இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை Archives - Page 2 of 2 - Ezhuna | எழுநா

இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை

விக்டோரியா மகாராணியின் “ஆங்கில காலை உணவு இலங்கைத் தேநீர்” (English Breakfast Tea)

7 நிமிட வாசிப்பு

இலங்கைத்  தேயிலையை உலக அரங்கில் பிரபல்யமடையச் செய்த முதலாவது நிகழ்வு 1888இல் ஸ்கொட்லாந்தில் நடைப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 4 சர்வதேச கண்காட்சிகளில் முதலாவது அறிவியல், கலை மற்றும் தொழில்துறை சர்வதேச கண்காட்சி  1888 மே மாதம் முதல்  நவம்பர் மாதம் வரை கெல்விங்ரோவ் பூங்காவில் (Kelvingrove Park) நடந்தது. அங்கு இலங்கை தேயிலையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்னும் வானொலியோ தொலைக்காட்சியோ […]

மேலும் பார்க்க

நிச்சயமற்ற கோப்பியின் வீழ்ச்சியும் நிலையான தேயிலையின் ஆதிக்கமும்

16 நிமிட வாசிப்பு
February 8, 2023 | பி. ஏ. காதர்

கோப்பியின் பரிதாப வீழ்ச்சியும் மாற்று முயற்சிகளும் கோப்பி நோய் சுனாமி போல் ஓரிரவுக்குள் கோப்பிப் பெருந்தோட்டத்தை அழித்துவிடவில்லை. அதன் பரவல் மெதுவாக ஆனால் நிச்சயமானதாக நடைபெற்றது. கோப்பிப் பெருந்தோட்ட உற்பத்தி முற்றாக அழிவதற்கு சுமார் 20 வருடம் பிடித்தது.  பலரும்அறியாத  ஒரு விடயம் என்னவென்றால் இந்நோய் 1861 ஆம் ஆண்டு கென்யாவில் வளர்ந்த காட்டுக் கோப்பியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஸ்டூவர்ட் மெக்கூக் மற்றும் ஜான் வாண்டர்மீர் ஆகிய இருவரின் […]

மேலும் பார்க்க

நவீன உலகத்தின் உதயமும் இலங்கையின் நவீனத்துவமும் 1848 மாத்தளைக் கிளர்ச்சியும்

15 நிமிட வாசிப்பு
December 23, 2022 | பி. ஏ. காதர்

இதுவரை உலகம் கண்டிராத தார்ப் பாதைகள், புகையிரத வண்டிகள், நீராவிக் கப்பல்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் அனைத்துமே இக்காலத்துக்குரியவை. 1760 ஆம் ஆண்டு முதல் 1820 – 1840 வரை – அதற்குப்பின்னரும் – பிரித்தானியாவில் தொடர்ந்த இயந்திரக் கைத்தொழில் புரட்சியே உலகத்தை நவீன யுகத்துக்குக் கொண்டுவந்தது. 1820 இல் தான் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் லவுடன் மக்அடம் (Johon Loudon MacAdam) என்பவரால் முதற்தடவையாக பாதைகள் கற்களால் சமப்படுத்தப்பட்டு கற்தூள்களால் […]

மேலும் பார்க்க

கோல்புரூக் – கமரூன் அரசியல் சீர்திருத்தம்

13 நிமிட வாசிப்பு
November 14, 2022 | பி. ஏ. காதர்

பிரித்தானியர் இலங்கையின் மன்னராட்சி முறைமையினை ஒழித்து, ழுழு நாட்டையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்ததுடன், அவர்களின் ஏகபோக நலனுக்காக பல்வேறு மாற்றங்களை செய்திருந்தமையினை முன்னைய கட்டுரையில் அவதானித்திருந்தோம். அதன்தொடர்ச்சியினை இனி பார்க்கலாம். 1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் […]

