Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

நவீன விவசாயமும் உணவுப் புரட்சியும்

17 நிமிட வாசிப்பு

அறிமுகம் கடந்த பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதாரமான உணவை, எமது விவசாயப் பெருமக்களால் அனைத்து மக்களுக்கும் வழங்க முடிந்தது. எனினும் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல் 18 ஆம் நூற்றாண்டில் மனிதப் பெருக்கத்தின் அசுர வளர்ச்சியானது மிகப் பயங்கரமான உணவுப் பஞ்சம், இடப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையான போட்டி எனப் பல விளைவுகளை ஏற்படுத்தியது. பாரம்பரிய முறைகள் […]

மேலும் பார்க்க

நிச்சயமற்ற கோப்பியின் வீழ்ச்சியும் நிலையான தேயிலையின் ஆதிக்கமும்

16 நிமிட வாசிப்பு
February 8, 2023 | பி. ஏ. காதர்

கோப்பியின் பரிதாப வீழ்ச்சியும் மாற்று முயற்சிகளும் கோப்பி நோய் சுனாமி போல் ஓரிரவுக்குள் கோப்பிப் பெருந்தோட்டத்தை அழித்துவிடவில்லை. அதன் பரவல் மெதுவாக ஆனால் நிச்சயமானதாக நடைபெற்றது. கோப்பிப் பெருந்தோட்ட உற்பத்தி முற்றாக அழிவதற்கு சுமார் 20 வருடம் பிடித்தது.  பலரும்அறியாத  ஒரு விடயம் என்னவென்றால் இந்நோய் 1861 ஆம் ஆண்டு கென்யாவில் வளர்ந்த காட்டுக் கோப்பியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஸ்டூவர்ட் மெக்கூக் மற்றும் ஜான் வாண்டர்மீர் ஆகிய இருவரின் […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு I

18 நிமிட வாசிப்பு

அது 1967ஆம் ஆண்டு. பேராசிரியர் சி.பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை நூலைப் பதிப்பிப்பதற்காக அதன் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு சுவாரசியமான கையெழுத்துப் பிரதியொன்றைக் கண்டடைந்தார். அப்பிரதி “நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு” என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்பெயர் கொண்ட நூல் பற்றிய உரையாடல் எதுவும் அவருக்குத் தெரிந்தவரை ஈழத்துப் புலமைத்தளத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. எனவே அந்த மைப்பிரதியைக் கவனமாக ஆராய்ந்த அவர், அந்நூலை சிறு முன்னுரையுடன் 1976ஆம் ஆண்டு வெளியான அனைத்துலகத் […]

மேலும் பார்க்க

மதசார்பில்லாக் கருத்தியல்

18 நிமிட வாசிப்பு

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.மு 7 தொடக்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டுகள் வரை) குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகளின் இயற்கை விளைபொருட்களது வணிகமும் – வணிக எழுச்சியுடன் கைகோர்த்தவாறு கைத்தொழில் விருத்தியும் ஏற்படுத்தித் தந்த வாழ்வியல் செழிப்பு தமிழகத்தில் வீறுமிக்க பண்பாட்டு எழுச்சி ஏற்பட வழிகோலியது. தமது ஆள்புலத்தை விரிவாக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எவராலும் மேற்கொள்ள இயலாத வாழ்நிலை காரணமாக திணைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே சமத்துவமான பரிமாற்றங்கள் நிலவின; […]

மேலும் பார்க்க

திராவிடர் எழுச்சிக் குரல்களின் தாக்கம்

8 நிமிட வாசிப்பு

மன்னர் காலத்திற்குப் பின்னர் “நாம் தமிழ் இனம்” என்ற பிரக்ஞை தமிழ்நாட்டில் சுதந்திர இயக்கப் போராட்டங்களுடன் இணைந்தே மீண்டும் எழுச்சி பெற்றது. இதன் பிரதிபலிப்புகள் இலங்கையிலும் காணப்பட்டன.  இத்தகு எழுச்சி தமிழ்நாட்டில் பார்ப்பனருக்கு எதிரான எழுச்சியுடன் ஆரம்பமாகிறது. இவ்வெழுச்சிக்குக் காரணமாக  “தமிழன்”  மற்றும் “திராவிடன்” என்ற மனவெழுச்சி ஏற்படுத்திய  பிரவாகம் இருக்கிறது. இந்த மனவெழுச்சியுடன் இணைந்து பிராமணர்களுக்கு எதிரான  “சுயமரியாதை” இயக்கம் 1925 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்த எழுச்சியின் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவில் கீரை, இலைவகைகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

