தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர், பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் 1983 ஆம் ஆண்டு, நான் வோற்ரன் வணிகப் பள்ளியில் பட்டம் பெற்றதும், நிதியியல் சார்ந்த துறையிலேயே பணியாற்ற விரும்பினேன். தொழில்சார் வாழ்க்கையின் முதலாவது காலடியை சேஸ் மான்ஹாட்டன் வர்த்தக வங்கியிலிருந்து தொடங்கினேன். அமெரிக்காவில் சில வருடங்கள் பணியாற்றி விட்டு, ஆசியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவதே எனது இலக்காக இருந்தது. அந்த வங்கியின் கடன் வழங்கும் துறையில் நிதிப் பகுப்பாய்வாளராக […]
தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) 1957 ஜூன் 15 ஆம் தேதியன்று, இலங்கையின் தலைநகரான கொழும்பில் நான் பிறந்தேன். எனது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் நானே முதலாவது ஆண் குழந்தை. எனது குடும்பம் கட்டுப்பாடான வாழ்க்கையையும் கல்வி மீதான வேட்கையையும் இயல்பிலேயே கொண்டிருந்தது. விடா முயற்சியும் கடமை தவறாமையையும் என்னுடைய பாட்டனிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் குழந்தைகளுக்குக் கடத்தப்பட்டிருந்தன. ஒரு மத்தியதர வர்க்கத் […]
தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) எல்லாவற்றையும் மாற்றிய அந்த நாள் 16.10.2009 வெள்ளிக் கிழமை. அன்றைய நாளிலும் வழமை போலவே, அதிகாலை ஐந்தரை மணிக்கு நித்திரைவிட்டு எழுந்தேன். வெளியே கலையாதிருந்த இருளின்மீது மழை தூறிக் கொண்டிருந்தது. கிழக்கு நதியின் மீதாகப் படர்ந்திருந்த புகார் மூட்டத்தை ஊடுருவிக்கொண்டு மேல் நோக்கி வந்த வேகமான காற்று என்னுடைய வீட்டின் அமைதியைக் கலைக்காமல் மூடப்பட்டிருந்த சாளரங்களில் […]