ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் கனடாவின் பழங்குடி மக்கள் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்ற இரு நாடுகளையும் போன்றே கனடாவும், குடியேறிகள் பெரும்பான்மையினராக அமைந்த குடியேறிகள் சமூகம் (Settler Society ) ஆகும். குடியேறிகள் சமூகங்கள் உள்ள நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர் சுதேசிகளான பழங்குடியினரை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு துரத்தி விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளினர். 1763ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசுப் பிரகடனத்தில் […]
ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை இலவச பொது ஊழியம் சாதி வழமைகளை மீறக்கூடாது என்ற கடும்போக்கிற்கு உதாரணமாக திகழும் இன்னொரு பிணக்கு 1830 ஆம் ஆண்டில் எழுந்ததை சுட்டிக்காட்டலாம். மீன்பிடித்தொழில் செய்வோரில் ஒரு பிரிவினரான திமிலர் என்ற சமூகப்பிரிவினரிடம் மணியகாரர் என்னும் உயர்நிலை அதிகாரி ஒருவர் பொது வேலையை இலவச ஊழியமாக வழங்கும்படி கட்டளையிட்டார். யானைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான இறங்குதுறை அமைப்பதற்கு பனங்குற்றிகள் தேவைப்பட்டன, […]
ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் கனடாவின் சமஷ்டியின் வரலாறு ‘பிரிந்து வேறாதல்’ ‘ஒன்றாக இணைதல்’ என்ற இருவேறு செயல்முறைகளும் சமாந்தரமாகச் செயற்பட்டதொன்றாகவே இருந்துள்ளது. சமஷ்டிச் சட்டம், 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில் பின்வரும் மூன்று விடயங்கள் கூறப்பட்டுள்ளன. பெரிய பிரித்தானியாவின் முடிக்குரிய டொமினியன் நாடாக கனடா விளங்குகிறது. கனடா மாகாணம், நோவாஸ்கொட்டியா மாகாணம், நியுபிறன்ஸ்விக் மாகாணம் என்பன கனடா சமஷ்டியில் இணைவதை […]
ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் பிரஞ்சும் ஆங்கிலமும் இக்கட்டுரைத்தொடரின் முதலாவது தொடரில் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் கனடா தேசம் வெற்றி கண்டுள்ளது என மதிப்பிடப்படுகின்றது. இந்த வெற்றியின் பின்னணியில் கனடா மாதிரியின் (Canadian model) சில தனித்துவமான பண்புக்கூறுகள் அமைந்துள்ளன. 1. அது சமஷ்டியாக இணைந்துள்ள ஒரு சமூகம். 2. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், அரசியல் யாப்புவாதம் […]
ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலம் பிரடரிக் நோர்த் (1798 – 1805) முதலாவது ஆங்கிலேய ஆளுநராக இருந்தார். இவர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சாதிய ஒழுங்கமைப்பு நிர்வாகத்தின் அடிப்படையாக இருந்தது. இதனை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டது. வடஇலங்கையில் சாதித் தலைமைக்காரர் முறையை (Caste headman system) நடைமுறைப்படுத்திய பிரித்தானியர், கரையார் போன்ற சாதியினரின் தலைமைக்காரர்களாக அவ்வச் சாதிகளைச் சேர்ந்தவர்களே கடமையாற்ற […]
ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையைப் பேணுதல் என்ற விடயம் கனடாவின் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு இன்று வரை அந்தத் தேசத்தினரது கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமாக இருந்து வந்ததை ஆய்வு நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாகச் சில முக்கியமான நூல்கள் 1970 களின் பின்னர் பிரசுரிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். சர்வதேச தராதரங்களின் படியான மதிப்பீட்டில் கனடா தேசம் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் சி. அரசரத்தினம் சமூகப்பிரிவுகள், சமூகப்படி நிலையில் உயர்ச்சியடைதல் என்னும் சமூக அசைவியக்கத்திற்கான (Social Mobility) வழிகளில் வர்த்தகமும், முயற்சியாண்மையும் (Entrepreneurship) முக்கியமானவை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வர்த்தகம், அதனோடு தொடர்புடைய வட்டிக்குப் பணம் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் மரபுவழியாக ஈடுபட்டுவந்த சமூகப் பிரிவினர் மிகச் சிறிய எண்ணிக்கையினராக இருந்தனர். இதனால் இச்சிறிய வர்த்தக சமூகப்பிரிவு, வேளாளர்களுக்கு அறைகூவல் விடுக்கக்கூடியளவுக்குப் பலம் உடையதாக இருக்கவில்லை. நாம் முன்னரே […]
ஆங்கில மூலம்: பேராசிரியர் சி. அரசரத்தினம் 1674 ஆம் ஆண்டு டச்சுக்காரர் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளினதும் காணிகளின் உடைமையாளர்கள் பற்றிய பதிவினை மேற்கொண்டனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக்காணிப் பதிவு நடவடிக்கையின் பயனாக 12,000 குத்தகைக்காரர்களின் (Tenants) கணக்கை வேளாளத் தலைமைக்காரர்களால் காண்பிக்க முடியவில்லை. குத்தகைக்காரர்களின் பெயரில் தலைமைக்காரர் காணிகளைத் தமக்கு சொந்தமாக்கி பயனை அனுபவித்தனர் என்பது தெரியவந்தது. காணிப் பதிவு நடவடிக்கையினால் ஏற்பட்ட கசப்புணர்வைப் பயன்படுத்தி வேளாளத் […]
டச்சு அரசாங்கத்தின் இலங்கை ஆளுநரான யோன் சைமன்ஸ் 1704 ஆம் ஆண்டில், கரையார் சமூகப் பிரிவினரின் குறைகளைக் கேட்டறிந்தமை பற்றிக் குறிப்பிட்டோம். யோன் சைமனுக்கு அப்போது சாணார் என்ற இன்னொரு சமூகப் பிரிவினரும் தம் குறைகளை முறையீடு செய்திருந்தமை எமது கருத்தை வலுப்படுத்தும் இன்னொரு சான்றாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பழைய குடியேறிகளான வேளாளர்களுக்கு அடுத்த படிநிலையில் தாம் இருப்பதாக சாணார் கூறியிருப்பதானது சுவாரசியமான ஒரு தகவலாகும். இவர்கள் தென்னிந்தியாவின் மலபார் […]
’மேலாதிக்கச் சாதி’ என்னும் கருத்தை விளக்கும் மானிடவியல் ஆய்வுகள் பல உள்ளன. கிராமம், மாவட்டம், பிராந்தியம் என்ற மூன்று நிலைகளில் ஒரு சாதியின் மேலாதிக்கம் இருக்க முடியும். இந்த மேலாதிக்கத்தின் பண்புக் கூறுகள் சில உள்ளன என்றும் மானிடவியலாளர்கள் கூறுவர். ஒரு குறிப்பிட்ட சாதி சனத்தொகையின் பெரும்பான்மையாக இருக்கும்போது அந்தச்சாதிக்குப் பிறசாதிகளை விடப் பல சாதகமான நிலைமைகள் இருக்கும். சனத்தொகையில் பெரும்பான்மையாக இருத்தல் மூலம் மேலாதிக்கத்தை பெறுதல் நவீனத்துக்கு முந்திய […]