எழுநா பற்றி

எழுநா, ஈழத்து ஆய்வுப்பரப்பில் கருத்துருவாக்கம், நூலுருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து, 'ஈழத்துத் தமிழியல்' (Eelam Tamilology) அல்லது 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.

ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானுடவியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டு எல்லைகளாக அமைகின்றன.

ஆய்வுகளைத் தொகுத்துக் கொள்வதும் பரவலாக்குவதும் அதனூடான கருத்துருவாக்கமுமே எழுநாவின் செயற்பாட்டுகளாகும். ஆய்வுகள் வெளிவருவதற்கான வளங்களை ஆய்வாளர்களுக்கு வழங்குவதோடு அந்த ஆய்வுகளை நேர்த்தியாக வெளியிடுவதற்கான களமமைத்துப் பின்னர் நூல்களாக்குவது எழுநாவின் அணுகுமுறையாக உள்ளது. அவ்வகையில் சமகால ஈழத்து அறிவுலகச் செயற்பாடுகளுடன் இணைந்து பயணிப்பதே எழுநாவின் செயற்பாட்டு முறையாக இருக்கிறது.

பதிப்பாசிரியர்
கணேசானந்தன் சசீவன்
பொறுப்பாசிரியர்கள்
ஸ்ரனிஸ்லஸ் கபில்தேவ்
கஜலக்சி உதயபவன்
அச்சுதநாயர் இசைப்பிரியன்
நிவேதிகா இராசன்
குரல்வடிவம்
பாலரூபன் கிருஷிகா
பவித்ரா இரமணீகரசர்மா
வளவாளர்கள்
இ. பத்மநாப ஐயர் - உசாத்துணை சேவை
கனகலிங்கம் சுகுமார் - உசாத்துணை சேவை
தில்லைநாதன் கோபிநாத் - நூல் வரிசை / நூல் தயாரிப்பு
கதிர் சயந்தன் - நூல் வரிசை / நூல் தயாரிப்பு
சுவர்ணலதா செந்தில்குமார் - மெய்ப்புத் திருத்தம்
தங்கராஜா பிரபாகரன் - மெய்ப்புத் திருத்தம்
பாலசுப்ரமணியம் சிவகுமார் - காணொலி / விவரணப்படம்
சிறிதரன் சோமிதரன் - காணொலி / விவரணப்படம்
மகேந்திரன் திருவரங்கன் - மொழிபெயர்ப்பு
பரமசிவம் பவதாரணி - செயல்பாட்டு மேலாண்மை
துறை சார் ஆலோசகர் குழு
ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் - மொழியும் இலக்கியமும்
கந்தையா ரமணிதரன் - நீரியலும் நீர்ப்பாசனமும்
குமாரவடிவேல் குருபரன் - சட்டமும் சட்ட முறைமையும்
நடராஜா சிறீஸ்கந்தராஜா - சூழலும் உயிர்ப் பல்வகைமையும்
தர்சன் அம்பலவாணர் - சமயமும் இறையியலும்
பால சிவகடாட்சம் - சுதேசியமும் பாரம்பரிய மருத்துவமும்
நாகமுத்து பிரதீபராஜா - புவியியலும் திட்டமிடலும்
பரமு புஸ்பரட்ணம் - வரலாறும் தொல்லியலும்
சனாதனன் தமோதரம்பிள்ளை - கட்புல அரங்கேற்ற கலைகள்
சேரன் உருத்திரமூர்த்தி - சமூகவியலும் மானிடவியலும்
முத்துக்கிருஸ்ணன் சர்வானந்தன் - பொருளியலும் நிதியியலும்
சபா ஜெயராசா - கல்வியியலும் கற்றலும்
மரியோ அருள்தாஸ் - அரசியலும் மெய்யியலும்
இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் - கட்டடக்கலையும் வடிவமைப்பும்
கந்தையா பகீரதன் - விவசாயமும் மீன்பிடியும்
பங்களிப்பாளர்கள்
கணேசலிங்கம் குகரூபன்
கருணானந்தன் சஞ்யே
கனகலிங்கம் சுகுமார்
தொடர்பு முகவரி:

எழுநா
63, சேர். பொன். இராமநாதன் வீதி
கலட்டி சந்தி, திருநெல்வேலி

அறிவிப்புகள்

பங்களிப்பாளர்களுக்கு அழைப்பு

August 31, 2020 | Ezhuna

எழுநா!ஒரு சுதந்திர ஊடக அமைப்பு.இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.ஊடகச்செயற் செயற்பாடுகளுக்கான தளங்களை வலுப்படுத்துவதும் ஊடகம் சார் தளங்களில் மூடியிருக்கும் பாதைகளைத் திறந்துவிடுவதும் ஊடக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் தமிழ்ச்சூழலில் ஊடகம் சாரி பரிசோதனை சார் முயற்சிகளை மேற்கொள்வதும் அதன் கோட்பாடு சார்ந்த நோக்கங்களில் முக்கியமானவை.எழுநாவின் அரசியல் கூட மிகவும் இறுக்கமானதல்ல. ஊடக அறம்சார் தளத்தில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள போதிலும், வெவ்வேறு அரசியல் நோக்கு நிலைகளுக்கு களமமைத்துக் கொடுக்கக்கூடியதாகவே திறந்த […]

‘அளிப்புரிமை’ சார் கொள்கை

July 31, 2020 | Ezhuna

எழுநா வெளியீடுகளில், வழமையாக பதிப்பகங்கள் உபயோகிக்கும் ‘காப்புரிமை’ (Copyright) என்ற உரிமத்திற்குப் (Licence) பதிலாக புதிய வகையானதொரு உரிமத்தைப் பார்த்திருப்பீர்கள். அவ்வுரிமம் தொடர்பான கேள்விகள் உங்களில் பலருடைய மனதில் தோன்றியிருக்கும். ஆம். எழுநா காப்புரிமைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நடைமுறையில் முன்னெடுக்க விரும்புகின்றது. காப்புரிமைக்கு எதிரான நிலைப்பாட்டை கோட்பாட்டளவில் பலர், பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வந்துள்ளார்கள். நடைமுறையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு எழுநா முதலடியை எடுத்து வைப்பதோடு, எழுத்தாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் […]

2014-2015 வெளியீடுகளிற்கான பிரதிகள் கோரல்

July 31, 2020 | Ezhuna

இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்களுடன் தொடர்புடையவாறான பின்வரும் விடயங்களையொட்டிய பிரதிகள் கோரப்படுகின்றன. மீள்பதிப்பு, 19ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் தொகுப்புக்கள், பதிப்பிக்கப்பெறாத அரிதான கையெழுத்துப் பிரதிகள்பல்கலைக்கழக இளமாணி, முதுமாணி, கலாநிதி கற்கை நெறிகளுக்காக அளிக்கபட்ட பதிப்பாக்கம் பெறாத ஆய்வுக் கட்டுரைகள்.ஆங்கிலம் – தமிழ், சிங்களம் – தமிழ், மொழிபெயர்ப்புக்கள் (புனைவுகள், அபுனைவுகள்)அரசியல் நோக்கு நிலைசார்ந்து சமத்துவத்தையும் மக்கள் நலனையும் முன்வைக்கும் பிரதிகள் . (தமிழ்தேசிய அரசியல், மலையக அரசியல், முஸ்லிம் அரசியல், […]

தொடர்பிற்கு

December 3, 2020 | Ezhuna