கண்டி சீமை– 2

மொழிகளுக்கிடையே கண்ணுக்குப் புலனாகாத மோதல்

10 நிமிட வாசிப்பு | 4901 பார்வைகள்

இந்த நாட்டை இரண்டு கூறுகளாக்கி ஒரு தரப்பில் தமிழர்கள் மறுதரப்பில் சிங்களவர்கள் என்று கபடி களமாக்கி ஒருவர் காலை மற்றவர் வாரிவிட்டு குப்புற தள்ளி மிதிக்கும் நிலைமையை தோற்றுவித்த பெருமை முற்றிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும். அதற்கான ஆடுகளத்தைத் தயாரித்து அமைத்தவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா என்ற மக்கள் ஐக்கிய  கட்சியின் (M.E.P) தலைவர் ஆவார். இவர் இனவாதம் என்ற தீப்பந்தத்தை ஆயுதமாகக் கையில் ஏந்தி 1956 […]

மேலும் பார்க்க

பறிக்கப்பட்ட பிராஜாவுரிமையும் நடத்தப்பட்ட தேர்தல்களும்

7 நிமிட வாசிப்பு | 7709 பார்வைகள்

1950 களைத் தொடர்ந்து அடுத்துவந்த ஒரு தசாப்த காலம் இந்த நாட்டில் வசித்த இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை பூர்வீக தமிழர்களுக்கும் கூட சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்தது போல் சிம்மசொப்பனமாகவே அமைந்தது. மேற்படி இரண்டாவது பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 237,034 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே பிரஜா உரிமை கிடைத்தது. இந்தக்காலத்தில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு […]

மேலும் பார்க்க

பயனின்றி முடிந்த சாத்வீகப் போராட்டம்

6 நிமிட வாசிப்பு | 5941 பார்வைகள்

இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான பிரஜாவுரிமைப் பறிப்புச் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படாமல்  சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பிக்க இலங்கை இந்திய காங்கிரஸ் தீர்மானித்தது  தொடர்பில் அரசாங்கம் உள்ளூர மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும், இலங்கையின் தலை நகரமான கொழும்பு மாநகரத்தின் சுமுகமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை அரசாங்கத்தால் கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை.  பொலிசாரையும் காடையர்களையும்  குதிரைப் படையையும் ஏவிவிட்டு,  என்னதான் தடியடிப் பிரயோகம் நடத்தினாலும் அந்தப் பெரும் கூட்டத்தினரை […]

மேலும் பார்க்க

அரசை நிலைகுலைய வைத்த சத்தியாக்கிரகப் போராட்டம்

10 நிமிட வாசிப்பு | 6240 பார்வைகள்

இத்தொடரின் கடந்த வார அத்தியாயத்தில் ஒரு தொழிற்சங்கம் தன் தலையாய கடமை ஒன்றை  நிறைவேற்றத் தவறியதால் இந்த நாட்டில் 150 ஆண்டுகாலமாக வசித்த ஒட்டுமொத்தமான இந்திய வம்சாவழிச் சமூகத்தினரே எவ்வாறு அரசியல் அனாதைகள் ஆகிப்போனார்கள் என்பதையும் அன்றைய சூழ்நிலையில் அப்படி ஒரு வேலை நிறுத்தம் செய்து இருந்தால் நமக்கு இருந்த சாதகமான காரணிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தொழிற்சங்கங்கள் இன்று வரை இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. […]

மேலும் பார்க்க

தொழிலாளர் பலமும், பிரயோகிக்கத் தவறிய இலங்கை இந்திய காங்கிரஸும்

7 நிமிட வாசிப்பு | 4745 பார்வைகள்

உலக வரலாற்றில் தொழிற்சங்க இயக்கத்தினால் சாதிக்கப்பட்ட சாதனைகள் விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு கணிசமானவைகளாக உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் மற்றும் மேலும் சில மேற்குலக நாடுகளிலும் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியும் வளர்ச்சியும்  பெருமளவில் உலகெங்கும் தொழிலாளர் படைகளைத் தோற்றுவித்தன. அதேபோல் மறுபுறத்தில் லாபம் என்ற ஒன்றை மட்டுமே மூல நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரங்கள் எழுச்சி பெற்றன. இவை […]

