வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத்தில் கைத்தொழில்களின் வகிபாகம்

14 நிமிட வாசிப்பு | 1755 பார்வைகள்

வாழ்வாதாரத் தொழில் முனைவுகளில் பெரிதும் விரும்பப்படுவதும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் கூடியதுமான தொழிற்துறையாக கைத்தொழிற்துறை இருந்து வருகிறது. வளர்ச்சியடைய விரும்பும் எந்தப் பொருளாதாரமும் கைத்தொழிற்துறையின் மீது வளர்ச்சியை ஏற்படுத்தினால் தான் அது நிலைபேறுடைய பொருளாதார வளர்ச்சியாக அமையும். இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையிலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான 7 பிரதான பகுதிகளில், நான்கு துறைகள் கைத்தொழிற் துறை சார்ந்தே காணப்படுகின்றன. பின்வருவன அந்த 07 பிரதான பகுதிகள் : உணவுப் பாதுகாப்பு […]

மேலும் பார்க்க

வடக்கு கிழக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி : வளங்களும் வாய்ப்புகளும்

18 நிமிட வாசிப்பு | 3991 பார்வைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்துவரும் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையானது நன்னீர் மீன்பிடி நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் காணப்படும் நன்னீர் மூலங்களாகவுள்ள பாரிய மற்றும் நடுத்தர குளங்களும் 1,740 சிறிய குளங்களும் 1,605 சிறு குட்டைகளும் 60 அணைக்கட்டுக்களும் நன்னீர் மீன்பிடியை பெரிய, சிறிய அளவுகளில் மேற்கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் 15,455 சதுர கிலோமீற்றர் […]

மேலும் பார்க்க

வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீன்பிடித் தொழிற்துறையின் வளங்களும் வாய்ப்புகளும்

11 நிமிட வாசிப்பு | 9503 பார்வைகள்

இலங்கை நாட்டினுடைய 63 சதவீதமான கடற்கரைகளை கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் வட மாகாணத்தில் 40 சதவீதமான கடற்கரைகளும் கிழக்கு மாகாணத்தில் 23 சதவீதமான கடற்கரைகளும் காணப்படுகின்றன. இவ்விரு மாகாணங்களும் மிகச் சிறந்த மீன்பிடி வளத்தை கொண்ட கடல்பரப்பை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இக்கடற்கரைகள் மீன்பிடி, மீன் வளர்ப்பு, சுற்றுலா ஆகியவற்றுக்கு பொருத்தமாக உள்ளன. மீன்பிடித் தொழிலானது இவ்விரு மாகாணங்களிலும் விவசாயத்துறைக்கு அடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் துறையாகும். நாட்டின் மொத்த […]

மேலும் பார்க்க

கோழி வளர்ப்புத் தொழிற்துறை : வளங்களும் வாய்ப்புக்களும்

14 நிமிட வாசிப்பு | 5941 பார்வைகள்

வாழ்வாதாரத் தொழில் முயற்சித் துறைகளில் உயிரின வளர்ப்புத் துறையானது முக்கியத்துவம் வாய்ந்தது. இவ் வளர்ப்புத் துறை விலங்குகளையும் பறவைகளையும் உள்ளடக்குகின்றது. பறவை வளர்ப்பில் முதன்மையாக அமைந்திருப்பது கோழி வளர்ப்பாகும். இவை இறைச்சி, முட்டை ஆகிய இரு பெரும் நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. சமூகத்தில் பலரும் இந்த வாழ்வாதார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த முதலீட்டுடன் இத்தொழிலை ஆரம்பிக்க முடிவதுடன் இயலுமையின் விருத்திக்கேற்ப படிப்படியாக அதிகரித்துச் செல்லவும் முடியும் என்பது பலரும் இத்தொழிலில் இணைவதற்கு […]

மேலும் பார்க்க

வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தில் ஆடு, எருமை வளர்ப்பு

15 நிமிட வாசிப்பு | 4927 பார்வைகள்

வடக்கு கிழக்கின் ஆடு வளர்ப்புத் தொழிற்றுறை வடக்கு கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நிற்கும் மற்றொரு வாழ்வாதாரத் துறையாக, ஆடு வளர்ப்பைக் குறிப்பிடமுடியும். மிருக வளர்ப்பில் குறுகிய காலத்தில் நன்மை பெறக்கூடியதும் பராமரிப்புத் தொடர்பில் ஒப்பீட்டளவில் இலகுவானதுமான ஆடு வளர்ப்புத் தொழில் துறையானது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நன்கு பிரபல்யமான ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் 254,066 ஆடுகளும் வட மாகாணத்தில் 192,779 ஆடுகளுமாக, இவ்விரு மாகாணங்களிலும் 446,845 ஆடுகள் உள்ளதாக […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் பங்குபற்றலும் வாய்ப்புக்களும்

