இந்நூல் பாரம்பரிய விவசாயத்தை காலம்காலமாகக் கைக்கொள்வதனாலும் விவசாயக் கொள்கையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாததினாலும் இலங்கையின் விவசாயத்துறை எவ்வாறு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி, நவீன விவசாய தொழில்நுட்பங்களை இறுக்கமான விவசாயக் கொள்கைகளுடன் நடைமுறைப்படுத்தி விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வழிவகைகளை முன்னிறுத்தி, பலதரப்பட்டவர்களும் வாசித்துப் பயன்பெறக் கூடியவாறும், தமிழ் மொழியில் விவசாயம் சார்ந்த நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் நமது விவசாயத்துறையைச் சார்ந்த இளம் சந்ததிக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர். காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிக்கின்றன; அந்நாடுகள் தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்களினதும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்நூல் இத் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளது.
உலகெங்கும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய நெருக்கடியை காலநிலை மாற்றத்துக்கு மத்தியில் வளர்முக நாடுகள் முகம் கொடுக்கின்றன. எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு.
வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர், காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிப்பதோடு தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் சமூகப் பொறுப்பும் ஆகும்.
அந்த வகையில் துடிப்பான இளம் பேராசிரியர் கந்தையா பகீரதன் எழுதியுள்ள ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற நூல் இலங்கையின் பாரம்பரிய வேளாண்மையின் தொடக்கம், நாம் ஏன் நவீன பசுமைத் தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் புகுத்தவேண்டும் என்றும் அவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் இலங்கையில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு வலுவான விவசாயக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் எளிய மொழிநடையில் தாய்மொழியான தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளமை மிகச் சிறப்பானது. இன்று விவசாயம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தமிழ் மொழியில் மிகவும் குறைவு. இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்கள், தமிழ்நாட்டு அறிஞர்களினால் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் ஈழத் தமிழ் துறைசார் பேராசிரியர் ஒருவர் விவசாய விஞ்ஞானம் சார்ந்த அறிவை பாமர விவசாயிகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற முயற்சியில் இந்தநூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
பேராசிரியர் பகீரதன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவசாய விஞ்ஞானத் துறையில் பல பட்டங்களைப் பெற்றவர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விவசாயம் சம்பந்தமான அறிவுத் தேடலுக்கும் அறிவுப் பரப்பலுக்கும் சென்றவர். விவசாயத் துறையில் அதீத ஈடுபாடும் சிறந்த அனுபவமும் கொண்டவர். இத்தகைய சிறப்பு மிக்கவர், இன்று இலங்கை ஒரு பாரிய உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தறுவாயில், தமது நாட்டின் இளையோருக்கு தமது நாட்டின் விவசாய வரலாற்றையும் பாரம்பரிய உணவு உற்பத்தி முறையின் நன்மை தீமைகளையும் தெளிவுபடுத்தி, நவீன விவசாய நுட்பங்களை விளக்கி இளம் வேளாண் முயற்சியாளர்களுக்கு நவீன விவசாயத்தில் நாட்டத்தையும் விருப்பத்தையும் ஏற்படுத்தி, துறை சார்ந்தவர்களுக்கு விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை திட்டமிட இந்த நூல் ஒரு சிறந்த ஆதாரமாக அமையும் வகையில் எழுதி உள்ளார். அப்படிப்பட்ட நூலுக்கு அணிந்துரை வழங்குவது எனக்கும் பெருமை. இதுபோன்ற நூல்களை அவர் தமிழ் மொழியில் எழுதி தமிழுக்கும் விவசாயத்துறைக்கும் பெரும்பணி ஆற்ற இறைவனின் திருவருள் அவருக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பேராசிரியர் ரா. ராமன்,
உழவியல் துறைப் பேராசிரியர் மற்றும் இயக்குநர்,
இயற்கை மற்றும் நீடித்த வேளாண் மையம், விவசாய பீடம்,
அண்ணாமலை பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608 002,
தமிழ்நாடு.
Read More
Read Less
உலகெங்கும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய நெருக்கடியை காலநிலை மாற்றத்துக்கு மத்தியில் வளர்முக நாடுகள் முகம் கொடுக்கின்றன. எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு.
Read More
வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர், காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிப்பதோடு தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் சமூகப் பொறுப்பும் ஆகும்.
