நீர்த்த கடல் | ஆவணப்பட வரிசை - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
40 நிமிட பார்வை

நீர்த்த கடல் | ஆவணப்பட வரிசை

April 19, 2025 | Ezhuna

இந்தியா உட்பட பலநாடுகளில் தடைசெய்யப்பட்ட கடலட்டை வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியானது, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தமிழர் தேசத்தின் வடக்கு – கிழக்கு கடற்பரப்புக்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது.

மக்களிடம் இருந்த பொருண்மியத் (Economy) தேவைகளைக் குறிவைத்து இங்குள்ள கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்ற பின்புலத்தோடு கொண்டுவரப்பட்டதாகவே பல சமூக ஆர்வலர்கள் மற்றும் கடல்வள ஆராய்ச்சியாளர்களது கருத்தாக உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடலட்டைப் பெருக்கம் மற்றும் கடலில் வெவ்வேறு இடங்களில் வளரும் அட்டைக் குஞ்சுகளை பிடித்து பண்ணைகளை அமைத்தல் முதலிய செயற்பாடுகள் காரணமாக குறித்த கடற்பரப்புக்கள் சேற்றுக்கடலாக மாறுவதாகவும், பண்ணைகள் அமைக்கப் பயன்படுத்திய வலைகள் மூலம் கடலின் நீரோட்டம் மற்றும் சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணை மூலம் தமிழ் மக்களின் இறைமை மற்றும் நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றது? சூழல் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றது? கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது முழுமையாக ஆராய்கின்றது.