காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்
மரியநாயகம் நியூட்டன்
எழுநா – 17
2025
‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ எனும் இந் நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்நூல், இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உரித்து என்பவை தொடர்பிலும் இது பேசுகின்றது.
“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” என்ற இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் ‘சுதந்திரம்’ என்ற கதையாடலின் கீழ் எப்படி இலங்கைக் குடிமக்கள் சுதந்திரமின்றி தங்கள் சுயமான தொழில் வாய்ப்புகளைப் பறிகொடுத்து தங்களுக்கான வாழ்வாதாரங்கள் எதுவுமின்றிப் பரிதவிக்கிறார்கள் என்பதை படிப்பவர் எவரும் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கின்றன.
இந்நூலில் கட்டுரையாளர் பிரதானமாக இரண்டு விடயங்களை தனது பார்வைக்கும், பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தியுள்ளார். ஒன்று கடலும் கடல் சார்ந்த மீன்பிடித் தொழிலும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களும். மற்றையது சுற்றாடல் (சுற்றுப் புறச் சூழல்) மாசடைதல். அதனை அவர் “நீலப் பொருளாதாரம்” “கடல் விவசாயம்” “கடல் பொருளாதார அபிவிருத்தி” என்ற பார்வைக் கோணங்களுக்குள் அடக்கியிருப்பதாகத் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, சுற்றிவரக் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. அத்துடன் ஆழ் கடல், பரவைக் கடல், பாசிக் கடல், சேற்றுக் கடல் போன்று பல்வேறுபட்ட தன்மைகள் கொண்ட சூழல்களையும் பல்வேறுபட்ட கடல் வாழ் மீன் வகைகளையும் தனது கடல் எல்லைக்குள் கொண்டிருக்கும் ஒரு நாடு. சுதந்திரமான ஆட்சியும், சுயமான பொருளாதாரத் திட்டங்களும் கொண்ட நாடாக இருந்திருந்தால் கடலுணவு ஏற்றுமதி மூலமே கணிசமான அந்நியச் செலாவணியை நாட்டின் வருமானமாக சம்பாதித்திருக்க முடியும். ஆனால், காலனித்துவ ஆட்சியாளர்கள் ‘சுதந்திரம்’ என்ற போர்வையில் இலங்கையில் ஏற்பாடு செய்துவிட்டுச் சென்ற ஆட்சி முறைமை 75 வருடங்களில் எமது நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. (“மக்களின் அன்றாட சீவியத்தை விட கடலின் -இயற்கை வளத்தின் பெறுமதியை விட அவர்களுக்கு சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகார வேட்கையைத் தீர்த்துக் கொள்வதுமே பெரிதாக இருக்கின்றது” – நூலில் இருந்து).
இதன் பின்னணியிலேயே காலங்காலமாக கடலுடன் பின்னிப் பிணைந்து கடற்றொழில் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டிக் காத்து வாழ்க்கைத் தரத்தையும் உறுதிப்படுத்தி வாழ்ந்து வந்த மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதனால் அனுபவிக்கும் துன்ப துயரங்களையும் விரிவாகவும், துல்லியமாகவும் எடுத்துரைக்கிறது இந்த நூல்.
2009லிருந்து இலங்கையின் வடக்கு – கிழக்கு மீன்பிடி சமூகத்தினர் இரண்டு பிரதான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒன்று இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நடாத்தும் கடற் கொள்ளை. மற்றையது கடல் அட்டை வளர்ப்பு உட்பட பல் தேசிய நிறுவனங்களின் பரிசோதனை ஆராய்ச்சிக் கூடங்கள். இவ்விரு பிரச்சினைகளும் மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளாகும். இயற்கை அழிவு மற்றும் மாசடையும் சுற்றாடல் என்பவை முதற் குறிப்பிட்ட நடவடிக்கைகளின் பக்க விளைவுகள் ஆகும்.