அந்த வகையில் துடிப்பான இளம் பேராசிரியர் கந்தையா பகீரதன் எழுதியுள்ள ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற நூல் இலங்கையின் பாரம்பரிய வேளாண்மையின் தொடக்கம், நாம் ஏன் நவீன பசுமைத் தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் புகுத்தவேண்டும் என்றும் அவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் இலங்கையில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு வலுவான விவசாயக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் எளிய மொழிநடையில் தாய்மொழியான தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளமை மிகச் சிறப்பானது. இன்று விவசாயம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தமிழ் மொழியில் மிகவும் குறைவு. இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்கள், தமிழ்நாட்டு அறிஞர்களினால் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் ஈழத் தமிழ் துறைசார் பேராசிரியர் ஒருவர் விவசாய விஞ்ஞானம் சார்ந்த அறிவை பாமர விவசாயிகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற முயற்சியில் இந்தநூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
பேராசிரியர் பகீரதன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவசாய விஞ்ஞானத் துறையில் பல பட்டங்களைப் பெற்றவர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விவசாயம் சம்பந்தமான அறிவுத் தேடலுக்கும் அறிவுப் பரப்பலுக்கும் சென்றவர். விவசாயத் துறையில் அதீத ஈடுபாடும் சிறந்த அனுபவமும் கொண்டவர். இத்தகைய சிறப்பு மிக்கவர், இன்று இலங்கை ஒரு பாரிய உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தறுவாயில், தமது நாட்டின் இளையோருக்கு தமது நாட்டின் விவசாய வரலாற்றையும் பாரம்பரிய உணவு உற்பத்தி முறையின் நன்மை தீமைகளையும் தெளிவுபடுத்தி, நவீன விவசாய நுட்பங்களை விளக்கி இளம் வேளாண் முயற்சியாளர்களுக்கு நவீன விவசாயத்தில் நாட்டத்தையும் விருப்பத்தையும் ஏற்படுத்தி, துறை சார்ந்தவர்களுக்கு விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை திட்டமிட இந்த நூல் ஒரு சிறந்த ஆதாரமாக அமையும் வகையில் எழுதி உள்ளார். அப்படிப்பட்ட நூலுக்கு அணிந்துரை வழங்குவது எனக்கும் பெருமை. இதுபோன்ற நூல்களை அவர் தமிழ் மொழியில் எழுதி தமிழுக்கும் விவசாயத்துறைக்கும் பெரும்பணி ஆற்ற இறைவனின் திருவருள் அவருக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பேராசிரியர் ரா. ராமன்,
உழவியல் துறைப் பேராசிரியர் மற்றும் இயக்குநர்,
இயற்கை மற்றும் நீடித்த வேளாண் மையம், விவசாய பீடம்,
அண்ணாமலை பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608 002,
தமிழ்நாடு.
Read Less
இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இலங்கைக்கு ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்தே இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் ஆரம்பிக்கிறது. இந்த உலகில் வாழ்கின்ற மூத்த இனமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ள தமிழினம், மனித இனத்தில் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரிகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட இனம். இதனாலேயே தான் நாமக்கல் கவிஞர், “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” என்று தமிழரை அடையாளப்படுத்தினார்.
Read More
வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் மகத்துவத்தையும் தமிழன் எவ்வாறு கருதினான் என்பதை திருக்குறளில் அழகாக வள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப்பிடி உணவை உண்ணுவதற்கு அதில் ஒவ்வொரு விவசாயிகளினுடைய உழைப்பு தங்கியிருக்கும். ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாக காணப்படுகிறது. இதுவரைக்கும் விளம்பரத்தில் ஈடுபடாத ஒரே தொழில் விவசாயம் தான் ஏனென்றால் விவசாயம் தொழில் அல்ல எமது உயிர்நாடி.
