எழுநா, ஈழத்து ஆய்வுப்பரப்பில் கருத்துருவாக்கம், நூலுருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து, 'ஈழத்துத் தமிழியல்' (Eelam Tamilology) அல்லது 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.
ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானுடவியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டு எல்லைகளாக அமைகின்றன.
ஆய்வுகளைத் தொகுத்துக் கொள்வதும் பரவலாக்குவதும் அதனூடான கருத்துருவாக்கமுமே எழுநாவின் செயற்பாட்டுகளாகும். ஆய்வுகள் வெளிவருவதற்கான வளங்களை ஆய்வாளர்களுக்கு வழங்குவதோடு அந்த ஆய்வுகளை நேர்த்தியாக வெளியிடுவதற்கான களமமைத்துப் பின்னர் நூல்களாக்குவது எழுநாவின் அணுகுமுறையாக உள்ளது. அவ்வகையில் சமகால ஈழத்து அறிவுலகச் செயற்பாடுகளுடன் இணைந்து பயணிப்பதே எழுநாவின் செயற்பாட்டு முறையாக இருக்கிறது.