கந்தையா பகீரதன்

விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் ?

18 நிமிட வாசிப்பு | 11154 பார்வைகள்

அறிமுகம் இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் துறைசார் நிபுணர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களைக் கேளாமலும் நன்கு திட்டமிடப்படாமலும் 2019 ஆம் ஆண்டு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய கட்டாய சேதன விவசாயமும் அசேதன விவசாய உள்ளீடுகளுக்கான தடையுமே மிகப் பிரதானமாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சூழல்நேய விவசாயத் திட்டங்களினூடு தற்சார்பு உணவு உற்பத்தி செய்த நாடாக இருந்தும் பின்னர்  திறந்த […]

மேலும் பார்க்க

அரசியல் தலையீடும் விவசாய வீழ்ச்சியும்

13 நிமிட வாசிப்பு | 5473 பார்வைகள்

அறிமுகம் இலங்கையின் விவசாயம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியாமான பொருளாதாரத்துறை. அந்நிய சக்திகள் இலங்கையில் காலூன்றுவதற்கு முன்னர், மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களின் (இன்றைய காலத்தில் அரசியல்)  தலையீடு இலங்கை முழுவதும் உணவுப் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு விவசாயத்துறையை வளர்த்தது. ஆனால் அந்நியர் ஆட்சிக்குப் பின்னர் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசாக மாறியது முதல்  இலங்கையில் காலம் காலமாக நிகழ்ந்துவரும் அரசியல் தலையீடு நாட்டின் […]

மேலும் பார்க்க

வலுவற்ற இலங்கையின் விவசாயக் கொள்கை

10 நிமிட வாசிப்பு | 10205 பார்வைகள்

அறிமுகம் இலங்கை போன்ற இயற்கை வளங்களையும், பொருத்தப்பாடான காலநிலையையும்  செழிப்பாகக் கொண்ட ஒரு வளர்ந்துவரும் சிறிய தீவு நாட்டுக்கு விவசாயம் சமூக-பொருளாதாரத்தின் நிலைத்திருப்புக்கும், வேலைவாய்ப்பு, உணவு மற்றும் போசாக்கை வழங்குகிற ஒரு “முழுமையான” வகிபாகத்தையும் கொண்ட துறையாகும். மேலும் விவசாயத்துறை தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முதுகெலும்பாகவும்  மற்றும் நாட்டின் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்து  பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற […]

மேலும் பார்க்க

நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற உலக நாடுகள்

20 நிமிட வாசிப்பு | 21710 பார்வைகள்

அறிமுகம் விவசாயம் என்பது வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான வருமானம் ஈட்டும் தொழிலாகும் . இது வேலை, வருமானம் மற்றும் உணவு ஆகியவற்றின் முதன்மை ஆதாரமாகவும்  மனிதனின்  அடிப்படைத் தேவைகளை உலகம் முழுவதும் பூர்த்தி செய்கின்ற இயற்கையின் கொடையாகவும் திகழ்கின்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) படி, விவசாய மக்கள்தொகையின் பங்கு மொத்த மக்கள்தொகையில் 67% ஆகும். இது மொத்த உணவு  உற்பத்தியில் 39.4% மற்றும் அனைத்து […]

மேலும் பார்க்க

நவீன விவசாயத்திற்கு மாறத் தயங்கும் இலங்கை

19 நிமிட வாசிப்பு | 18122 பார்வைகள்

அறிமுகம் இலங்கை தனக்கென்று தனித்துவமான இயற்கையோடு இணைந்த விவசாயத்தை மேற்கொள்கின்ற ஒரு விவசாய நாடு. பல்லாயிரம் ஆண்டுகளாகவே எமது மூதாதையர்கள் எந்தக் காலநிலையில் என்னென்ன பயிர்கள் செழித்து வளரும், எந்த எந்தப் பயிர்களுக்கு என்ன சூழல் நிபந்தனைகள் தேவை போன்ற விடயங்களைக் கற்றதோடு, இந்த நாட்டிலே இயற்கையாகக் காணப்பட்ட தமது உணவுக்குத் தேவையான தானிய மற்றும் பழப் பயிர்களை இயற்கைநேயப் பண்ணை முறைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்து உண்டு மகிழ்ந்தனர். […]