தீவு நாடான இலங்கையானது அதன் குடிமக்களில் மூன்றில் ஒரு பகுதியை விவசாயத்தில் பயன்படுத்துகிறது, விவசாய நிலப் பயன்பாடு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 42 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும், இலங்கையின் விவசாயத்துறை மட்டும் 8.18 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட மொத்த தொழிலாளர் படையில் 25.3% ஐப் பயன்படுத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 8 சதவீத பங்களிப்பை மாத்திரமே செய்கின்றது எனபது மிகவும் மனவேதனைக்குரியது. இலங்கையில் காணப்படுகின்ற சுமார் 2.3 மில்லியன் ஹெக்டேயர் விவசாய நிலத்தில் 80 சதவீதம் நெல், மக்காச்சோளம், பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை உள்ளடக்கிய உணவுப் பயிர்களின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1.65 மில்லியன் சிறு விவசாயிகள் சராசரியாக 2 ஹெக்டேயருக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தை மேற்கொண்டு மொத்த வருடாந்த உணவு உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை வழங்குகின்றனர். அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை, நிலையற்ற விவசாயக் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களை விவசாயத் துறையில் பயன்படுத்தாமை, விவசாயத்திற்கு மதிப்பளிக்காமை, தாராள இறக்குமதி, ஊழல் போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கையின் பொருளாதார முதுகெலும்பான விவசாயம் உடைக்கப்பட்டு உணவுக்குக்கூட வேறுநாட்டில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சைவமும், தமிழும் மற்றும் வேளாண்மையும் ஆழ வேரூன்றிய சிறு நகரான காரைநகரிலே விவசாய வணிகக் குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறுவயது முதலே விவசாயம், கால்நடை வளர்ப்பு, மற்றும் இயற்கையின் மீதும் ஒரு இனம் புரியாத அதீத ஈர்ப்பு. அந்த ஈர்ப்பின் இறையருள் சித்தமாக விவசாய விஞ்ஞானப் பிரிவில் இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்று பேராசிரியற் பதவியில் இருக்கும் எனக்கு எம்முடைய விவசாயிகள் இன்றுவரை ஏன் பசுமைத் தொழில்நுட்பங்களை தமது பண்டைய விவசாய முறைகளுக்குள் புகுத்தவில்லை என்பது ஒரு புரியாத புதிராக இருந்தது. பரம்பரை விவசாயிகளிடம் இதனைப் பற்றிக் கேட்டேன் பெரிதாகத் தெரியாது என்றார்கள், இளம் விவசாயிகளிடம் கேட்டேன் விளக்கமும் போதிய அறிவும் இல்லை என்றார்கள், எனக்கு ஏமாற்றம். இந்த அவலநிலை மாறவேண்டும் என்ற நோக்குடன் காரணத்தை ஆராய்ந்தபோது அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியில் விவசாயத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் விளக்கக் கட்டுரைகள் இல்லை என்பதை அறிந்து கொண்டேன். எனது சங்கடத்தைப் போக்க எழுநா முன்வந்தது, நீங்கள் எழுதுங்கள் செம்மொழியில் நாங்கள் சேர்க்கிறோம் மக்களிடத்தில் என்றார்கள். எனக்கு, எரியும் அவா என்னும் நெருப்பினுள் எண்ணையை ஊற்றியது போல் இருந்தது. என்னுடைய தளராத முயற்சியில், ஓய்வு நேரத்தை எல்லாம் மிகவும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி, பல்கலைக்கழக பேராசிரியர் என்ற வகையில் எனது தமிழ் சமூகத்துக்கு செய்யவேண்டிய மிக உன்னத பணியாக சிரம் ஏற்று மிகவும் பயனுள்ள பல தகவல்களைத் திரட்டி இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை தொடக்கம், நாம் ஏன் நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் புகுத்தவேண்டும் என்றும் அவ்வாறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் இலங்கையில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு வலுவான விவசாயக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை உள்ளடக்கி ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, 12 அத்தியாயங்களாகப் பிரித்து இந்நூலை விவசாயப் பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள், பட்டப்பின் படிப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், மற்றும் சாதாரண பொதுமக்கள் என அனைவரும் வாசித்து பயன் மற்றும் மேலதிக பசுமைத் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைப் பெற்று தமது பரம்பரிய விவசாயத்தினுள் பசுமைத் தொழில்நுட்பத்தை புகுத்தக்கூடிய வகையில் மிகவும் எளிய உரை நடையில் எனது தாய் மொழியான தமிழ் மொழியில் எழுதியுள்ளேன்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க, இந் நூலை செவ்வனே எழுத உறுதுணையாக இருந்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டி, வெளியிட உத்வேகமும் ஊக்கமும் தந்த எழுநா வெளியீட்டாளர்களுக்கும் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூல் பாரம்பரிய விவசாயத்தை காலம்காலமாகக் கைக்கொள்வதனாலும் விவசாயக் கொள்கையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாததினாலும் இலங்கையின் விவசாயத்துறை எவ்வாறு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி, நவீன விவசாய தொழில்நுட்பங்களை இறுக்கமான விவசாயக் கொள்கைகளுடன் நடைமுறைப்படுத்தி விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வழிவகைகளை முன்னிறுத்தி, பலதரப்பட்டவர்களும் வாசித்துப் பயன்பெறக் கூடியவாறும், தமிழ் மொழியில் விவசாயம் சார்ந்த நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் நமது விவசாயத்துறையைச் சார்ந்த இளம் சந்ததிக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர். காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிக்கின்றன; அந்நாடுகள் தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்களினதும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்நூல் இத் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளது.