இங்கு குறிப்பிடப்படும் தாவர உணவு வகைகளின் குணங்கள் அவற்றின் தனியான குணங்களாகும். இவற்றினை நாம் உணவாக்கிக் கொள்ளும்போது அவற்றின் குணங்களில் மாற்றங்கள் ஏற்படக் கூடியவாறே எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்கள் அமைந்துள்ளன. உணவுப்பொருட்கள் எல்லாவற்றுக்குமே இவை பொருந்தும். உணவுப் பொருட்களில் உள்ள நற்குணங்களை அதிகரிக்கவும், ஒவ்வாத குணங்களை இல்லாமல் செய்வதற்கு அல்லது குறைப்பதற்கும் ஏற்றவாறே நமது பாரம்பரிய உணவுத் தயாரிப்பு முறைகள் அமைந்துள்ளன. ஏற்கனவே குறிப்பட்டதுபோல் திரிதோச சமதிரவியங்கள் உணவு வகைகளில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்

10 நிமிட வாசிப்பு

இடமொன்றின் தெரிந்தெடுக்கப்பட்ட இயல்புகளைக் குறியீட்டு அடிப்படையில் காட்டுவதே நிலப்படம் ஆகும். இது பெரும்பாலும் மட்டமான தளத்தில் வரையப்படுகின்றது.1 நிலப்படங்கள், அவை வரையப்பட்ட காலத்தின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன. நிலப்படங்கள் முதன்மையாக, முழு உலகினதோ அதன் பகுதிகளினதோ புவியியலை விளக்குவனவாக இருந்தபோதும், அவை அப்பகுதிகளின் வரலாறுகளைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகின்றன. “நிலப்படங்கள் சிறப்பான வரலாற்று மூலங்கள். பழைய நிலப்படம் ஒன்று, அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு கதையை உள்ளடக்கியிருக்கலாம். வரலாற்று நிலப்படங்களின் […]

மேலும் பார்க்க

வாணிப புத்திசாலித்தனமும் அதன் அடித்தளமும் (Business Acumen and its foundation)

7 நிமிட வாசிப்பு

“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்”– திருக்குறள் (461) மு.வரததாசனார் விளக்கம்: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். உலகில் மிகப்பிரபலமான  மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். அதன் நிறுவுநர் பில் கேட்ஸ் (Bill Gates). உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய முதன்மைப் பணக்காரர்களில் பில்கேட்ஸும் ஒருவர். பில்கேட்ஸ் உருவாக்கிய மென்பொருட்களைப் பயன்படுத்தாத எவருமே […]

மேலும் பார்க்க

மருத்துவர் கிறீனிடம் காணப்பட்ட பன்மைத்துவம்

7 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் பத்து ஆண்டுகள் மிஷன் பணியை நிறைவு செய்த மருத்துவர் கிறீன் அமெரிக்காவுக்குத் திரும்பியமையை 1858.07.24 அன்று வெளிவந்த நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கிறீன் இந்தியாவிலிருந்து திரும்பியதாக செய்தி வெளியிட்டது என்று கடந்தவாரம் பார்த்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவரை இந்தியாவிலிருந்து திரும்பியதாகப் பத்திரிகை குறிப்பிட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கென்று அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் தமது மிஷன் பயணத்தை ஆரம்பிக்கவில்லை. அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் இந்தியாவுக்குத்தான் வந்தார்கள். ஆனால் அவர்கள்  […]

மேலும் பார்க்க

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 5

25 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் கனடாவின் வரலாறு ஆரம்பம் தொடக்கம் கனடாவின் வரலாற்றில் ஒன்டாரியோவும், கியுபெக்கும் பிரதான வகிபாகம் பெற்றன. அத்திலாந்திக் மாநிலங்கள் பிரித்தானியாவின் காலனிகள் என்ற வகையில், தனித்துவமான வரலாற்றை உடையவை. தனித்துவமான அடையாளங்களும் அவற்றுக்கு உண்டு. கொண்பெடரேசன் அமைக்கப்பட்ட பின்னர், மேற்குப் பகுதியில் உள்ள மனிடோபா, சஸ்கற்சுவான், அல்பேர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியன கொண்பெடரேசனில் இணைந்தன. அந்த மாநிலங்களும் தமக்கே உரியதான […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்