இந்த நூல் குறிப்பாக, இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றுப் பின்னணி ஊடாக அவர்களுக்குப் புரியவைப்பதற்கு முயற்சிக்கிறது. அதனூடாக இதில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும் அனைவரையும் அப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வை நோக்கிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இது ஒரு ஆய்வு நூலாகவும் அதேவேளை ஒரு வரலாற்று ஆவணமாகவும் அத்துடன், மாற்றத்திற்கான தூண்டுகோலாகவும் காணப்படுகிறது.
இதில் தரப்பட்டுள்ள தரவுகள், புள்ளி விவரங்கள், விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் யாவுமே இதுவரை மக்களால் அறியப்படாத அல்லது அவர்கள் அறியாத வண்ணம் மறைத்துவைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கிறது. கடல் எல்லைப் பிரச்சினையும் கடல் அட்டை வளர்ப்பு ஊடுருவல்களும் தனியே தமிழ் மீன்பிடி சமூகத்தினரை மட்டும் பாதிக்கும் விடயம் அல்ல. தென்னிலங்கை சிங்கள மீன்பிடி சமூகத்தினரையும் அதன் ஊடாக ஒட்டுமொத்த இலங்கைக் குடிமக்களையும் பாதிக்கிறது என்பதனை படிப்பவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாளர் இந்நூலைப் படைத்துள்ளார். சட்ட விரோத எல்லை தாண்டிய கடற்கொள்ளை வட பகுதி தமிழ் மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கத் தொடங்குவதற்கு முன்னரேயே கிழக்குத் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி தமிழ் சிங்கள மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கும் விதத்தில் சீனப் பல்தேசியக் கம்பெனி இழுவைக் கப்பல்களின் எல்லை தாண்டிய கடற்கொள்ளை இலங்கை அரசின் அனுமதியுடன் ஆரம்பித்து விட்டிருந்ததையும் இக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பரவலாக உலகின் பல நாடுகளில் இயற்கையையும் சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டும் எனச் சட்டங்கள் இயற்ற வேண்டிய தேவை அந்தந்த நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வு காரணமாக உருவாகி வருகிறது. பாரிய மீன்பிடிக் கப்பல்களின் இடைவிடாத செயற்பாடுகளினால் மீனினங்களின் இனப்பெருக்கம் தடைப்பட்டு அவை முற்றாக அழிந்து போகும் ஆபத்து காணப்படுகிறது. இயந்திர இழுவைப் படகுகள் கடலடி மீன்களின் வாழ்விடங்களை நிர்மூலமாக்குவதால் மீனினங்கள் அழிந்து போகின்றன. இதனால், ஆழ்கடல் மீன்பிடி சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றன. முறைதலையற்ற கடல் அட்டை வளர்ப்பு கரையோரத் தொழில் சார்ந்த மீன்பிடி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. மேலும், இவைகள் பற்றிய தெளிவான விளக்கமான புள்ளிவிவரத் தரவுகளை இந் நூலில் படித்தறிந்து கொள்ளலாம்.
கட்டுரையாளரின் சொந்த அனுபவங்களே படிப்பவர்களுக்கு இதனை ஒரு வரலாற்று ஆவணமாக உணர்ந்துகொள்ளச் செய்கிறது. அவரது தேடல்களே இதனை ஒரு ஆய்வு நூலாக கருதவைக்கிறது. அவர் கற்றுணர்ந்த தொழில்துறையே இதனை மாற்றத்திற்கான ஒரு தூண்டுகோலாகவும் ஆக்கியுள்ளது.