உலகெங்கும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய நெருக்கடியை காலநிலை மாற்றத்துக்கு மத்தியில் வளர்முக நாடுகள் முகம் கொடுக்கின்றன. எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு.
வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர், காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிப்பதோடு தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் சமூகப் பொறுப்பும் ஆகும்.
அந்த வகையில் துடிப்பான இளம் பேராசிரியர் கந்தையா பகீரதன் எழுதியுள்ள ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற நூல் இலங்கையின் பாரம்பரிய வேளாண்மையின் தொடக்கம், நாம் ஏன் நவீன பசுமைத் தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் புகுத்தவேண்டும் என்றும் அவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் இலங்கையில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு வலுவான விவசாயக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் எளிய மொழிநடையில் தாய்மொழியான தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளமை மிகச் சிறப்பானது. இன்று விவசாயம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தமிழ் மொழியில் மிகவும் குறைவு. இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்கள், தமிழ்நாட்டு அறிஞர்களினால் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் ஈழத் தமிழ் துறைசார் பேராசிரியர் ஒருவர் விவசாய விஞ்ஞானம் சார்ந்த அறிவை பாமர விவசாயிகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற முயற்சியில் இந்தநூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
பேராசிரியர் பகீரதன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவசாய விஞ்ஞானத் துறையில் பல பட்டங்களைப் பெற்றவர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விவசாயம் சம்பந்தமான அறிவுத் தேடலுக்கும் அறிவுப் பரப்பலுக்கும் சென்றவர். விவசாயத் துறையில் அதீத ஈடுபாடும் சிறந்த அனுபவமும் கொண்டவர். இத்தகைய சிறப்பு மிக்கவர், இன்று இலங்கை ஒரு பாரிய உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தறுவாயில், தமது நாட்டின் இளையோருக்கு தமது நாட்டின் விவசாய வரலாற்றையும் பாரம்பரிய உணவு உற்பத்தி முறையின் நன்மை தீமைகளையும் தெளிவுபடுத்தி, நவீன விவசாய நுட்பங்களை விளக்கி இளம் வேளாண் முயற்சியாளர்களுக்கு நவீன விவசாயத்தில் நாட்டத்தையும் விருப்பத்தையும் ஏற்படுத்தி, துறை சார்ந்தவர்களுக்கு விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை திட்டமிட இந்த நூல் ஒரு சிறந்த ஆதாரமாக அமையும் வகையில் எழுதி உள்ளார். அப்படிப்பட்ட நூலுக்கு அணிந்துரை வழங்குவது எனக்கும் பெருமை. இதுபோன்ற நூல்களை அவர் தமிழ் மொழியில் எழுதி தமிழுக்கும் விவசாயத்துறைக்கும் பெரும்பணி ஆற்ற இறைவனின் திருவருள் அவருக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பேராசிரியர் ரா. ராமன்,
உழவியல் துறைப் பேராசிரியர் மற்றும் இயக்குநர்,
இயற்கை மற்றும் நீடித்த வேளாண் மையம், விவசாய பீடம்,
உலகெங்கும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய நெருக்கடியை காலநிலை மாற்றத்துக்கு மத்தியில் வளர்முக நாடுகள் முகம் கொடுக்கின்றன. எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு.
இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இலங்கைக்கு ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்தே இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் ஆரம்பிக்கிறது. இந்த உலகில் வாழ்கின்ற மூத்த இனமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ள தமிழினம், மனித இனத்தில் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரிகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட இனம். இதனாலேயே தான் நாமக்கல் கவிஞர், “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” என்று தமிழரை அடையாளப்படுத்தினார்.