கிளிநொச்சி : போர் தின்ற நகரம்

தீபச்செல்வன்
எழுநா வெளியீடு 4
ஜனவரி 2013

கொடும் அழிவுகளை விதைத்த வன்னி யுத்ததத்தின் பின்னர் தனது சொந்த நகரத்தின் மனிதர்களைத் தேடி அலைந்த தீபச்செல்வன், போரின் கொடிய நாட்கள் விழுங்கிச் செரித்த அந்த அப்பாவி மக்களின் கதைகளை அருகிருந்து இரத்தமும் சதையுமாக இந் நுாலில் பதிவு செய்திருக்கின்றார்.
இவை புனைவு எழுத்துக்கள் அல்ல. இவற்றின் ஒவ்வொரு சொற்களிலும் துயரம் ஒரு மெழுகைப் போல படிந்திருக்க, உண்மை அதன் மேல் தகித்து எரிகின்றது.

கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்ட தீபச்செல்வன், ஒரு மாணவர் இயக்கச் செயற்பாட்டாளரும் கூட. போர்க் காலப்பகுதியிலும், போருக்குப் பின்பான காலப்பகுதியிலும் யுத்தப் பிரதேசத்துச் செய்திகளை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர். முக்கியமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான வன்னியையும் அதன் மக்களையும் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்ட தீபச்செல்வன், ஒரு மாணவர் இயக்கச் செயற்பாட்டாளரும் கூட. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்கும் முக்கியமானது.

Read More

போர் கிளிநொச்சி மண்ணில் பல கதைகளை உருவாக்கியிருக்கிறது. போர் அழிவும் இடப்பெயர்வும் துயரங்களும் அதற்குள்ளான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More