இலங்கைக் குடிமக்களின் சுபீட்சமான சுதந்திர நல்வாழ்வை வேண்டி நிற்போர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பில், 2009 போர் முடிவுக்கு பின்னான காலத்தில் கடல், அதன் இயற்கை வளங்கள், கடல் சார்ந்த மக்களின் பொருளாதாரம் பற்றிய ஆறு கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள மூன்று கட்டுரைகள், நோர்வேஜிய மொழியில் என்னால் எழுதப்பட்ட சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அவற்றின் உள்ளடக்கம் இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Read More
சரியாகச் சொல்ல வேண்டுமானால், கடல் சார்ந்த சமூகம் இந்தக்கட்டுரைகளின் உள்ளடக்கத்தை இலகுவாக விளங்கிக் கொள்வதற்காக கூடுமான அளவுக்கு மொழியியல் ரீதியாக இலகுபடுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரைத் தொகுப்பு ‘புலமைசார்’ (அகடமிக்கல்) மயிர் பிளக்கும் ஆராய்ச்சிக்காகவோ, அல்லது விவாதங்களுக்காகவோ எழுதப்படவில்லை. மாறாக, ஒடுக்கப்படும் கடலோடி மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கும் கடலையும், அதன் வளங்களையும் பாதுகாக்கப் போராடும் சக்திகளுக்கு உரம் ஊட்டவே எழுதப்பட்டது.
இலங்கைஎன்றதேசத்தைமுன்னிறுத்தி தேசியம் பேசும் சிங்கள, தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள், தொடர்ச்சியாகஅழிவுக்குள்ளாக்கப்படும்ஈழதேசத்தின் கடல்வளங்களைப் பற்றிபெரிதாகஅலட்டிக்கொண்டதாகத்தெரியவில்லை. மாறாக, எமதுகடல்வளங்களைசர்வதேச கடற்பொருளாதார– வல்லாதிக்கநாடுகள்கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டு கள்ளமௌனம்சாதிக்கிறார்கள். மக்களைப்பிரிப்பதற்காகமட்டும்பலவகை‘தேசியங்களை’ பேசும்இவர்களின்இந்த ‘பாசாங்குத்தேசிய‘ அரசியலைகொஞ்சமாவதுவெளிச்சம்போட்டுக்காட்டஇந்தத்தொகுப்பு உதவுமென்று நம்புகிறேன்.
இந்தக் கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்படும் இயற்கையின் இயல்பான மாற்றங்கள் தவிர்ந்த பிரச்சினைகளுக்கு, இந்த நாட்டை ஆள்பவர்களும் ஆண்டவர்களுமே பொறுப்பு! அதேபோன்று, அரசியல் – சமூக – பொருளாதார ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் எல்லாவகை அரசியல்வாதிகளும் – எதிர்க்கட்சிகளும் கூட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தான்! இத்தொகுப்பிலுள்ள விமர்சனங்களை, மக்கள் நலனில் நின்று, இயற்கையின் பக்கம் நின்று பார்க்கும் கண்ணோட்டத்துடன் இலங்கையின் அரசியல் தரப்பினர் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
புலப்பெயர்வு காரணமாக, சரளமாக தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் நீண்டகால இடைவெளி ஏற்பட்டதனால், கட்டுரைகளில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மொழிப் பிரயோகத்திலும் இலக்கண ரீதியாகவும் சிலபல தவறுகள் இருக்கலாம். கட்டுரைகளின் உள்ளடக்கங்கள், அவை பேச வரும் விடயதானங்கள், கட்டுரை ஏற்படுத்தும் உணர்வுகள் போன்றன, மொழியியல் தவறுகளை பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு உதவும் என எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன், இத்தவறுகள் கட்டுரையின் உள்ளடக்கத்தை விளங்கிக்கொள்ளாமல் போவதற்கு இடையூறாக இருக்காது என்றும் நம்புகிறேன். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள், சில வருட இடைவெளியில் எழுதப்பட்டதினால் ஒரே வகையான வரலாற்றுத் தகவல்கள் சில கட்டுரைகளில் காணப்படுகின்றன. அவை வாசிப்பின் இலக்கு கருதி மாற்றம் செய்யாமல் அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இலங்கைப் பாராளுமன்றத்தின் 2023 கார்த்திகை மாத அறிவிப்பின்படி, புதிய கடல்சார் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த சட்ட நகல் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசிப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, புதிய சட்டத்திருத்தங்கள், சர்வதேச நாடுகள் இலங்கையின் விசேட பொருளாதார கடற்பிராந்தியத்தில் அனுமதி பெற்று (லைசென்ஸ்) மீன்பிடிக்க வகை செய்யவுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அது பாரிய கடல்சார்ந்த இயற்கை, சமூக, பொருளாதார அழிவை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.
