படுவான்கரை

சஞ்சயன்
எழுநா வெளியீடு 6
ஜனவரி 13

போரின் சகல அடிகளையும் மௌனமாகத் தாங்கி தாம் அழிவுற்ற கதைகளை வெளிச்சொல்ல வழியேதுமற்று புதைந்து கிடந்த படுவான்கரைப் பிரதேச மக்களினதும், விடுதலைப்போரில் இணைந்து போராடி இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளினதும் கதைகளை இந்நுால் பேசுகிறது. பலநுாறு கேள்விகளை எழுப்பி, குற்ற உணர்ச்சியை நம்மில் பரவவிடும் மௌனத்தின் குரல்களாக இக்கதைகள் விரிகின்றன.

இலங்கையில் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் கடந்த பல வருடங்களாக நோர்வேயில் வசித்து வருகின்றார். நோர்வே வெளிநாட்டவர் திணைக்களத்தில் கணனித்துறை ஆலோசகராகப் பணியாற்றும் இவர் எழுத்து, இலக்கியம், சமூகம், பயணங்கள், புகைப்படக்கலை என்பனவற்றில் ஈடுபாடும் செயற்பாடும் உள்ளவர்.

உலகில் பெரும் போர் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் போருக்குப் பின்னான காலங்கள் ஒத்த அரசியல் சமூகத் தன்மைகளையே கொண்டிருந்தன. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடக் குழப்பங்களும், தெளிவற்ற பாதையும் ஏற்பட்டு விட சமூக மட்டத்திலோ பெரும் மனிதத் துயர் மிகுந்ததாக அக்காலங்கள் விரிகின்றன. காணாமல்போய்விட்ட அல்லது மாண்டுபோன உறவுகள், சிதைந்த குடும்பங்கள், தனித்து விடப்பட்ட குழந்தைகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வாழ்வாதாரங்களின் அழிவு, வறுமை, சமூகச் சிதைவுகள், குற்றச்செயல்கள் என்பன சமூக மட்டத்தில் உருவாகின்றன. துரதிஷ்டவசமாக இலங்கையில் 2009 மே போர் அழிவிற்குப் பின்னரும் இவ்வாறானதொரு நிலைமை உருவானது.

Read More

2012 இல் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்த போது மட்டக்களப்பின் மேற்குப்பகுதியில் உள்ள படுவாங்கரை பகுதிக்கும் சென்றிருந்தேன். அங்கு வாழும் முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கை பற்றியும், சந்திக்கும் சவால்கள் பற்றியதுமான நேரடி அனுபவங்களைப் பெற்றுக் கொள்வது எனது நோக்கமாயிருந்தது.

Read More