மேலும் பார்க்க

கோட்டைகளுக்குப் பதிலாக பாதைகள்

26 நிமிட வாசிப்பு
October 29, 2022 | பி. ஏ. காதர்

1818 இல் கிளர்ச்சி வெடிக்கும் வரை தமக்கு சரியான தகவல் கிடைக்காததற்கும், கிளர்ச்சி  வெடித்தபின்னர் அதனை நசுக்குவதற்கும்  தாம் மிகுந்த சிரமப்பட்டதற்கும் இரு காரணங்களை பிரித்தானியர் இனம்கண்டனர். ஒன்று கண்டியை சிறப்பாக கண்காணித்து நிர்வகிப்பதற்கு மலைப்பாங்கான கண்டி பிரதேசத்தினை பாதைகளால் இணைக்கவேண்டும். மற்றையது தமக்கு விசுவாசமான உள்ளூர்த் தலைவர்களை உருவாக்கி தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.  1818 இல் கிளர்ச்சியை அடக்குவதற்கு தமது படைகளை அனுப்பியதன் மூலம் கண்டி இராச்சியத்தில் […]

மேலும் பார்க்க

பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றுதல்

26 நிமிட வாசிப்பு
September 23, 2022 | பி. ஏ. காதர்

12 ஆம் நூற்றாண்டில் இந்து  சமுத்திரத்தில் அதுவரை கடலாதிக்கம்  செலுத்திய சோழ சம்ராச்சியம் பலவீனப்பட்டபோது அவர்களது பிடியில் இருந்த கடல் வர்த்தகம் அரேபியர்களினதும் முஸ்லிம்களினதும் கைகளுக்கு மாறியது. ஐரோப்பிய நாடுகளின் கடல் வலிமை ஓங்கியபோது அவர்களது துப்பாக்கிப் பலத்தின் முன்னால்  ஆரியர்களின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதலில் போர்த்துகேயர் இலங்கைக்கு  வந்தது ஒரு தற்செயலான  விடயம்.  அவர்கள் கடலாதிக்கத்துக்காக அரேபியர்களோடும்,  இலங்கையிலும் இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட – […]

மேலும் பார்க்க

காலனித்துவ ஆட்சியாளர் விட்டுச்சென்றவையும் (Colonial legacy) பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட சமூக – பொருளாதார மாற்றங்களும்

17 நிமிட வாசிப்பு

வரலாற்று போக்குகளைப்  பற்றி பேசும்போது “அந்த காலம் போல இனிவருமா” என்று  பலர் சலித்துக்கொள்வது புதிய விடயம் அல்ல. சில நல்ல விடயங்கள் மறைந்து வருகின்றன என்பது உண்மைதான். அன்றிருந்த காடுகள், தெளிவான ஆற்றுநீர், தூயகாற்று போன்ற பலவற்றை இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது. சமூக  வாழ்க்கையில் கூட அன்பான குடும்ப உறவு, நாணயம், பெரியோரை மதித்தல் போன்ற நல்ல விழுமியங்கள் மறைந்து வருகின்றன. ஆயினும் கடந்த காலமே பொற்காலம் என்று […]

மேலும் பார்க்க

பண்டைய இலங்கையில் போரும் நல்லிணக்கமும்!

8 நிமிட வாசிப்பு

கடந்த காலங்களில் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, நீண்ட காலமாக பல்வேறு கலாசார பின்புலம்கொண்ட, மக்கள்  அமைதியாக  சகவாழ்வு நடத்தும்   ஒரு முன்மாதிரியான நாடாக இலங்கை இருந்து வந்திருக்கிறது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு சில பக்கச்சார்பான  வரலாற்றாசிரியர்கள்  சித்திரிப்பதைப்போல  எப்போதும் அல்லது தொடர்ச்சியாக பகை முரண்பாடானதாக இருக்கவில்லை. பண்டைக் காலங்களில் அவ்வப்போது  இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்புகளை உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்மீது தொடுத்த யுத்தங்களாக சில […]

மேலும் பார்க்க

இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றமும் வளர்ச்சியும்

18 நிமிட வாசிப்பு

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும்,   1948 முதல்  இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்கும் இத்தொடர் கட்டுரை இரு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்