ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல ‘Parliament: Law, History and Practice’ என்னும் பெயரிலான நூல் ஒன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் (CPA) 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இலங்கையின் சட்ட ஆக்கத்துறையான (Legislature) பாராளுமன்றத்தின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் கூறுவதாக மேற்படி நூலின் இரண்டாவது அத்தியாயம் அமைந்துள்ளது. ‘Parliament in its Historical and Constitutional Context’ என்னும் தலைப்புடைய […]
அறிமுகம் ஈழத்து தமிழ்க் கூத்து ஒன்றல்ல; அது பல வகையின. 1967களில் ஆரம்பித்த தமிழ்க் கூத்து ஆய்வுகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல தகவல்களையும் சில முடிவுகளையும் நமக்குத் தந்துள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின்படி கூத்தின் பல்வேறு பிரிவுகளை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். ஈழத்துத் தமிழ்க் கூத்தின் வகைகள் யாழ்ப்பாணத்தில் வடமோடி, தென்மோடி எனவும்; மன்னாரில் தென்பாங்கு, வடபாங்கு, வாசாப்பு எனவும்; முல்லைத்தீவில் வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்துக் கலந்த முல்லை […]
பண்டுதொட்டு தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. இத்தொடர்புகளே தமிழகத்தில் இருந்து மக்கள் புலப்பெயர்ச்சி, அரசியல் படையெடுப்பு, வர்த்தகம், பண்பாடு என்பன இலங்கையில் ஏற்படக் காரணமாகியது. இதில், வட இலங்கையின் அமைவிடம் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைவிடத் தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால் தமிழகத்தின் செல்வாக்கை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் படிக்கல்லாக இது திகழ்ந்தது. இச்செல்வாக்கு சங்ககாலத்தில் மிகச்சிறப்பாக இருந்ததை கட்டுரை ஆசிரியர் பூநகரி வட்டாரத்தில் கண்டுபிடித்த முதுமக்கள் […]
தமிழில் : த. சிவதாசன் மூலம் : marumoli.com, January 22, 2025. 2021 இல் நான் திரு டேவிட் பீரிஸை முதன் முதலாகச் சந்தித்தேன். தொழில் விடயமாக வடக்கிற்கு வந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எனது வீட்டில் நாம் சந்தித்தோம். டேவிட் பீரிஸ் மோட்டர் கொம்பனி (David Pieris Motor Company – DPMC), போர்க்காலமுட்பட, பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது. வியாபார முயற்சிகளுக்கும் அப்பால் வடக்கில் தனது நிறுவனம் […]
ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source : Sri Lanka’s Agony, Journal of Democracy, Vol.33, No.3, July 2022, pp. 92-99. சர்வாதிகாரம் படைத்த ஓர் குழுவில் இருந்துகொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள் இந்தத் தீவை வறுமையிலும் பட்டினியிலும் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தவறான ஆட்சிமுறைக்குப் பின்னணியாக ஆழத்தில் அமைந்திருப்பது நீண்டகாலப் பிரச்சினையான பெரும்பான்மையினரின் தடையற்ற ஆட்சிதான். – Journal of […]
சென்ற கட்டுரையில் மானிப்பாய்க் கோவிற்பற்றைப் பற்றி லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக அந்நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பற்றி ஆராயலாம். நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பு வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், நிலப்படத்தில் இரண்டு துணைப்பிரிவுகளை மட்டுமே குறித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவை […]
1 இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணம் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நோக்கிச் செல்கிறது. அதே நேரத்தில், ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் தனியார்துறை முதலீட்டை அதிகரிக்க பெரிதும் கவனம் செலுத்தப்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுக்குள்ளான அல்லது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வலையை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு, IMF திட்டம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் ஆதரவும் அங்கீகாரமும் உள்ளன. குறிப்பாக, கடன் மறுசீரமைப்பு […]
என் பெற்றோருடைய மூன்றாவது பிள்ளையாக நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அவர்களுடைய முதல் இரு பிள்ளைகளும் கோலாலம்பூர் நகரில் பிறந்தவர்கள். என் பெற்றோருடைய திருமணமே கோலாலம்பூரிலேதான் நடைபெற்றது. நான் பிறந்தபோது என் தாயாருடைய சகோதரர்கள் ஐவர் மலாயாவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு மூத்தவராக இருந்தவர் மலாயாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுத் திரும்பிவந்திருந்தார். மலாயா நாட்டுடனான இத்தகைய தொடர்பு யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பல இடங்களில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில், இலங்கை சுதந்திரம் அடையுமுன், […]
ஆங்கில மூலம் : கலன சேனரத்தின 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும் பதவி வகித்த காலம் அப்போது ஆரம்பித்தது. ஜனாதிபதித் தேர்தலை அடுத்து இம்மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 2015 இன் பிற்பகுதியிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடைபெறவிருந்தது. இதனால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால […]
கிழக்கு உரோகணத்துக்கு திருத்தமான எல்லை வகுத்து, அதில் சைவத்தமிழ் சமூகமொன்றை உருவாக்குவதற்கான அத்திவாரத்தை இலங்கை மீதான சோழப்படையெடுப்பு ஏற்படுத்தித் தந்தது என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அந்த அத்திவாரத்தின் மீது வலுவான அமைப்பொன்று அடுத்த நூறாண்டு காலத்துக்குள் உறுதியாக எழுவதற்கான வாய்ப்பை வரலாறு அமைத்துத் தந்தது. 1110 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஒருகுடையின் கீழ் ஆண்ட விசயவாகுவின் பிற்காலத்தில், இலங்கையிலிருந்த வணிககணங்களும் வேளக்காரப்படைகளும் அவனுக்கு ஆதரவான மனநிலையில் இருந்தன […]