இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் Archives - Ezhuna | எழுநா

இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்

இலங்கையின் கால்நடைப் பண்ணையாளர்கள் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளும் சாத்தியமான தீர்வுகளும்

12 நிமிட வாசிப்பு

கறவை மாடு வளர்ப்பு இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான கூறாகும். இந்தத்துறை நாட்டு மக்களின் ஊட்டச்சத்துத் தேவையின் கணிசமான பகுதியை பாலின் மூலம் நிறைவு செய்வதோடு, ஆயிரக்கணக்கான பாற்பசுப் பண்ணையாளர்களுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்குகிறது. இதனால் கணிசமான வருமானத்தை உருவாக்கும் துறையாக இது விளங்குகிறது. எனினும் அண்மைக்காலத்தில் கறவை மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் இலங்கையின் ஏனைய துறைகளைப் போல் கடுமையான நிதி சார்ந்த நெருக்கடிகளைச் சந்திப்பதை அவதானிக்க முடிகிறது. […]

மேலும் பார்க்க

மாடு வளர்ப்பும் சூழல் மாசடைதலும்

10 நிமிட வாசிப்பு

கறவை மாடு வளர்ப்பு சூழல் மாசடைதலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான தொழிலாக இருக்கிறது என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? உலக வெப்பமுறுதலை ஏற்படுத்தும் மிக முக்கியமான மெதேன் பச்சை வீட்டு வாயுவை வெளியேற்றும் முக்கிய காரணியாக கறவை மாடு வளர்ப்பு அமைகிறது. உலகின் பச்சை வீட்டு வாயு விளைவில் 14.5% கால்நடை வளர்ப்பின் பக்க விளைவுகளாலேயே நிகழ்கிறதாம் (FAO அறிக்கை). மேலும், பல்வேறுபட்ட சூழல் பாதிப்புகளையும் இந்தத் துறை […]

மேலும் பார்க்க

கால்நடை வளர்ப்பில் அரச கால்நடை வைத்தியர்களும், அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களும்

10 நிமிட வாசிப்பு

அண்மையில் இலங்கையின் அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களில் பணியாற்ற 146 கால்நடை வைத்தியர்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. சில வருடங்களாக அரச கால்நடை வைத்தியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் மேற்படி ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருந்த போதும், இறுதியில் 27 கால்நடை வைத்தியர்களே அரச சேவைக்கு வந்திருந்தனர். பல கால்நடை வைத்தியர்கள் அரச பணியை விரும்பாமல் தனியார் சிகிச்சை நிலையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றுவதை விரும்புவதே இதற்குரிய முக்கிய காரணமாகும். மேற்குறித்த […]

மேலும் பார்க்க

மழைக் காலமும் கால்நடை வளர்ப்பும்

10 நிமிட வாசிப்பு

சில வருடங்களுக்கு முன் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அதிகளவில் பெய்த மழையினால் ஏற்பட்ட குளிருடன் கூடிய காலநிலையில் சிக்கி ஏராளமான கால்நடைகள் இறந்திருந்தன. இந்த நிலையை குளிர் அழுத்தம்/ அயர்ச்சி (Cold Stress) என்பார்கள். அன்றைய நாட்களில் சூழல் வெப்பநிலை 16 பாகை செல்சியஸ் வரை குறைந்திருந்தது. அந்த வருடம் வடக்கின் மேற்படி மாவட்டங்களில் வருடம் முழுவதும் பெரிதாக மழை கிடைத்திருக்கவில்லை என்பதனால் ஒரு வறட்சியான காலநிலையே […]

மேலும் பார்க்க

கறவை மாடுகளின் நலன் (welfare) தொடர்பான அவதானிப்புகள்: இலங்கை நிலைப்பாடு

10 நிமிட வாசிப்பு

ஒரு கால்நடை வைத்தியராக இலங்கையின் கறவை மாடுகளின் நலன் தொடர்பாக அவதானித்தவை மற்றும் நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் ஆராயப் போகிறேன். உலகளாவிய ரீதியில் கறவை மாடுகள் மற்றும் ஏனைய விலங்குகளின்  நலன் தொடர்பாக நவீன எண்ணக்கருக்களுடன் கூடிய சட்டங்கள் உள்ளதுடன் அந்தச் சட்டங்கள் மிக மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இலங்கையில் 1907 இல் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டமான ‘Prevention of cruelty to animals ordinance’ (1907) நடைமுறையில் […]

