சிவில் சமூக செயற்பாடுகள் பலவீனமடைந்து செல்லும் நிலையையே காணமுடிகின்றது. அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகளை ஒருபொருட்டாக கருதுவதில்லை. கட்சிகளுக்குள்ளும் கூட்டு முடிவு இல்லை. இந்த ஆண்டு இரு கதவடைப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த போராட்டங்களால் அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களின் நலன்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. மாறாக அரசியல் விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட சில சிவில் சமூக அமைப்புகள் மட்டும் தான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கின்றன, உரையாடுகின்றன, குறைந்தபட்டச தகவல்களையாவது ஊடகங்களுக்கூடாக சொல்லுகின்றன.