ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார அரசியல் பேராசிரியர் நவரட்ண பண்டார 2014ஆம் ஆண்டில் The New Class in Sri Lanka (இலங்கையில் ஒரு புதிய வர்க்கம்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “அரசியல்வாதிகள் இன்று ஒரு புதிய வர்க்கமாக எழுச்சி பெற்றுள்ளார்கள். இந்தப் புதிய வர்க்கம் நான்கு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக பலமான ஒரு சமூக வர்க்கமாக உருவாக்கம் பெற்று இலங்கைச் […]
ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல 1978 ஆம் ஆண்டு யாப்பு இலங்கையில் பாதி – ஜனாதிபதிமுறையை ஏற்படுத்தியது. பாதி ஜனாதிபதி முறையென்பதை ஆங்கிலத்தில் ‘Semi – Presidential System’ என அழைப்பர். இப்பாதி ஜனாதிபதிமுறை இரு உப பிரிவுகளைக் கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவர். அவையாவன: முதலாவது உப வகையான ஜனாதிபதி – பாராளுமன்றமுறையில் பிரதமரும் மந்திரிசபையும் கூட்டாக ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூற […]
ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல ‘Parliament: Law, History and Practice’ என்னும் பெயரிலான நூல் ஒன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் (CPA) 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இலங்கையின் சட்ட ஆக்கத்துறையான (Legislature) பாராளுமன்றத்தின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் கூறுவதாக மேற்படி நூலின் இரண்டாவது அத்தியாயம் அமைந்துள்ளது. ‘Parliament in its Historical and Constitutional Context’ என்னும் தலைப்புடைய […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண ஐக்கிய அமெரிக்காவும் பிரான்சும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிமுறை 200 ஆண்டுகால வரலாற்றை உடையது. சட்ட ஆக்கத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பனவற்றிற்கிடையிலான அதிகாரப்பிரிப்பு (Seperation of Power), பலமான இரு கட்சிமுறையின் வளர்ச்சி, கட்டுப்படுத்தல்களும் சமப்படுத்தல்களும் (Checks and Balances) என்னும் தத்துவத்தின் செயற்பாடு என்பன அந்நாட்டின் அரசியல் முறையின் ஸ்திரத்தன்மைக்கு காரணமாக அமைந்தன. ஆயினும் அந்நாட்டின் ஜனாதிபதி முறையினை மாதிரியாகக் கொண்ட […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை அறிமுகம் செய்யப்பட்டு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந் நீண்டகால எல்லையுள் இம்முறையின் கீழ் நடந்தேறிய அனைத்து ஜனநாயக விரோதச் (Un – Democratic) செயற்பாடுகளையும் மூன்று கருத்தியல்களின் (Ideologies) துணையுடன் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகின்றோம். முதலாவதான பெரும்பான்மைவாதம் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்கு முறைக்கான அரசியல் நிறுவனங்களை (Political Institutions) கட்டமைத்து அவற்றைப் […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையின் நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் என்னும் விடயம் முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், இம் முறையை நீக்கி பாராளுமன்ற முறைக்கு (Parliamentary System) மீண்டும் திரும்புவதற்கான சாதக நிலையை உருவாக்கலாம் என நம்பப்படுகின்றது. இப் பின்புலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சன நோக்கிலான ஆய்வுகளைத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெலிவிற்ற கிராமத்தில் சமூக நிலைமாற்றம் (Social Transformation) நிகழ்ந்தது. அந்நிலை மாற்றம் கண்டிப் பிராந்தியம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தது என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இச்சமூக நிலைமாற்றம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கருத்தியல் என அனைத்துக் கூறுகளையும் தழுவியதாக இருந்ததெனவும் அவர் கூறுகின்றார். வெலிவிற்றவின் பொருளாதார நிலைமாற்றத்தை எடுத்துக் கொண்டால் அது: அ) வெலிவிற்றவின் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஜோரஜ்.ஈ.டி. சில்வாவின் எழுச்சி கண்டிப் பிராந்தியத்தின் அரசியலில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்டோம். இப்பகுதியில் அவரின் எழுச்சியைப் பற்றி பேராசிரியர் ரியுடர் சில்வா அவர்கள் கூறியிருப்பனவற்றைத் தழுவி விளக்கிக் கூறுவோம். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா (1879-1951) 1879 ஆம் ஆண்டு பிறந்தவர். 1951 ஆம் ஆண்டில் அவர் காலமானார். 1931-1947 காலத்தில் டொனமூர் அரசியல் யாப்பின் படி அமைக்கப்பட்ட சட்ட […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஆய்வு வினாவும் ஆய்வுப் புதிரும் “கண்டியின் சிங்களச் சமூகத்தில் சாதிக்கும் ஜனநாயகப்படுத்தலுக்கும் (Caste and Democratisation) இடையிலான உறவை ஆராய்வதே இக்கட்டுரையில் நான் ஆராயவிருக்கும் பிரதான ஆய்வுப் பிரச்சினையாகும் (The Key Research Question – பக். 450)” மேற்கூறியவாறு தாம் ஆராயவிருக்கும் ஆய்வுப் பிரச்சினை யாது என்பதைப் பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையின் முற்பகுதியில் தெரிவிக்கின்றார். இவ்வாறு தமது […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா இலங்கையில் சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் (Caste and Democratic Politics) இடையிலான உறவைக் குறித்து ஆய்வு ஒன்றினைப் பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா அவர்கள் எழுதியுள்ளார். ‘CASTE DEMOCRACY AND POST INDEPENDENCE SOCIAL TRANSFORMATION IN A KANDYAN VILLAGE – 2023’ என்னும் தலைப்பில் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்தது. அதனை மேற்குறித்தவாறு தமிழில் தந்துள்ளேன். இவ்வாய்வுக்காக ரியுடர் […]