்டுமன்றி அவை கடந்த காலத்தில் சுயாட்சி உடைய சுதந்திரமான சமூகங்களாகச் செயற்பட்டன. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்த பிராங்கோவின் […]
ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க பண்பாட்டு அடையாளம் பற்றிய பிரச்சினையும் அதிகாரப் பகிர்வும் அதிகாரப் பகிர்வு பற்றிய புதுமைகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் அரசியல் யாப்பு அமைந்தது. அரசியல் யாப்பினை வரைந்தவர்கள் விட்டுக்கொடுப்போடும் இணக்கபாட்டுடனும் நடந்து கொண்டனர். புதிய ஜனநாயக அரசியலுக்கு வழிசமைத்த இவ்வரசியல் யாப்பு நடைமுறை உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஸ்பானிய அரசு ஜனநாயக அரசாக மாற்றம் பெற்றது. அந்நாட்டின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த வரலாற்றுத் திருப்பத்துக்கு காரணமாக […]
“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது” – திருக்குறள் (29) விளக்கம்:குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள்உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. உலகிலுள்ள அரசியல் தலைவர்களையோ அல்லது வணிகத் தலைவர்களையோ பார்த்தால் அவர்கள் தத்தம் துறைகளில் சிறப்பான கற்றல் அறிவையும், வாழ்க்கையின் அனுபவங்களையும் இணைப்பதனூடான தொழில் தேர்ச்சியையும், தலைமைத்துவத்தையும் அடைந்திருப்பார்கள். அவர்களின் அறிவுத்திறனின் நுண்ணறிவு (IQ) மிகவும் அதிகமாக இருக்கும். அத்தகைய […]