Events – Ezhuna | எழுநா

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் – நூல் வெளியீட்டு நிகழ்வு – திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம்

Thirumarai Kalamanram 238 Main Street, A9, Jaffna, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் - திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது. திரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை […]

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 25.02.2026 (புதன்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. திரு. த. இராஜரட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு. த. ரெஷாங்கன் அறிமுக உரையினை ஆற்றியிருந்தார். வாசகர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

Vallai-Tellippalai-Araly Rd, Tellippalai, Sri Lanka Vallai-Tellippalai-Araly Rd, Tellippalai, Northern, Sri Lanka

மக்கள் கலை இலக்கியப் பேரவையின் 'நூறு மலர்கள் மலரட்டும்' புத்தக அரங்க விழாவில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் பசுமை எனும் பேரபாயம் நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் ஜனவரி 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கலை இலக்கியப் பேரவையின் தலைவர் த. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆசிரியர் க. தவசீலன் அவர்கள் […]

‘உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ – நூல் அறிமுக நிகழ்வு – வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம்.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம் Vavuniya Town, Vavuniya, Northern, Sri Lanka

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடாகிய, திரு. க. பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' நூலின் அறிமுக நிகழ்வு 03.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி […]

‘இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும்’ – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – பொகவந்தலாவ, க்றீன் லைன் மண்டபம்.

Bogawantalawa Green line hall, Nuwara Eliya, central, Sri Lanka

எழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான 'இரு நூற்றாண்டு மலையகம் - வலியும் வாழ்வும்' நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும், அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பொகவந்தலாவ க்றீன் லைன் மண்டபத்தில் இடம்பெற்றது. நூல் பற்றிய அறிமுக உரையினை ஆசிரியரும் கவிஞரும் விமர்சகருமாகிய பெ. சசிக்கலா அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் அண்மையில் இலங்கையைத் தாக்கிய இயற்கை அனர்த்தத்தினால் உயிர்நீத்த […]

‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ – நூல் அறிமுக நிகழ்வு – நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரி

Kathiresan Central College 114 Kothmale Rd, Nawalapitiya, central, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்களின் 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூலின் அறிமுக நிகழ்வு நிகர் சமூக - கலை - இலக்கிய அரங்கின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில், அமரர் எஸ். தர்மசீலன் அமர்வில் கடந்த 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் திரு. எஸ். ரகு அவர்களின் தலைமையில் […]

‘யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்’ – நூல் வெளியீட்டு நிகழ்வு – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

University of Jaffna Ramanathan Rd, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் 'யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்' என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் ஏற்பாட்டில், நவம்பர் 21 (2025) வெள்ளிக்கிழமை அன்று, மாலை 3 மணிக்கு கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. சமூகவியல் துறைத்தலைவர் கலாநிதி ச. சிறிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். […]

‘காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ – நூல் அறிமுக நிகழ்வு – திருகோணமலை தளம் கட்டமைப்பு.

Thalam organization 1st Floor, Periyakadai UC Complex, Dockyard Road, Trincomalee, Eastern, Sri Lanka

எழுநாவின் வெளியீடாகிய, 'காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்' என்ற நூலின் அறிமுக நிகழ்வு தளம் கட்டமைப்பின் ஏற்பாட்டில் 09.11.2025 அன்று மாலை 5.00 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள தளம் கட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. நூல் பற்றிய விமர்சன உரையினை செல்வி.பிரத்திக்கா பத்மநாதன் மற்றும் செல்வி.அன்ரனி ஸ்டீபன் கெளசிகா ஆகியோர் வழங்கியிருந்தனர். நிகழ்வில், தளம் அமைப்பின் நலன் விரும்பிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு ‘ – நூல் வெளியீட்டு நிகழ்வு – யாழ். பொது நூலகம்

Jaffna Public Library Clock Tower Road, South, Jaffna, Northern, Sri Lanka

எழுநா வெளியீடாகிய, பா. துவாரகன் அவர்களின் 'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு' என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 01.11.2025 (சனிக்கிழமை) அன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர், திருமதி எழிலினி சித்தாந்தன் அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை போதனா மருத்துவமனை அபிவிருத்தி உத்தியோகத்தர், திரு எஸ். சுதாகரன் […]

‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – ஏழாலை மேற்கு சித்திவிநாயகர் சனசமூக நிலையம்.

Ezhalai West Siddhivinayagar Community Centre Ariyalai, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட, நடராஜா செல்வராஜா அவர்களின் 'யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் - ஒரு வரலாற்றுத் தேடல்' என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் ஏழாலை மேற்கு சித்திவிநாயகர் சனசமூக நிலையத்தில் 31.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. சித்திவிநாயகர் நூல் நிலைய இயக்குனர் சபைத் தலைவர் கு.ரஜீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை ஆசிரியர் சி.ரமேஸ் அவர்கள் வழங்கியிருந்தார். நிகழ்வில் சனசமூக நிலைய உறுப்பினர்கள், […]

‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட நடராஜா செல்வராஜா அவர்களின் 'யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் - ஒரு வரலாற்றுத்தேடல்' என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் (விநோதன் மண்டபம்) அறிவோர் ஒன்று கூடலில் 2025.10.29 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது. கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகர் ஜெயதேவன் சித்தார்த்தினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை எழுத்தாளர் எஸ்.ரகுநாத் அவர்கள் வழங்கியிருந்தார். நிகழ்வில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் […]

‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – நல்லூர், சிவகுரு ஆதீனம்.

