“நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான், மிருகங்களைப்போல் நடத்தப்பெறாமல் மனிதர்களைப்போல் தலைநிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமையில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நீங்கள் இன்றே யோசியுங்கள். இப்புஸ்தகத்தில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனித்து வாசியுங்கள். வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எல்லோரும் ஒன்றுகூடுங்கள். ஒற்றுமைப்படுங்கள். சங்கங்கூட்டுங்கள். அவ்விதம் நீங்கள் ஒற்றுமைப்பட்டுவிட்டதாகக் கண்டாலும் கேட்டாலும் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். பாரதமாதா சந்தோஷப்படுவாள். சுதந்திர வீரர்கள் கூத்தாடுவார்கள். உங்களை அடிமைகளாக வைத்து […]
தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்குப் பெருந்தோட்டக் கட்டமைப்பு, அரசியற்கொள்கை, தொழிலாளர் சட்ட ஏற்பாடுகள், ஊதியமுறை முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ள கோ. நடேசய்யர், அம்மேம்பாட்டுக்குத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும் சமூக சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துதலும் இன்றியமையாதன என்பதைத் தன் கள அனுபவங்களூடே கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதனொரு வெளிப்பாடாகவே ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற சிறுநூல் அமைந்துள்ளது. ‘தொழிலாளர்கட்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி […]
“ஏழைத்தொழிலாளி தோட்டக்காட்டில் திக்கற்றவனாய்த் தவிக்கிறான். அவனுக்கு இப்போது கிடைக்கும் தினச்சம்பளம் சுமார் 40 அல்லது 45 சதம் தான். அதிலும் மாதம் 30 நாளும் அவனுக்கு வேலை கிடைப்பதரிது. சில தோட்டங்களில், அதிலும் ரப்பர் தோட்டங்களில் சில மாதங்களில் 17 நாட்கள்கூட வேலையிருப்பதரிதாகிறது. சராசரி 20 நாள் ஒரு தொழிலாளி உழைக்கிறானென்று வைத்துக்கொண்டால், அவனுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 9 கிடைக்கிறது. இப்போது நாம் கவனிக்க வேண்டியது, இச்சம்பளம் ஒரு […]
இலங்கைப் பெருந்தோட்டங்களில் தொடக்ககாலத்தில் குடியேறிய தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. காலனிய அறிக்கைகள், காலனிய அதிகாரிகளின் பதிவுகள் முதலானவற்றில் இடம்பெறுகின்ற தகவல்களையும் வாய்மொழி வழக்காறுகளில் ஆவணம் பெற்றுள்ள செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அக்கால வாழ்க்கை நிலைமையை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகவல்கள் விவரிக்கின்ற தோட்டத் தொழிலாளரின் வாழ்வு, மிகவும் துயர் நிறைந்ததாகும். “ ‘அருவருப்புத்தரும் அநீதி’, ‘கொடுமை’, ‘நீக்ரோ அடிமைகளைவிடக் கேவலம்’ ” (மேற்கோள்: குமாரி […]
தமிழ்ச் சமூகம் நெடுங்காலத்திற்கு முன்பே வணிகத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருந்துள்ளது. தொல்லியற் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் ஐயத்திற்கிடமற்ற வகையில் அதனை நிரூபிக்கின்றன. பொ.ஆ. முற்பட்ட காலத்திலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழரின் வணிக வலையமைப்பு பரந்து விரிந்திருந்துள்ளது. தனிமனித நிலையிலும் பலரின் கூட்டிணைவுடன் குழும நிலையிலும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாங்குளத்து பிராமிக் கல்வெட்டில் இடம்பெறும் ‘வெள்ளறை நிகமத்தோர்’ என்ற குறிப்பு, பொ.ஆ.மு. 02 ஆம் நூற்றாண்டில் குழுவாக வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி […]
I தென்னாபிரிக்காவில் காந்தியும் பீஜி, மொறிசியஸ் முதலான நாடுகளில் மணிலாலும் புலம்பெயர்ந்த இந்தியரின் விடுதலைக்கான போராட்டங்களைத் தலைமைதாங்கி முன்னெடுத்ததுபோல இலங்கையில் இந்தியத் தொழிலாளரின் மீட்சிக்கான போராட்டங்களை கோ. நடேசய்யர் முன்னெடுத்துள்ளார். தஞ்சாவூரின் தென் ஆற்காட்டில் வளவனூர் கிராமத்தில் ஜனவரி 14, 1887 அன்று பிறந்த அவர் 1920 ஆம் ஆண்டு முதல் மரணிக்கும் வரை (நவம்பர் 07, 1947) இலங்கையில் வாழ்ந்துள்ளார். பத்திரிகை ஆசிரியர், சட்ட நிரூபண சபை – […]