கண்டி சீமை– 2 Archives - Page 5 of 5 - Ezhuna | எழுநா

கண்டி சீமை– 2

இலங்கையில் தேயிலையின் தந்தை ‘ஜேம்ஸ் டெய்லர்’

10 நிமிட வாசிப்பு

இலங்கையில் தேயிலைத் தொழில்துறை அதன் நூற்றி ஐம்பது வருடகால வரலாற்றைப் பதிவு செய்து கொண்ட போது (1867 – 2017),   தேயிலைத்  தொழிலின் தந்தையெனப் போற்றப்படும் ஜேம்ஸ் டெய்லரும் கௌரவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டார். ஜேம்ஸ் டெய்லர் இந்த நாட்டுக்கு தேயிலை பொருளாதாரத்தை வளர்த்து, கட்டியெழுப்பியிருக்காவிட்டால், இலங்கை  ஒரு செல்வம் கொழிக்கும் நாடாகத் திகழ்ந்திருக்க முடியாது. இந்த ஆய்வுக் கட்டுரைத் தொடரை நான் எழுத ஆரம்பித்ததன் நோக்கம் கோப்பி வரலாற்று […]

மேலும் பார்க்க

சிங்கோனா: திடீர் எழுகையும் வீழ்கையும்

10 நிமிட வாசிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தம் வரை இலங்கையின் பொருளாதாரத்தில் சக்கரவர்த்தி என கோலோச்சிய கோப்பி பல தனவந்தர்களையும் வங்கிகளையும் கூட வங்குரோத்து ஆக்கிவிட்டு அகாலத்தில் மாண்டு போனது. அதன் புதைகுழியிலிருந்து பீனிக்ஸ் பறவை என தேயிலை என்ற கரும்பச்சை நிறச்செடி புறப்பட்டு வந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் 1860 களிலேயே கோப்பிப் பயிர்ச்செய்கையை ஹெமீளியா வெஸ்டாரிக்ஸ் (Hemilia Vestaricx) என்ற நோய் தொற்றிக் கொண்டபோது இந்நோய் எதிர்காலத்தில் கோப்பியை […]

மேலும் பார்க்க

மதுவுக்குள் சிக்குண்ட மலையகம் : அடிமைப்படுத்தலின் நவீன உத்தி

8 நிமிட வாசிப்பு

அதிகார வெறியும் ஆடம்பர ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பரித்து இருந்த ஒரு காலகட்டத்தில் மாபெரும் மனிதக் கூட்டங்கள் மந்தைகள் என மண்ணில் வீசப்பட்டிருந்தன. 17 ஆம்,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு […]

மேலும் பார்க்க

சுயபுலம்பெயரிகள்: இலங்கைக்கு தாமே வந்த தோட்டத்தொழிலாளர்கள்

8 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வம்சாவளித் தமிழரின் சனத்தொகையில் கணிசமான அளவுக்கு அதிகரிப்பு காணப்பட்டது. 1871 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 444 ஆக இருந்த இவர்களின் சனத்தொகை 1906 ஆம் ஆண்டு 4 லட்சத்து 36 ஆயிரத்து 622 ஆக அதிகரித்தது.  பின்னர் 1936 ஆம் ஆண்டு 6 லட்சத்து 92 ஆயிரத்து 540 ஆக அதிகரித்தது. இவர்களில் சுமார் 88 சதவீதத்தினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக […]

மேலும் பார்க்க

மலையக மக்களும் எட்டாக்கனியாக்கப்பட்ட கல்வியும்

9 நிமிட வாசிப்பு

கொழும்பிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் இருந்ததை விட பன்மடங்கு விசாலமான தொழிலாளர் படையணி பெருந்தோட்டங்களிலேயே காணப்பட்டது. நகர்ப்புற தொழிலாளர் மத்தியில் குறைந்தபட்ச கல்வியறிவேனும் காணப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறிதுகூட கல்வி அறிவு இருக்கவில்லை. 1893 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் (1893 அச்சுத் தொழிலாளர், 1896 சலவைத் தொழிலாளர், 1906 கருத்தை ஓட்டுபவர்கள், 1912 புகையிரத தொழிலாளர்கள், […]

மேலும் பார்க்க

படித்த சமுதாயம் புதிய சிந்தனைகள்

8 நிமிட வாசிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமாக கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாகின. இதே காலப்பகுதியில் எழுச்சி அடைந்த பிரித்தானியக் காலனித்துவத்திற்கு எதிரான தேசிய எழுச்சியின் ஓர் அங்கமாகவே இது கருதப்பட்டது. தொழிலாளர் மத்தியிலான வாசிக்கும் அறிவு, அவர்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவும், அதனைப் பெற்றுக் கொள்ள குரல் கொடுக்கவும் அவர்களை தூண்டியது. ஏ. ஈ. குணசிங்க […]

மேலும் பார்க்க

கட்டிப்போட்ட கயிறுகளும் சங்கிலிகளும்

7 நிமிட வாசிப்பு

இன்னமும்கூட தமிழ்ச் சமூகத்தில் பெண்கள், ஆண் அடிமைத்தனம் அல்லது ஆணாதிக்க வாதத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதற்கு அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் இந்துமதமும் அதில் மிக தந்திரமாக நுணுக்கமான முறையில் பின்னப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் “பதிவிரதம்” என்ற மிகப் பிற்போக்கான எண்ணக்கருவும் காரணமாகும் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஆணாகப் பிறப்பதும் பெண்ணாகப் பிறப்பதும் ஆணுக்குப் பெண் அடங்கி கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதும் நாம் பிறப்பால் பெற்று […]

மேலும் பார்க்க

பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு

10 நிமிட வாசிப்பு

உலக வரலாற்றின் ஒரு கட்டத்தில் உலகில் சாம்ராஜ்யங்கள் அழித்தொழிக்கப்பட்டு ஜனநாயக அரசாங்கங்கள் உருவாகிய போதும் ஆண்டான் – அடிமைத் தன்மை முற்றிலும் ஒழிந்து போய் விடவில்லை. ஜனநாயகம் முதலாளித்துவத்திற்கு சோரம் போனதேயன்றி அடிமட்ட விளிம்புநிலை மக்களை அது பாதுகாக்க எத்தனிக்கவில்லை. மேற்கு நாடுகளின் அடிமை வியாபாரம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்டம் கொண்டுவரப்பட்டு இல்லாதொழிக்கப்பட்ட போதும், பிரித்தானியாவின் கைத்தொழில் புரட்சியின் போதும், ஏகாதிபத்தியங்களின் வளர்ச்சியின் போதும் விவசாய தொழிலாளர் […]

மேலும் பார்க்க

சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு

10 நிமிட வாசிப்பு

1823 ஆம் ஆண்டுடன் இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஆரம்பிக்கப்பட்டு சரியாக 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இலங்கையில் வர்த்தகரீதியாக கோப்பிப் பயிர்ச்செய்கையை உருவாக்கும் முயற்சியில் அப்போதைய ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barns) என்பவருடன் இணைந்து இம்முயற்சியில் அக்கறை கொண்டிருந்த ஹென்றிபேர்ட் (Hendry Bird) ஆகியோர் கம்பளைக்கு அருகாமையில் சின்னப்பிட்டி (பின்னர் சின்ஹா பிட்டியானது) என்ற இடத்தில் 1823 ஆம் ஆண்டு 80 ஏக்கரில் கோப்பி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்