SIVAGURU ATHEENAM 692, Point Pedro Road, Nallur, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நல்லூர், சிவகுரு ஆதீனத்தில் 18.10.2025 (சனிக்கிழமை) அன்று, காலை 10.30 முதல் பிற்பகல் 1.00 வரை இடம்பெற்றது. கோபாலகிருஷ்ணன் பிரவீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்கள் ஆசியுரையினை வழங்க, நூல் அறிமுக உரையினை சு.பிரவீன் அவர்கள் […]

மாறுபாடில்லா உண்டி நூல் அறிமுக நிகழ்வு – நல்லூர் சிவகுரு ஆதீனம்.

SIVAGURU ATHEENAM 692, Point Pedro Road, Nallur, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன் அவர்களின் 'மாறுபாடில்லா உண்டி' எனும் நூலின் அறிமுக நிகழ்வு சிறகுகள் அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு 10.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. வேளாண்மைச் செயற்பாட்டாளர் சிவகுமாரன் கஜந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையினை வழங்கியிருந்தார். அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மாணவி முத்துக்குமார் நிமியா வழங்க, 'ஏன் […]

‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் அறிமுக நிகழ்வு – இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ் பிராந்தியம்.

Ocean University 2nd Cross Street, Jaffna, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் 'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்' என்னும் நூலின் அறிமுக நிகழ்வானது, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் (யாழ். பிராந்தியம்) 14.10.2025 அன்று, காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. நூல் பற்றிய அறிமுக உரையினை கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். கடல் வளங்கள் தொடர்பான கற்கைநெறியினைப் பயலுகின்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்நூல் அறிமுக நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்வில் […]

சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வு – கொழும்பு தமிழ்ச்சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய, எழுநாவின் வெளியீடான, மலையக வரலாற்றைக் கூறும் 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 04.10.2025 அன்று இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் பெருந்தோட்ட வீடமைப்பு பிரிவின் முன்னாள் செயலாளர் திரு.எம். வாமதேவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் […]

ஆவணப்படத் திரையிடலும் புத்தக அறிமுக விழாவும்

Atchuveli Kalanithi Sanasamuga Nilayam Atchuveli, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் தயாரித்து வெளியிடப்பட்ட 'நீதிக்காக நீண்ட காத்திருப்பு' எனும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆவணப்படம் திரையிடலும் , செம்மணி தொடர்பான கவிதைகள் 'வாசலிலே கிருஷாந்தி' என்னும் நூலின் அறிமுக விழாவும் அச்சுவேலி தெற்கு, கலாநிதி சனசமூக நிலையத்தில் 27.09.2025 அன்று வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினரும் கலாநிதி சன சமூக நிலைய தலைவரும் ஆகிய பி.நேருஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிலையத்தின் செயலாளராகிய தர்ஷன் அவர்களால் நூல் பற்றிய மதிப்பீட்டுரை […]

வாசலிலே கிருசாந்தி’ செம்மணி தொடர்பான கவிதைகள் புத்தக வெளியீடும் கவிதை வாசிப்பு நிகழ்வும்.

Chemmani junction Jaffna, Northern, Sri Lanka

கிருசாந்தி குமாரசாமி அவர்களின் 29ம் ஆண்டு நினைவேந்தலின் ஒரு அங்கமான எழுநாவின் தொகுப்பில் வெளிவந்த 'வாசலிலே கிருசாந்தி' செம்மணி தொடர்பான கவிதைகள் புத்தக வெளியீடும் கவிதை வாசிப்பு நிகழ்வும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை செம்மணி அணையா விளக்குத் திடலில் நடைபெற்றது. இந்நூலானது 47 கவிஞர்களின் 54 கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இந்நிகழ்வில் நூலின் முதல்பிரதிகளை கிருசாந்தியின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இந்நூலில் இடம்பெற்ற கவிதைகள் நிகழ்வில் கலந்து கொண்டோரால் வாசிக்கப்பட்டன. புகைப்படம் […]

‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் வெளியீட்டு விழா – விவசாயபீட கேட்போர் கூடம், கிளிநொச்சி வளாகம்

Faculty of Agriculture,University of Jaffna Ariviyal Nagar, Kilinochi, Northern, Sri Lanka

எழுநாவின் ஏற்பாட்டில் காவேரிக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் விவசாயபீடத்தின் சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஆதரவுடன் கலாநிதி S.J அரசகேசரியின் வடக்கு-கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் என்ற நூலின் வெளியீட்டு விழாவானது கடந்த 28.08.2025 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் விவசாயபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் தலைமை உரையினை விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் அவர்கள் வழங்க அணிந்துரையினை கிளிநொச்சி மாவட்ட முன்னைநாள் அரசாங்க அதிபர் […]

‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ நூல் அறிமுக நிகழ்வு – தளம் அமைப்பு, திருகோணமலை

Thalam organization 1st Floor, Periyakadai UC Complex, Dockyard Road, Trincomalee, Eastern, Sri Lanka

எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 26.07.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் தலைமை உரையினை தளம் அமைப்பின் இயக்குநர் வைத்தியர் ஹயக்கிரிவன் அவர்கள் வழங்க, நூல் அறிமுக உரையினை தென்கயிலை ஆதீனம் சுவாமி அகத்திய அடிகளார் […]

‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் – சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், மட்டக்களப்பு

Swamy Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University of Sri Lanka Kallady, Batticaloa, Eastern Province, Sri Lanka

கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்கம் நடாத்திய, ஆய்வாளர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூலை மாதம், 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் என்ற வடிவில் அமைந்திருந்தது. குறித்த நூலினது […]