அறிமுகம் இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தில், சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் மற்றும் கீழ்க்கட்டுமானம் பற்றிய சிறிய அறிமுகம் வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, கூத்தும் கூத்தின் கருத்தியலும், அவை நிலைத்திருப்பதற்கான காரணங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரை அவற்றை விவரமாக வழங்குகிறது. முதலில், இரண்டு விடயங்களைக் குறிப்பிடப்பட வேண்டும்: ஒன்று கருத்தியல், இன்னொன்று அக்கருத்தியலை உருவாக்கும் சமூக அமைப்பு. கருத்தியல் என்பது சிந்தனை—அகம் சார்ந்தது. சமூக அமைப்பு என்பது பௌதிகம்—புறம் சார்ந்தது. இந்தப் […]
அறிமுகம் ஈழத்து தமிழ்க் கூத்து ஒன்றல்ல; அது பல வகையின. 1967களில் ஆரம்பித்த தமிழ்க் கூத்து ஆய்வுகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல தகவல்களையும் சில முடிவுகளையும் நமக்குத் தந்துள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின்படி கூத்தின் பல்வேறு பிரிவுகளை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். ஈழத்துத் தமிழ்க் கூத்தின் வகைகள் யாழ்ப்பாணத்தில் வடமோடி, தென்மோடி எனவும்; மன்னாரில் தென்பாங்கு, வடபாங்கு, வாசாப்பு எனவும்; முல்லைத்தீவில் வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்துக் கலந்த முல்லை […]
பண்டைத் தமிழகமும் தமிழினமும் தமிழர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, ஒரு இனக்குழுவாக வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அண்மைக் காலத்தில் இது பற்றி நிறைய ஆய்வுகளும் வந்துவிட்டன. ஒரு இனக்குழுவாக இருக்க வேண்டுமானால், அவ் இனக்குழு பின்வரும் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்: தமிழரின் பொது வாழ்விடமாக வடவேங்கடம் தொடக்கம் தென்குமரி வரையான நிலப்பரப்பு இருந்துள்ளது. அவர்களின் பொது முன்னோர்களாக பாரி, காரி, ஆய், ஓரி, நன்னன், அதியமான், குமணன் போன்றோர் கூறப்படுகின்றனர். […]
மனித மூளையும் அறிவு வளர்ச்சியும் பிரபஞ்சத்திற்கும் மனித இருப்புக்குமான தொடர்புகளை, இவற்றின் உற்பத்திகள், மூலங்கள் அல்லது தொடக்கப்புள்ளிகளை, விலங்கு உலகில் வாழ்ந்த காலத்திலேயே மனித சமூகம் தேடத் தொடங்கி விட்டது. இந்தத் தேடலே விலங்கு உலகிலிருந்து இந்த மனிதக் கூட்டத்தைப் பிரித்து, மனித உலகிற்குக் கொண்டுவந்தது. அதற்கு அடிப்படையாக இருந்தது, விலங்கு மூளையிலிருந்து மாறுபட்டிருந்த மனித மூளையாகும். இந்த மூளை எவ்வாறு வளர்ந்தது? மனிதர், புற உலகின்மீது தமது உழைப்பினால் […]
ஈழத்து மரபு வழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி – வடமோடி சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி, கரகம், காவடி என அது பன்முகப்பட்டது. இவற்றில் சில அழிந்து விட்டன. சில கால ஓட்டத்தோடு நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்டு வந்த பண்பாட்டுக் கலப்புகளும் அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளும் இம் […]