ஊரில கிடைக்குற சருகுகளைக்கொண்டு சேதனப்பசளை செய்ய தொடங்கினேன் - Ezhuna | எழுநா
Arts

ஊரில கிடைக்குற சருகுகளைக்கொண்டு சேதனப்பசளை செய்ய தொடங்கினேன்

July 21, 2022 | Ezhuna

உள்ளூர் உற்பத்தி முயற்சிகளின் 2ஆவது காணொலித் தொடரில் சேதனப் பசளை உற்பத்தியாளர் ந.சிவபாலன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சேதனப் பசளை உற்பத்தியை நான் ஐந்து வருடமாக செய்துகொண்டிருக்கின்றேன். அதோட சேர்த்து மண்புழு உரமும், காளான் உற்பத்தி செய்கிறேன். எங்களுக்கு வேம்பு, நாவல், இலுப்பை போன்ற கஞ்சல்கள் எல்லாம் தாராளமாக எடுக்கக்கூடியதாக இருக்குது. என்னட்ட மாடு இல்லை. ஆனால் மேய்ச்சல் மாட்டுச் சாணகம் தரவையில மேயுற இடங்களில இருந்து எடுத்து இதைச் செய்து வருகிறேன். என்னுடைய பசளையை வைத்து வீட்டுத் தோட்டம் செய்து அது நல்லா வந்திருக்கு. நிறைய பேர் சேதனப் பசளையை வாங்கத் தொடங்கினால் எனக்கு இதை தொடர்ந்து செய்ய முடியும்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்