13 நிமிட வாசிப்பு | 7384 பார்வைகள்

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் மற்றுமொரு வாய்ப்புமிக்க வளமாகக் காணப்படும் கால்நடைத் துறையில், இப்பிரதேசத்தில் காணப்படும் நிலவளம் முக்கிய ஆதாரமாகக் காணப்படுகிறது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 15.2 சதவீதத்தைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினதும் 13.5 சதவீதத்தைக் கொண்ட வடக்கு மாகாணத்தினதும் நிலப்பரப்புக் கூட்டுத்தொகை 28.7 வீதமாகக் காணப்படுகின்றது. இந்த அதிகளவான நில அமைவின் காரணமாக திறந்தமுறைக் கால்நடை வளர்ப்புப் பாரம்பரியத்தைக் கொண்ட கால்நடைத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. கால்நடை வளர்ப்புத் துறையின் ஆதாரத்துடன் மேலதிக […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பழப்பயிர் உற்பத்தியும் வாய்ப்புகளும்

14 நிமிட வாசிப்பு | 7826 பார்வைகள்

வடக்கு – கிழக்கின் விவசாயத்துறையில் மற்றொரு வாழ்வாதார வளமாக காணப்படும் பழப்பயிர்ச் செய்கையில் பல சாத்தியமான வளங்கள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையின் பழச்சந்தையில் கணிசமான ஒரு வீதத்தை  நிரம்பல் செய்யும் இவ்விருமாகாணங்களிலிருந்தும் வாழை, மா, பப்பாசி, தர்பூசணி, தேசி, தோடை, கொய்யா, மாதுளை ஆகிய பழப்பயிர்கள் முதன்மை பெறுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாண  வாழைச்செய்கை வாழைப்பழச்செய்கை பிரபல்யம் பெற்றுள்ள இலங்கையின் மாகாணங்களில் வடக்கும் கிழக்கும் பிரபல்யமானவை.  வடக்கு […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும் : வடக்கு – கிழக்கில் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி

10 நிமிட வாசிப்பு | 9724 பார்வைகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வாய்ப்பான தொழில் வளமாகக்  காணப்படும் விவசாயத்துறையில் அதிக பங்கை நிர்ணயிக்கும் நெல் மற்றும் தானியப் பயிர்களின் பங்களிப்புத் தொடர்பாக கடந்த இரு தொடர்களில் நாம் பரிசீலித்தோம். இன்று இதே துறையில் கணிசமான வாய்ப்பைக் கொண்டிருக்கும் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி தொடர்பாக ஆராய்வோம். இலங்கைத் திருநாட்டின் தேசிய நெருக்கடியாக உருப்பெற்றுள்ள பொருளாதாரப் பின்னடைவை வெற்றி கொள்வதில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் உள்நாட்டு விவசாயத்துறையில் இப்போது பல […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்: வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள்

10 நிமிட வாசிப்பு | 11752 பார்வைகள்

வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக விளங்கும் விவசாயத்துறையில் நெல் விவசாயம் பற்றிய செயல் மதிப்பீட்டை கடந்த கட்டுரையில் பார்வையிட்டோம். இம்முறை நெல் தவிர்ந்த பழப்பயிர்கள், மரக்கறிப்பயிர்கள், ஏனைய தானியப் பயிர்கள் மூலம் இவ்விருமாகாணங்களும் கொண்டுள்ள வாழ்வாதார வாய்ப்புகளையும் உணவுப்பாதுகாப்பையும் மதிப்பிடுவதாக இந்த ஆய்வானது இடம்பெறுகிறது. இதில் முதலாவதாக தானியப் பயிர்களின் உற்பத்தி தொடர்பாக நோக்கலாம். வடக்கு – கிழக்கு ஆகிய இரு […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்

6 நிமிட வாசிப்பு | 12857 பார்வைகள்

நெல் உற்பத்தியும் முதன்மைத்தன்மையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக  விவசாயத்துறை விளங்குகின்றது.  இவ்விரு மாகாணங்களினதும் பொருளாதாரத்தில் 15 சதவீதமான பங்களிப்பை விவசாயத்துறை வழங்கிவருவதுடன் 65 சதவீதமானோர் வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்கும் துறையாகவும் இது செயற்பட்டு வருகின்றது. நிலப்பாவனை என்ற வகையில்  விவசாயச் செய்கைக்காக கிழக்கு மாகாணத்தின் 42 சதவீதமான நிலப்பரப்பும், வடமாகாணத்தின் 33 சதவீதமான நிலப்பரப்பும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விரு மாகாணங்களின் பிரதான விவசாயப் பயிராக நெல்லே […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)