மேலும் பார்க்க

பிரஜாவுரிமைச்சட்டமும் இரண்டு வரலாற்றுத் தவறுகளும்

8 நிமிட வாசிப்பு | 14482 பார்வைகள்

1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமானது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்களினதும் பிரஜாவுரிமையைப் பறித்ததுடன், இந்திய – பாகிஸ்தானிய முஸ்லிம்கள், போரா,  மேமன், பார்சி போன்ற ஏனைய  இனத்தவர்களின் பிரஜாவுரிமையைக்கூட விட்டு வைக்கவில்லை. இது இலங்கையின் ஜனநாயக அரசியலில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியது. அத்துடன் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக 1949 ஆம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தானியர் வதிவிடப் பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை  நாடாளுமன்றத்தில் கொண்டு […]

மேலும் பார்க்க

மலையகத் தமிழர்களின் பிராஜாவுரிமை பறிப்பும் அரசியல் துரோகங்களும்

8 நிமிட வாசிப்பு | 17433 பார்வைகள்

இந்திய வம்சாவளி  மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையை இல்லாமல் ஆக்குவதற்கான சட்டம்  நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாகவும் எதிராகவும்  நாடாளுமன்றத்தில் பலமான குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் இந்த வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் வெறும் முறைசார் நடவடிக்கைகளேயன்றி அதனை நிறைவேற்றவிடாமல் தடுத்து விடப்போவதில்லை என்பது அன்றைய பிரதமர்  டி. எஸ். சேனாநாயக்கவுக்கு நன்றாகவே தெரியும்.  அவர் எத்தனை பேர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்? எத்தனை பேர் […]

மேலும் பார்க்க

அரங்கேற்றப்பட்ட கபடநாடகம்

7 நிமிட வாசிப்பு | 9178 பார்வைகள்

இந்த நாட்டில் இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத சிந்தனை 1918 களிலேயே தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் அது ஒரு பொருளாதார ரீதியான பொறாமையாக இருந்தது. ஏற்றுமதி – இறக்குமதி தொழிலை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தின் எழுச்சி காரணமாக கொழும்பு மாநகரம் சனத்தொகைப் பெருக்கம் அடைந்து பெரும் பொருளாதார மையமாக வளர்ச்சி அடைந்தது. கொழும்பு துறைமுகம்,  ரயில்வே திணைக்களம், அச்சுக் கூடங்கள், தபால் தந்தி திணைக்களம் […]

மேலும் பார்க்க

பெருந்தோட்டமே இலங்கைப் பொருளாதாரத்தின் மையம்

9 நிமிட வாசிப்பு | 9347 பார்வைகள்

மலையகத்தின் அடுத்த கட்டத்திற்கான உரிமைக்கோரிக்கை குரல்களை எழுப்பியவர்கள் இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரே. இவர்களது தூரத்துக் கனவு இலங்கையில் இருந்து வெள்ளையர்களை துரத்தியடித்த பின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஏற்படுத்தி சோசலிச அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்பதாக இருந்தபோதும் அவர்கள் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்துக்கு பின்னால் கணிசமான பங்களிப்பை செய்தனர். இலங்கையில் ஏற்பட்ட இருந்த சிறு முதலாளித்துவத்தின் வளர்ச்சி காரணமாக சிறு முதலாளித்துவ வர்க்கம் ஒன்று […]

மேலும் பார்க்க

திராவிடர் எழுச்சிக் குரல்களின் தாக்கம்

8 நிமிட வாசிப்பு | 6032 பார்வைகள்

மன்னர் காலத்திற்குப் பின்னர் “நாம் தமிழ் இனம்” என்ற பிரக்ஞை தமிழ்நாட்டில் சுதந்திர இயக்கப் போராட்டங்களுடன் இணைந்தே மீண்டும் எழுச்சி பெற்றது. இதன் பிரதிபலிப்புகள் இலங்கையிலும் காணப்பட்டன.  இத்தகு எழுச்சி தமிழ்நாட்டில் பார்ப்பனருக்கு எதிரான எழுச்சியுடன் ஆரம்பமாகிறது. இவ்வெழுச்சிக்குக் காரணமாக  “தமிழன்”  மற்றும் “திராவிடன்” என்ற மனவெழுச்சி ஏற்படுத்திய  பிரவாகம் இருக்கிறது. இந்த மனவெழுச்சியுடன் இணைந்து பிராமணர்களுக்கு எதிரான  “சுயமரியாதை” இயக்கம் 1925 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்த எழுச்சியின் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)