எனதுதேசத்தின்கடலையும்அதன்மக்களையும்பற்றிபேசும்இக் கட்டுரைகளைத் தமிழில்எழுதுவதற்கு எனக்குமுன்னுதாரணமாகவும், கடல்சார் நிலத்தின் எழுச்சிக் குரலாகவும்பலம் சேர்த்ததோழமை, கடலின்புதல்வன், முன்னாள் தமிழ்த் தேசியப் போராளி, அழகிரி அவர்களுக்கும் எனதுநன்றிகள்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் உள்ளடக்கத்தில் பேசப்படும் பொருளாதாரம், சமூக வாழ்வு, அறம், அரசியல் வரலாறு, அரசியல் கண்ணோட்டம் சார்ந்து என்னை சீர்செய்தவர் சகோதரர் மனோரஞ்சன் செல்லையா அவர்கள். அவரே இதன் தொகுப்பாசிரியர். அவரின் நெறிப்படுத்தல் இன்றி இது வெளிவந்திருக்க முடியாது. அவருக்கு, கடலினதும் அது சார்ந்த மக்களினதும் சார்பாக மட்டற்ற அன்பும், நன்றியும்.
எனது அரசியற் செயற்பாடுகள், சமூகம் சார்ந்த செயற்றிட்டங்களுக்கு எப்போதும் எனக்கு கைகொடுத்து பலம் சேர்க்கும் சகோதரி, அக்காச்சி பத்ம பிரபாவுக்கும், சகோதரர் புதுமைலோலன் மஹாலிங்கம் அவர்களுக்கும் எனது அன்பையும், பாசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தின் மெலிஞ்சிமுனைஎன்றசிறியமீன்பிடிக்கிராமத்தில்பிறந்து, எனது பதினான்காம் வயதில் ஊரை விட்டும் – பின்னர் நாட்டைவிட்டும்வெளியேறி, வடநோர்வேயில்உயர்கல்விமுடித்து, எனக்கான குடும்பத்தைஅந்நாட்டில்உருவாக்கிவாழ்ந்துவரும்இன்றையவாழ்வியல்நிலையிலும்கூட, ஈழதேசத்தின்கடலும்அதுசார்ந்தஉணர்வுகளும் நெருக்கமும்என்னுடனேயேதொடர்கிறது.
கடல்என்பதுஎனதுஆத்மாவிலும்‘இரத்தத்திலும்’ ஊறிப்போனஒன்று. தத்துவம், அரசியல், சமூகவியல், இலக்கியம், பொருளாதாரம்போன்றஎல்லாவகைஅறிவியல்தளங்களிலும்– கடல்சார்ந்த விடயங்களைபேசும்போது, அதுஎனதுமனதுக்கு நெருக்கமாகி விடுகிறது. அந்தநெருக்கத்தை இக்கட்டுரைகள்உங்களுக்கும்ஏற்படுத்தும்எனநம்புகிறேன்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் அரசியல், மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்துகிறது. மக்களைச் சார்ந்து நின்றே அதிகாரங்களுக்கு எதிரான கேள்விகளை முன்வைக்கிறது. சில பிரபல வெளியீட்டகங்கள் வெளியிட விரும்பியபோதும் – மேற்படி அதிகாரங்களுக்கு எதிரான விமர்சனங்கள் காரணமாக வெளியிடுவதிலிருந்து விலகிக்கொண்டன. அதேவேளை, விமர்சனங்களை விலக்கிவிட்டு வெளியிடுவதற்கு நான் தயாராகவும் இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்தத் தொகுப்பை எல்லாவகை ஊடகங்களினூடாகவும் வெளியிட்டுள்ள எழுநா வெளியீட்டகத்துக்கும், அதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சசீவன் கணேசானந்தனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக!
‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ எனும் இந் நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்நூல், இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உரித்து என்பவை தொடர்பிலும் இது பேசுகின்றது.
“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” என்ற இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் ‘சுதந்திரம்’ என்ற கதையாடலின் கீழ் எப்படி இலங்கைக் குடிமக்கள் சுதந்திரமின்றி தங்கள் சுயமான தொழில் வாய்ப்புகளைப் பறிகொடுத்து தங்களுக்கான வாழ்வாதாரங்கள் எதுவுமின்றிப் பரிதவிக்கிறார்கள் என்பதை படிப்பவர் எவரும் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கின்றன.
இந்நூலில் கட்டுரையாளர் பிரதானமாக இரண்டு விடயங்களை தனது பார்வைக்கும், பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தியுள்ளார். ஒன்று கடலும் கடல் சார்ந்த மீன்பிடித் தொழிலும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களும். மற்றையது சுற்றாடல் (சுற்றுப் புறச் சூழல்) மாசடைதல். அதனை அவர் “நீலப் பொருளாதாரம்” “கடல் விவசாயம்” “கடல் பொருளாதார அபிவிருத்தி” என்ற பார்வைக் கோணங்களுக்குள் அடக்கியிருப்பதாகத் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, சுற்றிவரக் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. அத்துடன் ஆழ் கடல், பரவைக் கடல், பாசிக் கடல், சேற்றுக் கடல் போன்று பல்வேறுபட்ட தன்மைகள் கொண்ட சூழல்களையும் பல்வேறுபட்ட கடல் வாழ் மீன் வகைகளையும் தனது கடல் எல்லைக்குள் கொண்டிருக்கும் ஒரு நாடு. சுதந்திரமான ஆட்சியும், சுயமான பொருளாதாரத் திட்டங்களும் கொண்ட நாடாக இருந்திருந்தால் கடலுணவு ஏற்றுமதி மூலமே கணிசமான அந்நியச் செலாவணியை நாட்டின் வருமானமாக சம்பாதித்திருக்க முடியும். ஆனால், காலனித்துவ ஆட்சியாளர்கள் ‘சுதந்திரம்’ என்ற போர்வையில் இலங்கையில் ஏற்பாடு செய்துவிட்டுச் சென்ற ஆட்சி முறைமை 75 வருடங்களில் எமது நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. (“மக்களின் அன்றாட சீவியத்தை விட கடலின் -இயற்கை வளத்தின் பெறுமதியை விட அவர்களுக்கு சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகார வேட்கையைத் தீர்த்துக் கொள்வதுமே பெரிதாக இருக்கின்றது” – நூலில் இருந்து).
இதன் பின்னணியிலேயே காலங்காலமாக கடலுடன் பின்னிப் பிணைந்து கடற்றொழில் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டிக் காத்து வாழ்க்கைத் தரத்தையும் உறுதிப்படுத்தி வாழ்ந்து வந்த மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதனால் அனுபவிக்கும் துன்ப துயரங்களையும் விரிவாகவும், துல்லியமாகவும் எடுத்துரைக்கிறது இந்த நூல்.
2009லிருந்து இலங்கையின் வடக்கு – கிழக்கு மீன்பிடி சமூகத்தினர் இரண்டு பிரதான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒன்று இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நடாத்தும் கடற் கொள்ளை. மற்றையது கடல் அட்டை வளர்ப்பு உட்பட பல் தேசிய நிறுவனங்களின் பரிசோதனை ஆராய்ச்சிக் கூடங்கள். இவ்விரு பிரச்சினைகளும் மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளாகும். இயற்கை அழிவு மற்றும் மாசடையும் சுற்றாடல் என்பவை முதற் குறிப்பிட்ட நடவடிக்கைகளின் பக்க விளைவுகள் ஆகும்.
