யுகபுராணம்

நிலாந்தன்
எழுநா வெளியீடு 5
ஜனவரி 2013

ஒரு யுகமுடிவின் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன. உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக்கான நம்பிக்கைகளின் கீற்றுக்களையும் சுமந்தபடி பாடப்படுகிறது யுகபுராணம்.

இலக்கியப் படைப்பாளி, ஓவியர், அரசியல் விமர்சகர் எனும் பன்முக இயங்குதளங்களைக் கொண்டவர் நிலாந்தன். அவரது கவிதைகள் அலாதியான மொழிதலைக் கொண்டவை. தமது வழமையான அர்த்தப் பரிமாணத்தைக் கடந்துநின்று புதிய அர்த்தப்படுத்தல்களைக் கோரி நிற்பவை.