உலக வரலாற்றில் தொழிற்சங்க இயக்கத்தினால் சாதிக்கப்பட்ட சாதனைகள் விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு கணிசமானவைகளாக உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் மற்றும் மேலும் சில மேற்குலக நாடுகளிலும் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியும் வளர்ச்சியும் பெருமளவில் உலகெங்கும் தொழிலாளர் படைகளைத் தோற்றுவித்தன. அதேபோல் மறுபுறத்தில் லாபம் என்ற ஒன்றை மட்டுமே மூல நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரங்கள் எழுச்சி பெற்றன. இவை […]
கல்மடுவிலுமிருக்கிறது இராசபக்கிச முதலியாருடைய மனுசர்கள் தான். அவர்கள் தானே மற்றும் வெளிகளெல்லாம் விரைத்துத் திண்டுகொண்டிருக்கிற நாளில் அப்படியே விரைத்துத் திண்டுகொண்டிருங்கோவென்று அவருடைய மனுசரை விட்டுப் போட்டு அவர் தளவில்லுக்குப் போய்க் குடியிருந்து கொண்டு அந்த வனம் ஏழுக்கும் முன்னீடு காபழு[1] அனுப்புகிறது வேடரிற் கரடியன் கம்மாஞ்சி[2]. அதன் பிறகு கந்தக் கம்மாஞ்சி – இவர்கள் முன்னீட்டுக் கம்மாஞ்சிமார், அதின்பிறகு கோவில்மேட்டுக்கு[3] அம்மாள் கொண்டு வந்தது ஆரென்றாற் சின்னத்தம்பிப்போடியென்கிறவன், மதுரைக்குப்போய் அங்கே […]
வடக்கு – கிழக்கின் விவசாயத்துறையில் மற்றொரு வாழ்வாதார வளமாக காணப்படும் பழப்பயிர்ச் செய்கையில் பல சாத்தியமான வளங்கள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையின் பழச்சந்தையில் கணிசமான ஒரு வீதத்தை நிரம்பல் செய்யும் இவ்விருமாகாணங்களிலிருந்தும் வாழை, மா, பப்பாசி, தர்பூசணி, தேசி, தோடை, கொய்யா, மாதுளை ஆகிய பழப்பயிர்கள் முதன்மை பெறுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாண வாழைச்செய்கை வாழைப்பழச்செய்கை பிரபல்யம் பெற்றுள்ள இலங்கையின் மாகாணங்களில் வடக்கும் கிழக்கும் பிரபல்யமானவை. வடக்கு […]
அநுராதபுரம் பண்டைய நகரில் அமைந்துள்ள வெஸ்ஸகிரிய பகுதியில் ஓடும் மல்வத்து ஓயா ஆற்றின் மேற்குக் கரையில் இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது பொ. ஆ. 946-954 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் உதயன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. மூன்று துண்டுகளாக உடைந்திருந்த கற்பலகை ஒன்றில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் கல்வெட்டின் இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. இவற்றில் பெரிய துண்டாகக் காணப்படுவது கல்வெட்டின் மேற்பகுதிக்குரிய துண்டாகும். இது 2 […]
அண்மைக் காலமாக மனித மருத்துவம் சார்ந்த போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் தொடர்பாகக் கரிசனை வெளியிடப்படுகிறது. ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளை முன்னுரிமைப்படுத்துகின்றன. மனித மருத்துவத்தைப் போல விலங்கு மருத்துவத்தில் ஏராளமான போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் உள்ளமையும் அதனால் ஏற்படும் மனித மற்றும் விலங்குகளில் ஆரோக்கியத்தில் ஏற்படும் சவால்களையும் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை விலங்கு மருத்துவ விஞ்ஞானக் கற்கைநெறி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் […]
“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்” – திருக்குறள் (26) மு.வரததாசனார் விளக்கம் செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்குஅரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். இந்த உலகையே மாற்றும் எண்ணங்களுடன் பலரும் வருவார்கள். அவர்களது நோக்கம் நன்றாக இருந்தாலும்கூட, அவர்களது செயல்முறை மற்றும் திட்டங்கள் என்பன அவ்வாறான காரியங்களை நிறைவேற்றத் தடையாக மாறிவிடுகின்றன. இதுவரை வெற்றியடைந்த ஆரம்ப நிறுவனங்கள் பலவற்றையும் உருவாக்கியவர்களின் (கட்டுரையாளர் உட்பட) […]
தோட்டக் கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே 1998 ஆம் ஆண்டில் தொழிலாளரின் நாளாந்த வேதனம் தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டுஒப்பந்தத்தின் கீழ், தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் ஊடாக நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டுவந்தது. 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி, நாளாந்தவேதனம் ரூபா 515.0 ஆகவும், தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளின் பின்னர் ரூபா 620.00 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலே கூறியவாறு, நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டபோது […]
தமிழ்ப் பண்பாட்டுத் தொடக்கம் வேறெந்தச் சமூகத்தினதையும் விட தனித்துவம்மிக்கது. வரலாற்றுத் தொடக்கத்துக்குரிய கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் வணிகச் செழிப்புடன் நகர்ப் பண்பாட்டு விருத்தியைப் பெற்றிருந்த அதேவேளை அதற்கான வர்த்தகப் பரிமாற்றத்தை ஏற்றத்தாழ்வற்ற வகையில் சமூகங்கள் இடையே மேற்கொள்ள இயலுமாக இருந்தது. ஏனைய சமூகங்களில் நகர்ப் பண்பாட்டு எழுச்சி ஏற்பட முன்னர் ஏற்றத்தாழ்வான வாழ்முறை உருவாகி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிற உழைப்பாளர்களது கடின வாழ்வுக்குரிய அடிமைத்தனம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறன்றித் தமிழக நகர்ப் […]
பொலநறுவை பண்டைய நகரில் உள்ள ரங்கொத் விகாரையின் அருகில் 1905 ஆம் ஆண்டு இந்தக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அப்போது இதன் அடியில் உள்ள பீடப்பகுதி உடைந்த நிலையில் இரண்டு தூண்டுகளாகக் காணப்பட்டது. பின்பு இக்கல்வெட்டு பொருத்தப்பட்டு, அனுராதபுரம் தொல்பொருள் காட்சிச்சாலையில் வைக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டு பொ.ஆ. 914-923 வரையான காலப்பகுதியில் ஆட்சி செய்த 5 ஆம் காசியப்பன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பிதர்வட்டு குழிய எனும் கிராமத்திற்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவது மற்றும் […]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இருபாலைச் செட்டியார் என்பவரால் இயற்றப்பெற்றதாகக் கருதப்படும் பதார்த்த சூடாமணியில் மிளகாயும் இடம்பெற்றுள்ளது. கவிதை வடிவிலான இந்நூலில் கூறப்பட்டுள்ள உணவுகளின் குணங்கள் பற்றி இத்தொடரில் ஆராயப்படுகின்றது. அவசியமான இடங்களில் சி. கண்ணுசாமிப்பிள்ளை அவர்களின் பதார்த்தகுணவிளக்கம் உள்ளிட்ட பிற தமிழ் மருத்துவ நூல்களில் இருந்தும் ஒருசில பாடல்கள் தரப்படுகின்றன. மிளகாய் தீதிலா மிளகாய்க்குள்ள செய்கையைச் சொல்லக் கேண்மோவாதமே சேடம் வாயு மந்தம் என் றினைய வெல்லாம்காதம்போம் […]