இந்த நூல் குறிப்பாக, இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றுப் பின்னணி ஊடாக அவர்களுக்குப் புரியவைப்பதற்கு முயற்சிக்கிறது. அதனூடாக இதில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும் அனைவரையும் அப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வை நோக்கிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இது ஒரு ஆய்வு நூலாகவும் அதேவேளை ஒரு வரலாற்று ஆவணமாகவும் அத்துடன், மாற்றத்திற்கான தூண்டுகோலாகவும் காணப்படுகிறது.
இதில் தரப்பட்டுள்ள தரவுகள், புள்ளி விவரங்கள், விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் யாவுமே இதுவரை மக்களால் அறியப்படாத அல்லது அவர்கள் அறியாத வண்ணம் மறைத்துவைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கிறது. கடல் எல்லைப் பிரச்சினையும் கடல் அட்டை வளர்ப்பு ஊடுருவல்களும் தனியே தமிழ் மீன்பிடி சமூகத்தினரை மட்டும் பாதிக்கும் விடயம் அல்ல. தென்னிலங்கை சிங்கள மீன்பிடி சமூகத்தினரையும் அதன் ஊடாக ஒட்டுமொத்த இலங்கைக் குடிமக்களையும் பாதிக்கிறது என்பதனை படிப்பவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாளர் இந்நூலைப் படைத்துள்ளார். சட்ட விரோத எல்லை தாண்டிய கடற்கொள்ளை வட பகுதி தமிழ் மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கத் தொடங்குவதற்கு முன்னரேயே கிழக்குத் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி தமிழ் சிங்கள மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கும் விதத்தில் சீனப் பல்தேசியக் கம்பெனி இழுவைக் கப்பல்களின் எல்லை தாண்டிய கடற்கொள்ளை இலங்கை அரசின் அனுமதியுடன் ஆரம்பித்து விட்டிருந்ததையும் இக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பரவலாக உலகின் பல நாடுகளில் இயற்கையையும் சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டும் எனச் சட்டங்கள் இயற்ற வேண்டிய தேவை அந்தந்த நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வு காரணமாக உருவாகி வருகிறது. பாரிய மீன்பிடிக் கப்பல்களின் இடைவிடாத செயற்பாடுகளினால் மீனினங்களின் இனப்பெருக்கம் தடைப்பட்டு அவை முற்றாக அழிந்து போகும் ஆபத்து காணப்படுகிறது. இயந்திர இழுவைப் படகுகள் கடலடி மீன்களின் வாழ்விடங்களை நிர்மூலமாக்குவதால் மீனினங்கள் அழிந்து போகின்றன. இதனால், ஆழ்கடல் மீன்பிடி சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றன. முறைதலையற்ற கடல் அட்டை வளர்ப்பு கரையோரத் தொழில் சார்ந்த மீன்பிடி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. மேலும், இவைகள் பற்றிய தெளிவான விளக்கமான புள்ளிவிவரத் தரவுகளை இந் நூலில் படித்தறிந்து கொள்ளலாம்.
கட்டுரையாளரின் சொந்த அனுபவங்களே படிப்பவர்களுக்கு இதனை ஒரு வரலாற்று ஆவணமாக உணர்ந்துகொள்ளச் செய்கிறது. அவரது தேடல்களே இதனை ஒரு ஆய்வு நூலாக கருதவைக்கிறது. அவர் கற்றுணர்ந்த தொழில்துறையே இதனை மாற்றத்திற்கான ஒரு தூண்டுகோலாகவும் ஆக்கியுள்ளது.
இலங்கைக் குடிமக்களின் சுபீட்சமான சுதந்திர நல்வாழ்வை வேண்டி நிற்போர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பில், 2009 போர் முடிவுக்கு பின்னான காலத்தில் கடல், அதன் இயற்கை வளங்கள், கடல் சார்ந்த மக்களின் பொருளாதாரம் பற்றிய ஆறு கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள மூன்று கட்டுரைகள், நோர்வேஜிய மொழியில் என்னால் எழுதப்பட்ட சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அவற்றின் உள்ளடக்கம் இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.