மேலும் பார்க்க

முப்பதாண்டுப் போரும் வடக்கு – கிழக்கு விவசாயமும்

10 நிமிட வாசிப்பு | 16666 பார்வைகள்

அறிமுகம் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட பேரினவாதம் சார்பான சட்டங்களும் மற்றும் சட்டத் திருத்தங்களும், உதாரணமாக தனிச் சிங்களச் சட்டம், பெளத்தம் அரச மதமாக்கப்படல், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், இனக் கலவரங்கள், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும், மேலும் பலவும்,  தமிழ் இளைஞர்களை இலங்கை அரசிற்கு  எதிராக சத்தியாக்கிரகப்  போராட்டங்களை முன்னெடுக்க […]

மேலும் பார்க்க

நவீன விவசாயமும் உணவுப் புரட்சியும்

17 நிமிட வாசிப்பு | 19292 பார்வைகள்

அறிமுகம் கடந்த பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதாரமான உணவை, எமது விவசாயப் பெருமக்களால் அனைத்து மக்களுக்கும் வழங்க முடிந்தது. எனினும் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல் 18 ஆம் நூற்றாண்டில் மனிதப் பெருக்கத்தின் அசுர வளர்ச்சியானது மிகப் பயங்கரமான உணவுப் பஞ்சம், இடப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையான போட்டி எனப் பல விளைவுகளை ஏற்படுத்தியது. பாரம்பரிய முறைகள் […]

மேலும் பார்க்க

விவசாயப் புரட்சியும் சூழல் மாற்றமும்

15 நிமிட வாசிப்பு | 19149 பார்வைகள்

அறிமுகம் கைத்தொழில் புரட்சியின்போதே பசுமைப்புரட்சிக்கான அத்திபாரமும் இடப்பட்டது. எனினும் 17 ஆம் நூற்றாண்டில் அதாவது தொழிற்புரட்சி தோன்றுவதற்கு முன்பே விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுவிட்டது. டச்சுக்காரர்களின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மரக் கலப்பைகள், பொறிமுறை ரீதியில் இயக்கப்படும் விதை விதைக்கும் பொறிகள் மற்றும் சூடு அடிப்பதற்காக மனித, மிருக வலுக்களுமே பயன்படுத்தப்பட்டது. எனினும்  ஐரோப்பாவில்  நிலங்களைப் பண்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட புதிய விவசாயக் கருவிகளான, உருக்கு /இரும்புக் கலப்பைகள், கடப்பாரைகள், மிக வினைத்திறனாகவும் சம […]

மேலும் பார்க்க

பட்டினியும் விவசாயப் புரட்சியும்

12 நிமிட வாசிப்பு | 10309 பார்வைகள்

அறிமுகம் மனிதன் இந்தப் பூமியில் படைக்கப்பட்டதில் இருந்து சனத்தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த அதிகரிப்பானது குறைந்த வீதத்தில் இருந்தாலும், பின்னர் மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் காரணமாகவும், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாகவும் இறப்பு வீதம் குறைவடைய மனிதக் குடித்தொகையின் வளர்ச்சிப் போக்கு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 1800 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 பில்லியன் (Billion) ஆக இருந்த மனித சனத்தொகை, 123 […]

மேலும் பார்க்க

விவசாயமும் தமிழர் வாழ்வியலும்

15 நிமிட வாசிப்பு | 32240 பார்வைகள்

அறிமுகம் இந்த உலகில் வாழ்கின்ற மனித இனம் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரீகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. இதில் மூத்த இனமாக தமிழினம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதனால்தான் நாமக்கல் கவிஞர், தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு’ என்று தமிழரை அடையாளப்படுத்தினார். மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்ற வாழ்வியலையும் மற்றும் அனுபவ அறிவியலையும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)