மேலும் பார்க்க

கறவை மாடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல் : இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை முன்வைத்து

11 நிமிட வாசிப்பு

இலங்கையில் மொத்தமாக உள்ள 1.6 மில்லியன் கறவை மாடுகளில் 405,001 மாடுகள் வடக்கிலும்; 542,805 மாடுகள் கிழக்கிலும் உள்ளன. நாட்டில் மொத்தமாக உள்ள 476,050 எருமை மாடுகளில் 24,164 எருமைகள் வடக்கிலும்; 234,782 எருமைகள் கிழக்கிலும் உள்ளன (கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள புள்ளிவிபரம் – 2022). பெரும்பான்மையான மாடுகள் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற போதும் அவற்றின் உற்பத்தித் திறன் குறைவாகவே காணப்படுகிறது (நாட்டில் மொத்தமாக வருடம் […]

மேலும் பார்க்க

கால்நடை வளர்ப்பின் மேம்பாட்டுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல்

11 நிமிட வாசிப்பு

இன்றைய நாட்களில் சமூக ஊடகங்களின் வகிபாகம் மிக முக்கியமானது. சகல துறைகளிலும் அதன் செல்வாக்கை் தவிர்க்க முடியாதுள்ளது. நல்லதோ கெட்டதோ சமூக ஊடகம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கால்நடை வளர்ப்புச் செயன்முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய நவீன கால்நடை வளர்பில் கணிசமான விடயங்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. இனிவருங் காலங்களின் அதன் பங்களிப்பு இன்னுமின்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டுரை கால்நடை வளர்ப்பு விரிவாக்கத்தில் சமூக ஊடகத்தின் பங்களிப்பை ஆராய்கிறது. […]

மேலும் பார்க்க

கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

16 நிமிட வாசிப்பு

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு நுழையாத இடமே இல்லை எனலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் முன்னைய காலத்தில் மனிதனால் செய்யவே முடியாது எனக் கருதப்பட்ட பல காரியங்களைச் செய்ய முடிகிறது. அதீத உழைப்புடன் செய்யப்பட்ட பல காரியங்களையும் இலகுவாகச் செய்ய முடிகிறது. இந்தக் கட்டுரை  கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் (Artificial intelligence – AI) இன்றைய பயன்பாட்டையும், நாளைய எதிர்பார்ப்பையும் ஆராய்கிறது. அதிகரித்துவரும் மனிதச் சனத்தொகை […]

மேலும் பார்க்க

தமிழர் தாயகத்தின் கால்நடை வளர்ப்பில் பெண்களும், சந்திக்கும் சவால்களும்

14 நிமிட வாசிப்பு

இனப் பிரச்சினையும் அதனோடு இணைந்த யுத்தமும் எமது தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை பல தசாப்தங்களுக்கு பின்தள்ளி விட்டது. குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றை சூனிய நிலைக்கு இறக்கியிருந்தது எனலாம். இந்தப் பின்னடைவு இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் (GDP) வடக்கு, கிழக்கின் பங்களிப்பை புறக்கணிக்கும் அளவுக்கு மாற்றி இருந்தது. கொடிய யுத்தம் மரணங்களை ஏற்படுத்தியதோடு ஏராளமான அங்கவீனர்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் பல ஆயிரம் பெண் […]

மேலும் பார்க்க

இலங்கையின் கறவை மாடுகளைப் பாதிக்கும் முக்கியமான தொற்று நோய்கள்

13 நிமிட வாசிப்பு

இலங்கையின் கறவை மாடுகளை பல தொற்று நோய்கள் பாதிக்கின்றன. அவற்றுள்  கால்வாய் நோய் (foot and mouth disease), தொண்டையடைப்பான் நோய் (Hemorrhagic septicemia), கருங்காலி நோய் (Black quarter), லம்பி தோல் கழலை நோய் (lumpy skin disease), புருசெல்லா கருச்சிதைவு நோய் (Brucellosis), மடியழற்சி நோய்கள் (Mastitis), குடற்புழு நோய்கள் (gastro intestinal worms) என்பன குறிப்பிடத்தக்கன. இந்த நோய்கள் கறவை மாடுகளைப் பாதித்து அவற்றின் உற்பத்தியைப் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்