1940 களில் இருந்தே இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியில் இருந்த நகரங்கள் படிப்படியாக ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டன. 1956 ஆம் ஆண்டில் கொழும்பும் வீழ்ச்சியடைந்த பின்னர், ஒல்லாந்தரின் கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது. இதற்கிடையில், கொழும்பிலிருந்து வெளியேறிய போர்த்துக்கேயப் படை வீரர்களில் ஒரு பகுதியினர், போர்த்துக்கேயரின் ஆட்சி நிலவிய கடைசி நகரமான யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்தனர். இவர்களில் ஒருவர், யோன் ரிபெய்ரோ. இவர் பின்னர் இலங்கை குறித்து, இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் […]