இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY 1750 […]
தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) 1957 ஜூன் 15 ஆம் தேதியன்று, இலங்கையின் தலைநகரான கொழும்பில் நான் பிறந்தேன். எனது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் நானே முதலாவது ஆண் குழந்தை. எனது குடும்பம் கட்டுப்பாடான வாழ்க்கையையும் கல்வி மீதான வேட்கையையும் இயல்பிலேயே கொண்டிருந்தது. விடா முயற்சியும் கடமை தவறாமையையும் என்னுடைய பாட்டனிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் குழந்தைகளுக்குக் கடத்தப்பட்டிருந்தன. ஒரு மத்தியதர வர்க்கத் […]
இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாவது அரசாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு காணப்படுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சியில் இருந்த இவ்வரசின் ஆதிக்கத்துக்குள் வடஇலங்கையும் கிழக்கிலங்கையின் சில பாகங்களும், சில சந்தர்ப்பங்களில் தென்னிலங்கையும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறு ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவ்வரசின் வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் ஒன்றாக அவ்வரசு காலத்தில் […]
காரைநகர்ச் சைவமகாசபை நூல்நிலையம் காரைநகர்ச் சைவமகாசபை பொன்விழா மலர் 1967 இல் வெளிவந்தது. இம்மலராசிரியராக வைத்தீஸ்வரக் குருக்கள் சிறப்புறப் பணியாற்றி சைவமகாசபையின் வரலாற்றை முடிந்தவரை பதிவுசெய்ய முயன்றுள்ளார். அவரது குறிப்புகளின்படி காரைநகர்ச் சைவமகாசபை 1926 ஆம் ஆண்டிலேயே 347 தமிழ்ப் புத்தகங்களும் 279 ஆங்கிலப் புத்தகங்களும் கொண்டதொரு நூலகத்தை தன்னகத்தே கொண்டிருந்துள்ளதென்ற செய்தியை அறியமுடிகின்றது. அந்த ஆண்டில் மாத்திரம் 126 புதிய புத்தகங்கள் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனவென்ற செய்தியும் காணக்கிடைக்கின்றது. 13 […]
தமிழில் : த. சிவதாசன் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பம் செழித்தோங்குவதற்கு, Yarl IT Hub எனும் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் The Yarl Geek Challenge (YGC) எனப்படும் போட்டி நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகும். இந் நிகழ்வு இலங்கை முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நூற்றுக்கணக்கான அறிவுடையோரை உருவாக்கித் தந்ததுடன் இத் துறையில் பிரபலமான பல நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள விசேடம் என்னவென்றால் YGC தனியே தமது […]
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய முறையிலான மழை வீழ்ச்சி அவதானிப்பு முறைகள் வடக்கு மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக மழை வீழ்ச்சி அவதானிப்பிற்கு என்று பல்வேறு வகைப்பட்ட உத்திகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் பல்வேறு வகையிலான கருவிகளைப் பயன்படுத்தி அவதானிப்புகளை மேற்கொண்டு இருப்பதை அறிய முடிகின்றது. அவர்கள் பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தி மழை வீழ்ச்சி அவதானிப்புகளை மேற்கொண்டு உள்ளார்கள். மரக்கால் மரக்கால் என்பது மிக […]